kodi sundar
Well-known member
அத்தியாயம் 34
"நந்துப்பா"
இப்படி சத்தமாகக் கார்த்திக் அழைத்த பின்பு தான், அவரும் ரிஷியும் இயல்புக்கு வந்தனர். என்றபோதும் நந்தா அவரையும் மீறி,
"வெற்றி"
என்று முணுமுணுத்தார்.
"என்ன நந்துப்பா, அப்பா'வ நினைச்சிட்டீங்களா?"
என்று களங்கமில்லாமல் கேட்டவனை மற்ற இருவரும் அன்புடன் பார்த்தனர்.
"அவனை மறந்தாதானே நினைக்கிறதுக்கு?"
என்ற நந்தா தன்னை மீட்டுக்கொண்டு சொன்னார்..
"இப்படி ச்சில்லுன்னு கடல்காற்று படுற மாதிரியா வெளிய உட்காருவீங்க? உள்ள போங்க"
அவர்கள் வழமையே இதுதானே. பதில் சொல்லாமல் உள்ளே சென்றனர் நண்பர்கள். மூவரும் ஹாலில் அமர, நந்தகுமார் சொன்னார்..
"நீங்க பாட்டுக்கு இங்க வந்துட்டா அங்க ரெண்டு பிள்ளைங்களும் தனியா இருப்பாங்களே?"
ரிஷிதர் சிரிக்க,
"அதெல்லாம் இருப்பா. நல்லா தூங்கிட்டு இருப்பா"
என்றான் கார்த்திக்.
எனில், அப்படித்தானா என்றால் இல்லை. கார்த்திக்கின் நினைவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் வர்ஷினி. இப்போது இரவாக இருக்க, இன்று அதிகாலையில் நடந்தது என்னவெனில்...
குளித்து முடித்து, பாவாடை ரவிக்கையுடன் வெளியே வந்தவள், சும்மாவேணும் சேலையை மேலே போட்டுக் கொண்டு கார்த்திக்கை உலுக்கி எழுப்பினாள்.
'ஏங்க டைம் ஆகுது. பள்ளிக்கூட விழாவுக்குக் கிளம்ப வேணாமா எழுந்திருங்க"
அசைந்து, குப்புற படுத்துக் கொண்டவன்,
"தினேஷ் கரெக்ட் டைம் எழுப்புவான், நீ உன் வேலையைப் பாரு" என்றான்.
"போங்களேன் எனக்கென்ன?"
என்றவள், சேலை முனையை இடுப்பில் சொருகிக் கட்ட ஆரம்பித்தாள். சரியாக தினேஷின் ஃபோன் அடித்து பாடல் கேட்டது...
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"
கார்த்திக், வர்ஷினி இருவரும் சிரித்து விட்டனர்.
"முழிச்சிட்டேன்டா பெரிய மனுஷா"
என்று தினேஷிடம் சொன்னவன், எழாமல், திரும்பிப் படுத்து மனைவி சேலை கட்டுவதைக் காலாட்டிப் பார்த்திருந்தான். இடை மறைத்து, சேலையை இழுத்து இடுப்பருகே அவள் ஊக்கு குத்துவதைப் பார்த்து,
"ஏன் கீத்து இப்படி தினம் நாலஞ்சி பின் குத்திப் புடவை கட்ட உனக்குக் கஷ்டமா இல்லையா?"
என்றான். வர்ஷினி சிரித்தாள்.
"நம்ம கேரெக்டர் என்னன்னு, பார்த்தவுடன் தீர்மானிக்கிறது முதல்ல நாம உடுத்துற உடை தான். அதுக்குக் கொஞ்சம் மெனக்கெடுறதுல தப்பு இல்ல மாமு"
"ஓஹோ"
என்று புருவம் தூக்கியவன் அவளையேப் பார்த்திருக்க, வர்ஷினிக்கு கூச்சம் வந்ததில்,
"என்ன இங்கப் பார்வை? திரும்புங்க அங்க"
என்றாள்.
"என்கிட்டயிருந்து இன்னும் எதைக் காப்பாத்திக்கப் போற கீத்து?"
என்றான்.
"ச்சே பேச்சைப்பாரு"
என்றவள் பல்லில் லேசாக கடித்துப் பிடித்திருந்த சாரிபின்னை எடுத்து, அவன் மேல் விட்டெறிந்தாள். அதையெடுத்து முத்தமிட்டு சொன்னான்..
"கொடுத்து வச்சது. உன் கூடவே இருக்கு"
"ஏன் நீங்களும் என்கூட தான இருக்கீங்க?"
எழுந்து நின்று சோம்பல் முறித்தவன்,
"ரிஷி படத்தை முடிக்க, ரெண்டு நாள் அங்க இருக்கணும் கீத்து"
அவன் சொன்னதுதான், வைத்த கொசுவத்தை, வயிற்றுக்குள் அவசரமாக சொருகியவள், இரண்டெட்டில் அவனருகே வந்து அவனை அணைத்துக் கொண்டாள். முகர்ந்தான் அவளை.
"ஏய்! கோகுல் சாண்டல் பொண்ணு, என்னாச்சு?"
"கல்யாணம் முடிஞ்சி ரெண்டு வாரத்தில இருபது நாள் வெளிய தங்குறீங்க"
"ஹாஹா. என்ன கணக்கு இது டீச்சர் மேடம்?"
"மம்ம்ம்ம்? காதல் கணக்கு"
என்றவளைத் தானும் அணைத்துக் கொண்டவன், அவளை சமாதானம் செய்யும் வகையில், அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவள் வயிற்றருகே கொசுவத்தை சேர்த்துப் பிடித்து, அந்த சாரிப்பின்னைக் குத்தினான்.
"ஸ்ஆ" என்றாள்.
"ஏய் என்ன குத்திருச்சா?"
"இல்ல"
"பின்ன?"
பதில் சொல்லாமல் கண்சிமிட்டி அவள் சிரிக்க,
"ஆஹான்?"
என்றவன், அவள் வயிற்றில் மூக்குரசி விளையாட,
"போங்க போங்க குளிச்சிட்டு வாங்க"
தோள் பிடித்துத் தள்ளி விட்டாள்.
இப்போது அதுவே கார்த்திக்கிற்கும் நினைவு வர லேசாக சிரித்துக் கொண்டவன், நந்தகுமாரைக் கேள்வியாகப் பார்த்தான். அவர் சொன்னார்...
"நாளைக்கு கடைசி நாள் ஷூட்டிங். நீங்க ரெண்டு பேரும் கவனமா இருந்துப்பீங்க'ல?"
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்"
"இல்ல கார்த்தி, நாளைக்கு நைட் கபிலன் வெளிநாடு போறான்...
என்று இழுக்க,
"தெரியும்'பா. ஆனா அவனை வெளிநாடு அனுப்பி விட்ற பிளான் எனக்கில்லை. அங்கப் போயும் அவன் சும்மா இருக்க மாட்டான். ஏதாவது செஞ்சு போலீஸ் கிட்ட மாட்டுவான். அவன் பிள்ளைக்கு தான் எந்த பாதுகாப்பும் இல்லை. அதான் அவன் மனைவிக்கு ஃபோன் பண்ணி, அவனை நாளைக்கு நேர்ல சந்திச்சி பேச சொல்லியிருக்கேன்"
"உனக்கு எதுக்கு கார்த்தி இந்த வேலை?"
என்றார் நந்தகுமார்.
"எனக்கென்ன'ன்னு இல்லாமல் நாம் செய்யும் சின்ன மெனக்கடல்கள், ஒருத்தரோட வாழ்க்கைக்கு, இன்னொரு வாய்ப்பைத் தரலாம் இல்லையா?" என்றான்.
"இதான் கார்த்தி, உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்குது"
என்று மனதில் நினைத்துக் கொண்ட ரிஷி அமைதியாகப் பார்த்திருந்தான்.
"இதனால அவன் கோபம் உன் பக்கம் தான் திரும்பும், கவனமா இரு"
என்ற நந்தா எழுந்து கொண்டார்.
சொன்ன மாதிரியே கபிலனின் மனைவி மீரா, காலையிலேயே அவன் வீட்டை வந்தடைய அடியாட்கள் அவளைத் தடுத்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த கபிலன் முகம் சுளித்தான். மனைவி வந்ததும் பிடிக்கவில்லை, அடியாட்கள் அவளை மிரட்டுவதும் பிடிக்கவில்லை அவனுக்கு. உள்ளே அழைத்து வந்து என்னவென்று கேட்டான். அதற்குள் மகன் வந்து தாயை அணைத்துக் கொள்ளக் கோபமாக வந்தது கபிலனுக்கு.
"கபி நீ எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டுப்போ"
"தாராளமா வா. ஆனா என்னை ஏன் எதுக்குன்னு எதும் கேட்கக்கூடாது"
"அதெப்படி? நாம வாழுற வாழ்க்கை ஒண்ணு தான். அதை நல்லவிதமா வாழ வேணாமா?"
"அப்போ உனக்கு என் வாழ்க்கையில இடமில்ல"
"நான் இங்கயிருந்து போக மாட்டேன்"
"போக வேணாம், இங்கேயே இரு. உன்னை நேசிச்சதுக்கு இந்த வீட்டை உனக்குத் தரேன். நீயே வச்சிக்கோ"
என்றவனை வேதனையுடன் பார்த்தாள் மீரா. அவள் கேட்பது வீடில்லை. நேர்மையாக வாழும் வாழ்க்கை என்று இவனுக்கு எப்படிப் புரிய வைக்க?
~~
இங்கே ஷூட்டிங் ஆரம்பித்தது. மிச்சமிருந்த ஸ்டண்ட் சீன் எல்லாம் முடித்து, மதிய உணவுக்குப்பின் கொஞ்சம் ஓய்வெடுத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ரிஷி, ஹீரோயினைத் தூக்கிக்கொண்டு நடக்க சுபம் போட வேண்டும் அவ்வளவே. முன்னம் ஒருநாள் சக்தி வந்ததால், ரிஷியால் நிறுத்தப்பட்ட காட்சி. எல்லோரும் அதற்குத் தயாராக கார்த்திக், போலீஸ் வேலை பார்த்திருந்தான்.
ஹீரோயின் செட்டுக்கு வர, கார்த்திக்கின் முகம் மாறியது. அப்பெண் இடை தெரிய, தொடை தெரிய, மேலெல்லாம் தெரிய நடந்து வர, ரிஷி அப்பெண்ணைத் தூக்கினால், அங்கங்கு தொட வேண்டியதிருக்கும். கார்த்திக், ரிஷியை முறைக்க,
"இந்த விஷயத்தில நான் தலையிட்டா, பெரிய விஷயமா மீடியா வரைக்கும் போகும் கார்த்தி"
என்றான் அவன்.
"அப்ப நான் கேட்குறேன்டா"
என்று கார்த்திக் சொல்ல, இவ்விருவர் மீதும் பெரும் அபிமானம் கொண்ட டைரக்டர்,
"சார் என்ன விஷயம்?"
என்று வந்தார். ஹீரோயின் உடையைக் கைகாட்டினான் கார்த்திக்.
"சார் இதெல்லாம் சகஜம். பாலிவுட்ல'லாம் இதான் போடுறாங்க"
"உங்க வீட்லப் போடுறாங்களா?"
"சா...ர்?"
"மக்கள் ரசனையை இவ்ளோ ச்சீப்பா காட்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா, ஆன்?
"...."
"கேட்டுப்பாருங்க பசங்க கிட்ட. பொண்ணுங்க சேலை, தாவணி, சுடிதார், ஜீன்ஸ் போட்டா பிடிக்கும்'னு தான் சொல்வாங்க. இப்படி உடையை எவனும் சொல்ல மாட்டான்"
"....."
"அதென்ன பொண்ணுங்க'னா இப்படி ட்ரெஸ் பண்ணனும். ஆம்பளைங்க'னா குடிக்கணும். அதான் உங்க சினிமாவா? யார் திருப்திக்கு படம் எடுக்கிறீங்க? நீங்களும் படிச்சவர் தான, ஒரு நல்லக் கதையும், நல்லப் படமும் எடுக்க முடியாதா?"
"இது இது நல்ல படம் தான் சார்"
"அப்போ எதுக்கு இப்டி ட்ரெஸ்? நிறையப் படம் நடிச்சி முன்னணில வரணும்ங்கிற அந்தப் பெண்ணோட நியாயமான ஆசையைத் தப்பா யூஸ் பண்ணிக்கிறீங்களா?
"இல்ல கார்த்திக் சார்"
"என் வைஃப் சொல்வாங்க.. நாம போடுற ட்ரெஸ் தான் நம்ம கேரெக்டர சொல்லும்'னு"
அவன் அப்படி சொன்னது தான், அந்தப்பெண் உடைமாற்ற ட்ரெஸ்ஸிங் ரூமில் நுழைந்து விட்டது. டைரக்டர் திரும்பி செல்ல, ரிஷிகார்த்திக் இருவரும் அமர்ந்து கொண்டனர். ரிஷி விளையாட்டாக கேட்டான்..
"என்னடா தங்கச்சிப் புருஷா, உன் தங்கச்சிக்காக என் கற்பைக் காப்பாத்திறியா?"
"கற்புங்கிறது பெண்ணைத் தொடறதுல இல்லடா. அவளை வச்சிக் காப்பாத்திறதில இருக்கு"
"சரிங்க மச்சான்"
அவன் முடியை செல்லமாக ஆட்டிய கார்த்திக்,
"ஷூட்டிங் முடிஞ்சவுடனே நான் கிளம்புறேன் ரிஷி. வேலையிருக்கு"
"ஆன், அதெப்படி? வர்ஷி, சக்தியை வர சொல்லியிருக்கேனே, இன்னைக்கு நம்ம வீட்ல தான் கொண்டாட்டம்"
"நீ கூத்தாடியேதான்டா ரௌடிப்பயலே"
"நந்துப்பா"
இப்படி சத்தமாகக் கார்த்திக் அழைத்த பின்பு தான், அவரும் ரிஷியும் இயல்புக்கு வந்தனர். என்றபோதும் நந்தா அவரையும் மீறி,
"வெற்றி"
என்று முணுமுணுத்தார்.
"என்ன நந்துப்பா, அப்பா'வ நினைச்சிட்டீங்களா?"
என்று களங்கமில்லாமல் கேட்டவனை மற்ற இருவரும் அன்புடன் பார்த்தனர்.
"அவனை மறந்தாதானே நினைக்கிறதுக்கு?"
என்ற நந்தா தன்னை மீட்டுக்கொண்டு சொன்னார்..
"இப்படி ச்சில்லுன்னு கடல்காற்று படுற மாதிரியா வெளிய உட்காருவீங்க? உள்ள போங்க"
அவர்கள் வழமையே இதுதானே. பதில் சொல்லாமல் உள்ளே சென்றனர் நண்பர்கள். மூவரும் ஹாலில் அமர, நந்தகுமார் சொன்னார்..
"நீங்க பாட்டுக்கு இங்க வந்துட்டா அங்க ரெண்டு பிள்ளைங்களும் தனியா இருப்பாங்களே?"
ரிஷிதர் சிரிக்க,
"அதெல்லாம் இருப்பா. நல்லா தூங்கிட்டு இருப்பா"
என்றான் கார்த்திக்.
எனில், அப்படித்தானா என்றால் இல்லை. கார்த்திக்கின் நினைவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் வர்ஷினி. இப்போது இரவாக இருக்க, இன்று அதிகாலையில் நடந்தது என்னவெனில்...
குளித்து முடித்து, பாவாடை ரவிக்கையுடன் வெளியே வந்தவள், சும்மாவேணும் சேலையை மேலே போட்டுக் கொண்டு கார்த்திக்கை உலுக்கி எழுப்பினாள்.
'ஏங்க டைம் ஆகுது. பள்ளிக்கூட விழாவுக்குக் கிளம்ப வேணாமா எழுந்திருங்க"
அசைந்து, குப்புற படுத்துக் கொண்டவன்,
"தினேஷ் கரெக்ட் டைம் எழுப்புவான், நீ உன் வேலையைப் பாரு" என்றான்.
"போங்களேன் எனக்கென்ன?"
என்றவள், சேலை முனையை இடுப்பில் சொருகிக் கட்ட ஆரம்பித்தாள். சரியாக தினேஷின் ஃபோன் அடித்து பாடல் கேட்டது...
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"
கார்த்திக், வர்ஷினி இருவரும் சிரித்து விட்டனர்.
"முழிச்சிட்டேன்டா பெரிய மனுஷா"
என்று தினேஷிடம் சொன்னவன், எழாமல், திரும்பிப் படுத்து மனைவி சேலை கட்டுவதைக் காலாட்டிப் பார்த்திருந்தான். இடை மறைத்து, சேலையை இழுத்து இடுப்பருகே அவள் ஊக்கு குத்துவதைப் பார்த்து,
"ஏன் கீத்து இப்படி தினம் நாலஞ்சி பின் குத்திப் புடவை கட்ட உனக்குக் கஷ்டமா இல்லையா?"
என்றான். வர்ஷினி சிரித்தாள்.
"நம்ம கேரெக்டர் என்னன்னு, பார்த்தவுடன் தீர்மானிக்கிறது முதல்ல நாம உடுத்துற உடை தான். அதுக்குக் கொஞ்சம் மெனக்கெடுறதுல தப்பு இல்ல மாமு"
"ஓஹோ"
என்று புருவம் தூக்கியவன் அவளையேப் பார்த்திருக்க, வர்ஷினிக்கு கூச்சம் வந்ததில்,
"என்ன இங்கப் பார்வை? திரும்புங்க அங்க"
என்றாள்.
"என்கிட்டயிருந்து இன்னும் எதைக் காப்பாத்திக்கப் போற கீத்து?"
என்றான்.
"ச்சே பேச்சைப்பாரு"
என்றவள் பல்லில் லேசாக கடித்துப் பிடித்திருந்த சாரிபின்னை எடுத்து, அவன் மேல் விட்டெறிந்தாள். அதையெடுத்து முத்தமிட்டு சொன்னான்..
"கொடுத்து வச்சது. உன் கூடவே இருக்கு"
"ஏன் நீங்களும் என்கூட தான இருக்கீங்க?"
எழுந்து நின்று சோம்பல் முறித்தவன்,
"ரிஷி படத்தை முடிக்க, ரெண்டு நாள் அங்க இருக்கணும் கீத்து"
அவன் சொன்னதுதான், வைத்த கொசுவத்தை, வயிற்றுக்குள் அவசரமாக சொருகியவள், இரண்டெட்டில் அவனருகே வந்து அவனை அணைத்துக் கொண்டாள். முகர்ந்தான் அவளை.
"ஏய்! கோகுல் சாண்டல் பொண்ணு, என்னாச்சு?"
"கல்யாணம் முடிஞ்சி ரெண்டு வாரத்தில இருபது நாள் வெளிய தங்குறீங்க"
"ஹாஹா. என்ன கணக்கு இது டீச்சர் மேடம்?"
"மம்ம்ம்ம்? காதல் கணக்கு"
என்றவளைத் தானும் அணைத்துக் கொண்டவன், அவளை சமாதானம் செய்யும் வகையில், அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவள் வயிற்றருகே கொசுவத்தை சேர்த்துப் பிடித்து, அந்த சாரிப்பின்னைக் குத்தினான்.
"ஸ்ஆ" என்றாள்.
"ஏய் என்ன குத்திருச்சா?"
"இல்ல"
"பின்ன?"
பதில் சொல்லாமல் கண்சிமிட்டி அவள் சிரிக்க,
"ஆஹான்?"
என்றவன், அவள் வயிற்றில் மூக்குரசி விளையாட,
"போங்க போங்க குளிச்சிட்டு வாங்க"
தோள் பிடித்துத் தள்ளி விட்டாள்.
இப்போது அதுவே கார்த்திக்கிற்கும் நினைவு வர லேசாக சிரித்துக் கொண்டவன், நந்தகுமாரைக் கேள்வியாகப் பார்த்தான். அவர் சொன்னார்...
"நாளைக்கு கடைசி நாள் ஷூட்டிங். நீங்க ரெண்டு பேரும் கவனமா இருந்துப்பீங்க'ல?"
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்"
"இல்ல கார்த்தி, நாளைக்கு நைட் கபிலன் வெளிநாடு போறான்...
என்று இழுக்க,
"தெரியும்'பா. ஆனா அவனை வெளிநாடு அனுப்பி விட்ற பிளான் எனக்கில்லை. அங்கப் போயும் அவன் சும்மா இருக்க மாட்டான். ஏதாவது செஞ்சு போலீஸ் கிட்ட மாட்டுவான். அவன் பிள்ளைக்கு தான் எந்த பாதுகாப்பும் இல்லை. அதான் அவன் மனைவிக்கு ஃபோன் பண்ணி, அவனை நாளைக்கு நேர்ல சந்திச்சி பேச சொல்லியிருக்கேன்"
"உனக்கு எதுக்கு கார்த்தி இந்த வேலை?"
என்றார் நந்தகுமார்.
"எனக்கென்ன'ன்னு இல்லாமல் நாம் செய்யும் சின்ன மெனக்கடல்கள், ஒருத்தரோட வாழ்க்கைக்கு, இன்னொரு வாய்ப்பைத் தரலாம் இல்லையா?" என்றான்.
"இதான் கார்த்தி, உன்னை எனக்கு அவ்ளோ பிடிக்குது"
என்று மனதில் நினைத்துக் கொண்ட ரிஷி அமைதியாகப் பார்த்திருந்தான்.
"இதனால அவன் கோபம் உன் பக்கம் தான் திரும்பும், கவனமா இரு"
என்ற நந்தா எழுந்து கொண்டார்.
சொன்ன மாதிரியே கபிலனின் மனைவி மீரா, காலையிலேயே அவன் வீட்டை வந்தடைய அடியாட்கள் அவளைத் தடுத்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த கபிலன் முகம் சுளித்தான். மனைவி வந்ததும் பிடிக்கவில்லை, அடியாட்கள் அவளை மிரட்டுவதும் பிடிக்கவில்லை அவனுக்கு. உள்ளே அழைத்து வந்து என்னவென்று கேட்டான். அதற்குள் மகன் வந்து தாயை அணைத்துக் கொள்ளக் கோபமாக வந்தது கபிலனுக்கு.
"கபி நீ எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டுப்போ"
"தாராளமா வா. ஆனா என்னை ஏன் எதுக்குன்னு எதும் கேட்கக்கூடாது"
"அதெப்படி? நாம வாழுற வாழ்க்கை ஒண்ணு தான். அதை நல்லவிதமா வாழ வேணாமா?"
"அப்போ உனக்கு என் வாழ்க்கையில இடமில்ல"
"நான் இங்கயிருந்து போக மாட்டேன்"
"போக வேணாம், இங்கேயே இரு. உன்னை நேசிச்சதுக்கு இந்த வீட்டை உனக்குத் தரேன். நீயே வச்சிக்கோ"
என்றவனை வேதனையுடன் பார்த்தாள் மீரா. அவள் கேட்பது வீடில்லை. நேர்மையாக வாழும் வாழ்க்கை என்று இவனுக்கு எப்படிப் புரிய வைக்க?
~~
இங்கே ஷூட்டிங் ஆரம்பித்தது. மிச்சமிருந்த ஸ்டண்ட் சீன் எல்லாம் முடித்து, மதிய உணவுக்குப்பின் கொஞ்சம் ஓய்வெடுத்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ரிஷி, ஹீரோயினைத் தூக்கிக்கொண்டு நடக்க சுபம் போட வேண்டும் அவ்வளவே. முன்னம் ஒருநாள் சக்தி வந்ததால், ரிஷியால் நிறுத்தப்பட்ட காட்சி. எல்லோரும் அதற்குத் தயாராக கார்த்திக், போலீஸ் வேலை பார்த்திருந்தான்.
ஹீரோயின் செட்டுக்கு வர, கார்த்திக்கின் முகம் மாறியது. அப்பெண் இடை தெரிய, தொடை தெரிய, மேலெல்லாம் தெரிய நடந்து வர, ரிஷி அப்பெண்ணைத் தூக்கினால், அங்கங்கு தொட வேண்டியதிருக்கும். கார்த்திக், ரிஷியை முறைக்க,
"இந்த விஷயத்தில நான் தலையிட்டா, பெரிய விஷயமா மீடியா வரைக்கும் போகும் கார்த்தி"
என்றான் அவன்.
"அப்ப நான் கேட்குறேன்டா"
என்று கார்த்திக் சொல்ல, இவ்விருவர் மீதும் பெரும் அபிமானம் கொண்ட டைரக்டர்,
"சார் என்ன விஷயம்?"
என்று வந்தார். ஹீரோயின் உடையைக் கைகாட்டினான் கார்த்திக்.
"சார் இதெல்லாம் சகஜம். பாலிவுட்ல'லாம் இதான் போடுறாங்க"
"உங்க வீட்லப் போடுறாங்களா?"
"சா...ர்?"
"மக்கள் ரசனையை இவ்ளோ ச்சீப்பா காட்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா, ஆன்?
"...."
"கேட்டுப்பாருங்க பசங்க கிட்ட. பொண்ணுங்க சேலை, தாவணி, சுடிதார், ஜீன்ஸ் போட்டா பிடிக்கும்'னு தான் சொல்வாங்க. இப்படி உடையை எவனும் சொல்ல மாட்டான்"
"....."
"அதென்ன பொண்ணுங்க'னா இப்படி ட்ரெஸ் பண்ணனும். ஆம்பளைங்க'னா குடிக்கணும். அதான் உங்க சினிமாவா? யார் திருப்திக்கு படம் எடுக்கிறீங்க? நீங்களும் படிச்சவர் தான, ஒரு நல்லக் கதையும், நல்லப் படமும் எடுக்க முடியாதா?"
"இது இது நல்ல படம் தான் சார்"
"அப்போ எதுக்கு இப்டி ட்ரெஸ்? நிறையப் படம் நடிச்சி முன்னணில வரணும்ங்கிற அந்தப் பெண்ணோட நியாயமான ஆசையைத் தப்பா யூஸ் பண்ணிக்கிறீங்களா?
"இல்ல கார்த்திக் சார்"
"என் வைஃப் சொல்வாங்க.. நாம போடுற ட்ரெஸ் தான் நம்ம கேரெக்டர சொல்லும்'னு"
அவன் அப்படி சொன்னது தான், அந்தப்பெண் உடைமாற்ற ட்ரெஸ்ஸிங் ரூமில் நுழைந்து விட்டது. டைரக்டர் திரும்பி செல்ல, ரிஷிகார்த்திக் இருவரும் அமர்ந்து கொண்டனர். ரிஷி விளையாட்டாக கேட்டான்..
"என்னடா தங்கச்சிப் புருஷா, உன் தங்கச்சிக்காக என் கற்பைக் காப்பாத்திறியா?"
"கற்புங்கிறது பெண்ணைத் தொடறதுல இல்லடா. அவளை வச்சிக் காப்பாத்திறதில இருக்கு"
"சரிங்க மச்சான்"
அவன் முடியை செல்லமாக ஆட்டிய கார்த்திக்,
"ஷூட்டிங் முடிஞ்சவுடனே நான் கிளம்புறேன் ரிஷி. வேலையிருக்கு"
"ஆன், அதெப்படி? வர்ஷி, சக்தியை வர சொல்லியிருக்கேனே, இன்னைக்கு நம்ம வீட்ல தான் கொண்டாட்டம்"
"நீ கூத்தாடியேதான்டா ரௌடிப்பயலே"