kodi sundar
Well-known member
அத்தியாயம் 35
கார்த்திக்கின் பிடியில் நடந்து கொண்டிருந்த வர்ஷினி, அவன் உள்ளங்கையை நெருடினாள். அவன் திரும்பிப் பார்த்து, முகமசைத்து என்னவென்று கேட்டான். கடற்கரையை காட்டி,
"வாங்க, அலையிலக் கொஞ்ச நேரம் நிப்போம்"
என்றாள்.
அவன் சம்மதிக்க, இருவரும் சென்றார்கள். கார்த்திக் கரையிலே நின்றுவிட, வர்ஷினி கடலை நோக்கி ஓடினாள். ஒவ்வொரு அலைக்கும் சந்தோஷமாகக் கூவி அலைகளைப் போலவே ஆர்ப்பரித்தவள், கொஞ்ச நேரம் செல்ல, கார்த்திக்கையும் அழைக்க எண்ணி திருப்பிப் பார்த்தாள். அவன் கைகளைக் கட்டிக்கொண்டு, கடலுக்குள் மூழ்கும் சூரியனை அமைதியாகப் பார்த்திருந்தான்.
வர்ஷினியும், அவனையேப் பார்த்து நின்று விட்டாள். அவளின் கற்பனை சிறகடித்துப் பறந்தது. உண்மையில், இவன் ராஜ உடையில் எப்படியிருப்பான்? எத்தனை யோசித்தும் அவள் கண்ணுக்குள் வந்தது காவல் உடை அணிந்த கார்த்திக் மட்டுமே. கண்களைத் தட்டி முழித்தவள், அவனைப் பார்க்க, வெள்ளை சட்டையில் இருந்தான். முறைத்தாள் அவனை.
அந்த நேரம் அவளைப் பார்த்தவன், கேட்டான்..
"ஏய்! என்ன?"
"என்னது என்ன, உங்க யூனிஃபார்ம் எங்க?" அதட்டினாள்.
"அடேங்கப்பா அதட்ற?"
"ஆமா அதட்றேன்"
"எங்க, கிட்ட வந்து அதட்டுப் பார்ப்போம்"
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, பார்த்துக் கொண்டிருக்குமா அலைகள்? வர்ஷினியை கடலுக்குள் இழுக்க,
"அச்சோ கார்த்தி'பா"
என்று கத்தினாள். ஓரெட்டில் முன்னே வந்து அவளைப் பிடித்துக் கொண்டான். அவன் முழங்கையில், தன் இருகைகளையும், கோர்த்துக்கொண்டு, அவனை நெருக்கி நின்று கொண்டாள். கேட்டான்..
"அதென்னடி கார்த்தி'பா?"
"அது காதல், பாசம், உரிமை... எல்லாம்"
கார்த்திக் சிரித்தான்.
கேட்டாள்...
"கூப்பிட்டுக்கவா?"
"உனக்கு இல்லாமலா கீத்து?"
என்றான் இதமாக. இன்னும் வேறு காரணம் இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டான்.
பின்னர், இருவரும் மணலில் அமர்ந்தனர். இப்போது நிலவு தன்னைக் காட்டிக்கொண்டு ஒளிர்ந்தது. இருவரும் மௌனமாக அதை ரசித்தனர். எப்போதும் நமக்குள் எழும் அதேக் கேள்வி தான். இதோ இவனும் கேட்டான்...
"ஏன் கீத்து நிலவு ஆணா, பெண்ணா?"
"ரெண்டும் தான்"
"அதெப்படி?"
"அது ஒரு கதை"
கதை என்றவுடன் கார்த்திக் சிரித்தான். அவள் சிணுங்க,
"சொல்லு கீத்து கேட்போம்"
என்றான் குமிழும் சிரிப்புடன்.
சொன்னாள்..
"சந்திரனுக்கு அஸ்வினி முதல் ரேவதி வரை இருபத்து ஏழு மனைவிகள். எல்லார் கிட்டயும் ரொம்ப அன்பா இருந்தானாம். ஆனா கடைசி மனைவி ரேவதி மேல மட்டும் அவனுக்கு மிகுந்த காதலாம். அவகூட அதிக நேரம் இருப்பானாம். இதனால மற்ற மனைவிங்களுக்கு அவன் மேல கோபமாம்"
"ஓஹோ"
"அவன் கிட்ட சண்டை போட்டாங்களாம். அவனுக்குத் தன் தவறு புரிஞ்சாலும், ரேவதி மேல உள்ளக் காதலைக் கட்டுப் படுத்தவே முடியலையாம். திரும்பத் திரும்ப அவகிட்ட தான் போனானாம்"
"...."
"கோபம் தாங்காம அவனுடைய மூத்த மனைவி சாபமிட்டாளாம்...
"பெண்களோட மனசைப் புரிஞ்சிக்காத நீ பெண்ணாய்க் கடவது"ன்னு.
அதை ஏற்றுக் கிட்ட சந்திரன் சொன்னானாம்...
"என் காதலை மறைக்க முடியாம தான் உங்க சாபத்துக்கு நான் ஆளாகிட்டேன். இனி நான் உலகத்தில் உள்ள எல்லாக் காதலுக்கும் சாட்சியா இருப்பேன்"னு. இதான் சந்திரன் ஆணும் பெண்ணுமான கதை"
என்று கூறி முடிக்க, கார்த்திக், அடக்கி வைத்த சிரிப்பை, மொத்தமாகக் கொட்ட வர்ஷினி அவனை முறைக்க கார்த்திக் சொன்னான்..
"உன்னை மாதிரி அறிவாளியைக் கட்டலனா என் வாழ்க்கை என்னாகியிருக்கும் கீத்து?"
வர்ஷினி அவனை அடிக்க, அவள் கைகளைப் பிடித்து, தன் கைக்குள் வைத்துக் கொண்டான் கார்த்திக்.
"ரொம்பக் கிண்டல் பண்றீங்க. நான் ஒரு டீச்சர். நியாபகம் வச்சிக்கோங்க"
"ஹாஹாஹா. நான் டீச்சர்'னு சொன்னா மட்டும் திட்டுவ?"
"ஆன், நான் சொல்வேன். நீங்க சொல்லக்கூடாது"
இவர்கள் இங்கு இப்படி செல்ல சண்டைகள் செய்ய, அங்கே ரிஷி, சிபிதாஸ் படத்தின் கடைசி காட்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு சக்தியிடம் வந்தான். அவன் வந்தது கூட தெரியாமல், அவள் குனிந்து அமர்ந்திருந்தாள். கூப்பிட்டான்..
"சகி"
நிமிர்ந்து பார்த்தவள்,
"சிபு எல்லாம் முடிஞ்சுதா?"
"நீ பார்க்கலயா சகி"
"இல்ல சிபு. என்னால முடியல"
அத்தனை ஜாலியாக கட்டைவிரல் உயர்த்தி, சம்மதம் சொன்னவளின் இப்போதையத் தவிப்பு புரிய, மனைவியை அணைத்துக் கொண்டான் ரிஷி.
"உன்னைக் கஷ்டப்படுத்தி நான் நடிக்கணும்'னு இல்ல சகி. நீ சொல்லு எல்லாம் நிறுத்திடறேன். நானும் அப்பா மாதிரியே ப்ரொடியூசர் ஆகிடறேன்"
சக்தி சிரித்தாள்.
"இப்படி ஈஸியா பெரிய முடிவை எடுக்க உன்னால தான் முடியும் சிபு. ஆனா வேணாம். இதெல்லாம் எனக்குப் புதுசு தான? இந்த மாதிரி சீன் மட்டும் நான் பார்க்கல. சரியா? உன் அழகுக்கு நீ என்னைக்கும் ஹீரோ மட்டும் தான்"
"அப்போ நான் ஹீரோயினை..
என்று அவன் இழுக்க, அவன் வாயைப் பொத்தி,
"மூச்"
என்றாள்.
என்றவளை தோளில் கைபோட்டு வெளியே அழைத்து வந்தான் ரிஷி. தூரத்தில் கார்த்திக், வர்ஷினி தெரிய இருவரும் அங்கே சென்றார்கள். வர்ஷினி சும்மாவேணும் உம்மென்று இருக்க, கார்த்திக் இன்னமும் அவளை சீண்டிக் கொண்டிருந்தான்.
"டேய்! என்னடா?"
என்றான் ரிஷி கோபமாக.
கார்த்திக் சொன்னான்..
"அதுவா? கீத்து ஒரு கதை சொன்னா...
என்று அவன் இழுக்க,
"என்ன கதை?"
என்றனர் இருவரும் ஆர்வமாக. கார்த்திக் சொல்லத் தொடங்க, ரிஷி தடுத்து,
"வர்ஷி நீ சொல்லு"
என்றான்.
அவளும் சொன்னாள். அவள் சொல்ல, சொல்ல ரிஷியும், சக்தியும் நிலவையேப் பார்த்திருந்தனர்.
உண்மை தானே, காதலை சண்டையிட்டுப் பெற்றுக் கொள்ள முடியாது. ஏன் எதற்கு எப்படி வந்தது என்று சொல்லவும் முடியாது. இவ் அலைகளைப் போல், வீசும் காற்றைப்போல் கட்டுப்படுத்த முடியாத உணர்வு அது. அதற்கு இந்த நிலவே சாட்சி.
~~
அடுத்தநாள், வர்ஷினிக்கு விடுமுறையிருக்க, கார்த்திக்கும் வீட்டில் இருந்து கொண்டான். காலையில் நந்தகுமார், செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்க, தினேஷும், இவனும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"ப்ரோ, உனக்கு நியாபகம் இருக்கா? வர்ஷினி சாரி அண்ணி, முதமுறை நம்ம வீட்டுக்கு வந்தப்ப நான்தானே அவங்கள உனக்கு ஜோடின்னு சொன்னேன்"
"ம்ம்ம், ஆமாடா. ரிஷியை சந்திக்கிப்போறத கூட சொல்லிட்டியே. அதெப்படிடா தினேஷ், என் லைஃப்ல நடக்கிறத நீ முன்னமே சொல்லிட்ற?"
தினேஷ் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.
"சரி சொல்லு, இன்னைக்கு என்ன நடக்கும்?"
"வேறென்ன அண்ணா? அப்பா சென்டிமென்ட் தான்"
என்றவன், நந்தாவைக் காட்ட, அவரும் செ.தாளை மடித்து விட்டு நிமிர இருவரும் சிரித்தனர். சென்டிமென்ட்டுக்குத் தயாராகி, நிமிர்ந்து அமர்ந்தனர்.
நந்தா அழைத்தார்..
"கார்த்தி, கபிலன் எப்படி இருக்கான். கேட்டியா?"
"அவன் ஒழுங்கா இருந்துதான ஆகணும்? அவன் பையன் தான் ஜாலியா வயலை சுத்தி விளையாடுறானாம்"
"கூட, நம்ம சைட் ஆள் யார் இருக்கா?"
"எத்திராஜை அனுப்பி இருக்கேன்"
"அவரா?"
நந்தகுமார் யோசனையுடன் கேட்க, தினேஷின் முகம் சுண்டியது.
"அவருக்கென்ன நந்துப்பா? பஷருக்கு அடுத்து எனக்கு நம்பிக்கையான ஆள் இப்போ அவர் தான்"
என்றவன், தினேஷ் அறியாமல், நந்தகுமாரிடம் கண்காட்டினான். புரிந்து கொண்டவர்,
"ம்ம்ம் மாறிதான ஆகணும்? நம்ம வீட்டுக்கு சம்மந்தி ஆகப் போறவராச்சே"
என்க, தினேஷ் முகத்தில் மலர்ச்சி.
"அப்பா"
என்று சந்தோஷத்தில் கத்தினான்.
"படவா, போலீஸ் வீட்டுப் பெண்ணயே சைட்டடிச்சிருக்க. உன்ன லாத்தியால ரெண்டு போட்டா என்ன?"
"ஹாஹாஹா, நந்துப்பா"
என்றான். நந்தகுமார் அவனை அன்புடன் பார்க்க,
"அப்பா சென்டிமென்ட் இன்னைக்கு உனக்குதான்டா"
என்றான் கார்த்திக் மெதுவாக.
"இரு ப்ரோ இன்னும் டைமிருக்கு"
என்றான் தினேஷ்.
மங்கையும், வர்ஷினியும் காலை உணவை சாப்பாட்டு மேஜையில் கொண்டு வந்து வைத்தனர். மங்கை அழைக்க மூவரும் சென்று அமர்ந்தனர். இட்லியைப் பிட்டவருக்கு, சக்தியின் நினைவு வர, நந்தா சொன்னார்...
"சக்தி இருந்தா, நந்துப்பா எனக்குன்னு கேட்பா" என்றார்.
உடனே வர்ஷினியும், தினேஷும் ஒன்றுபோல சொல்லினர்..
"நந்துப்பா எனக்கு?"
நந்தாவும், மங்கையும் சிரிக்க, கார்த்திக் அமைதியாக இருந்தான். நந்தா அந்த இட்லித் துண்டை அவன் வாயில் வைத்தார்.
"நாங்கக் கேட்டா அவருக்குத் தரீங்க?"
வர்ஷினி சண்டைக்கு வர,
"அதான?"
என்றான் தினேஷ்.
"கேட்காத பிள்ளைக்குத் தான் ஏக்கம் இருக்கும்"
என்று விட்டார் நந்தா.
அடுத்த நொடி, மங்கை, வர்ஷினி, தினேஷ்.. கார்த்திக்கைப் பார்க்க, அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல் குனிந்து சாப்பிட ஆரம்பித்தான்.
சாப்பிடுவது நோக்கமில்லை. வெறும் பாவனை. அன்புடன் அழைத்தார் நந்தா..
"கார்த்தி"
"சொல்லுங்க"
என்றான் நிமிராமல்.
உண்மை சொல்ல வேணுமெனில், கார்த்திக்கின் பலம் வர்ஷினியும், ரிஷியும் என்றால் பலவீனம் என்றென்றும் நந்தகுமார் தான். அவர் அவனையேப் புன்சிரிப்புடன் பார்த்திருக்க, சட்டென்று எழுந்துக் கைகழுவ சென்று விட்டான். பின்னால் ஓடினான் தினேஷ்.
"ப்ரோ, பார்த்தியா? அப்பா சென்டிமென்ட் எப்பவும் உனக்கு தான்"
"போடா"
என்றான் செல்லமாக.
சற்று நிமிடத்தில், கார்த்திக்கும், வர்ஷினியும் தங்களின் அறைக்குள் சந்தித்தபோது, வர்ஷினி அவனைக் குறுகுறுவெனக் குறும்பாகப் பார்த்தாள்.
"ஏய் என்ன?"
"ஒண்ணுமில்லயே"
"அப்போ இதென்னப் பார்வை, ஆன்? என் தம்பி அழகா அப்பா சென்டிமென்ட்'னு சொல்றான். உனக்கு மட்டும் கிண்டலா இருக்கா, எப்பவும் இதே மாதிரி பண்ற. மவள உன்ன?"
என்றவன், அவள் அருகே செல்ல, வர்ஷினி விலகி ஓட, எட்டி அவள் சுடிதார் துப்பட்டாவை பிடித்து விட்டான்.
"அச்சோ, இது சேலை இல்ல, கிழிஞ்சிடும். விடுங்க" என்றாள்.
"முடியாது. நீ சொன்னா தான் விடுவேன்"
"அது... நீங்க மாமா கூட பேசிட்டு வரும்போது'லாம் உணர்ச்சி வசப்பட்டு இருப்பீங்க. உங்களை இயல்பாக்க தான் இப்படி பண்றேன்"
"அடேங்கப்பா! உனக்கு எவ்ளோ அறிவுடி தங்கம். உன்னப் பெத்து வளர்த்த மகராசனை நான் பார்க்காம போய்ட்டேனே?"
அவன் அப்படி சொன்னதுதான், தந்தையின் நினைவில், அவள் கண்கள் இருண்டு கண்ணீர் வரத் தொடங்கியது. இருபத்து மூன்று வயது பெண்ணான அவளுக்கு மட்டும் தந்தைப்பாசம் இருக்காதா என்ன?
"ஹேய் அம்மு"
என்று அருகில் சென்று அணைத்துக் கொண்டான். எவ்வளவுத் தட்டிக் கொடுத்து தேற்றியும் அவள் கண்ணீர் நிற்கவில்லை. கார்த்தி'பா என்று அவள் அழைத்தக் காரணம் இப்போது புரிந்தது அவனுக்கு. குனிந்து காதில் சொன்னான்..
"கீத்து, கார்த்தி'பா சொல்லு"
சொல்லவில்லை அவள். எனவே அவன் பாடினான்..
"நான் தாயுமானவன், தந்தையானவன், அன்புச் சேவகன், அருமை நாயகன்"
அக்குரலும், குரலிலிருந்த உண்மையும் அவளை வருட,
"கார்த்தி'பா"
என்று அவனின் இடுப்பைக் கட்டிக்கொண்டாள் வர்ஷினி. இதமாக சொன்னான்..
"அழாத பொண்ணு, மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு. அதுக்கு பதில் என்னை நாலு அடி அடிச்சிடு"
"ம்ம்ம்ம்"
"என்ன ம்ம்ம்?"
"நாலு அடி அடிக்கிறேன்"
"என்ன, அடிப்பியா?"
"சொன்னீங்க தான?"
"அட, என்ன வளர்த்து வச்சிருக்கார் உன் அப்பா, ஆன்?
இம்முறை வர்ஷினி சிரிக்க, அவனுக்கு நிம்....மதி.
~~
கார்த்திக்கின் பிடியில் நடந்து கொண்டிருந்த வர்ஷினி, அவன் உள்ளங்கையை நெருடினாள். அவன் திரும்பிப் பார்த்து, முகமசைத்து என்னவென்று கேட்டான். கடற்கரையை காட்டி,
"வாங்க, அலையிலக் கொஞ்ச நேரம் நிப்போம்"
என்றாள்.
அவன் சம்மதிக்க, இருவரும் சென்றார்கள். கார்த்திக் கரையிலே நின்றுவிட, வர்ஷினி கடலை நோக்கி ஓடினாள். ஒவ்வொரு அலைக்கும் சந்தோஷமாகக் கூவி அலைகளைப் போலவே ஆர்ப்பரித்தவள், கொஞ்ச நேரம் செல்ல, கார்த்திக்கையும் அழைக்க எண்ணி திருப்பிப் பார்த்தாள். அவன் கைகளைக் கட்டிக்கொண்டு, கடலுக்குள் மூழ்கும் சூரியனை அமைதியாகப் பார்த்திருந்தான்.
வர்ஷினியும், அவனையேப் பார்த்து நின்று விட்டாள். அவளின் கற்பனை சிறகடித்துப் பறந்தது. உண்மையில், இவன் ராஜ உடையில் எப்படியிருப்பான்? எத்தனை யோசித்தும் அவள் கண்ணுக்குள் வந்தது காவல் உடை அணிந்த கார்த்திக் மட்டுமே. கண்களைத் தட்டி முழித்தவள், அவனைப் பார்க்க, வெள்ளை சட்டையில் இருந்தான். முறைத்தாள் அவனை.
அந்த நேரம் அவளைப் பார்த்தவன், கேட்டான்..
"ஏய்! என்ன?"
"என்னது என்ன, உங்க யூனிஃபார்ம் எங்க?" அதட்டினாள்.
"அடேங்கப்பா அதட்ற?"
"ஆமா அதட்றேன்"
"எங்க, கிட்ட வந்து அதட்டுப் பார்ப்போம்"
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, பார்த்துக் கொண்டிருக்குமா அலைகள்? வர்ஷினியை கடலுக்குள் இழுக்க,
"அச்சோ கார்த்தி'பா"
என்று கத்தினாள். ஓரெட்டில் முன்னே வந்து அவளைப் பிடித்துக் கொண்டான். அவன் முழங்கையில், தன் இருகைகளையும், கோர்த்துக்கொண்டு, அவனை நெருக்கி நின்று கொண்டாள். கேட்டான்..
"அதென்னடி கார்த்தி'பா?"
"அது காதல், பாசம், உரிமை... எல்லாம்"
கார்த்திக் சிரித்தான்.
கேட்டாள்...
"கூப்பிட்டுக்கவா?"
"உனக்கு இல்லாமலா கீத்து?"
என்றான் இதமாக. இன்னும் வேறு காரணம் இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டான்.
பின்னர், இருவரும் மணலில் அமர்ந்தனர். இப்போது நிலவு தன்னைக் காட்டிக்கொண்டு ஒளிர்ந்தது. இருவரும் மௌனமாக அதை ரசித்தனர். எப்போதும் நமக்குள் எழும் அதேக் கேள்வி தான். இதோ இவனும் கேட்டான்...
"ஏன் கீத்து நிலவு ஆணா, பெண்ணா?"
"ரெண்டும் தான்"
"அதெப்படி?"
"அது ஒரு கதை"
கதை என்றவுடன் கார்த்திக் சிரித்தான். அவள் சிணுங்க,
"சொல்லு கீத்து கேட்போம்"
என்றான் குமிழும் சிரிப்புடன்.
சொன்னாள்..
"சந்திரனுக்கு அஸ்வினி முதல் ரேவதி வரை இருபத்து ஏழு மனைவிகள். எல்லார் கிட்டயும் ரொம்ப அன்பா இருந்தானாம். ஆனா கடைசி மனைவி ரேவதி மேல மட்டும் அவனுக்கு மிகுந்த காதலாம். அவகூட அதிக நேரம் இருப்பானாம். இதனால மற்ற மனைவிங்களுக்கு அவன் மேல கோபமாம்"
"ஓஹோ"
"அவன் கிட்ட சண்டை போட்டாங்களாம். அவனுக்குத் தன் தவறு புரிஞ்சாலும், ரேவதி மேல உள்ளக் காதலைக் கட்டுப் படுத்தவே முடியலையாம். திரும்பத் திரும்ப அவகிட்ட தான் போனானாம்"
"...."
"கோபம் தாங்காம அவனுடைய மூத்த மனைவி சாபமிட்டாளாம்...
"பெண்களோட மனசைப் புரிஞ்சிக்காத நீ பெண்ணாய்க் கடவது"ன்னு.
அதை ஏற்றுக் கிட்ட சந்திரன் சொன்னானாம்...
"என் காதலை மறைக்க முடியாம தான் உங்க சாபத்துக்கு நான் ஆளாகிட்டேன். இனி நான் உலகத்தில் உள்ள எல்லாக் காதலுக்கும் சாட்சியா இருப்பேன்"னு. இதான் சந்திரன் ஆணும் பெண்ணுமான கதை"
என்று கூறி முடிக்க, கார்த்திக், அடக்கி வைத்த சிரிப்பை, மொத்தமாகக் கொட்ட வர்ஷினி அவனை முறைக்க கார்த்திக் சொன்னான்..
"உன்னை மாதிரி அறிவாளியைக் கட்டலனா என் வாழ்க்கை என்னாகியிருக்கும் கீத்து?"
வர்ஷினி அவனை அடிக்க, அவள் கைகளைப் பிடித்து, தன் கைக்குள் வைத்துக் கொண்டான் கார்த்திக்.
"ரொம்பக் கிண்டல் பண்றீங்க. நான் ஒரு டீச்சர். நியாபகம் வச்சிக்கோங்க"
"ஹாஹாஹா. நான் டீச்சர்'னு சொன்னா மட்டும் திட்டுவ?"
"ஆன், நான் சொல்வேன். நீங்க சொல்லக்கூடாது"
இவர்கள் இங்கு இப்படி செல்ல சண்டைகள் செய்ய, அங்கே ரிஷி, சிபிதாஸ் படத்தின் கடைசி காட்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு சக்தியிடம் வந்தான். அவன் வந்தது கூட தெரியாமல், அவள் குனிந்து அமர்ந்திருந்தாள். கூப்பிட்டான்..
"சகி"
நிமிர்ந்து பார்த்தவள்,
"சிபு எல்லாம் முடிஞ்சுதா?"
"நீ பார்க்கலயா சகி"
"இல்ல சிபு. என்னால முடியல"
அத்தனை ஜாலியாக கட்டைவிரல் உயர்த்தி, சம்மதம் சொன்னவளின் இப்போதையத் தவிப்பு புரிய, மனைவியை அணைத்துக் கொண்டான் ரிஷி.
"உன்னைக் கஷ்டப்படுத்தி நான் நடிக்கணும்'னு இல்ல சகி. நீ சொல்லு எல்லாம் நிறுத்திடறேன். நானும் அப்பா மாதிரியே ப்ரொடியூசர் ஆகிடறேன்"
சக்தி சிரித்தாள்.
"இப்படி ஈஸியா பெரிய முடிவை எடுக்க உன்னால தான் முடியும் சிபு. ஆனா வேணாம். இதெல்லாம் எனக்குப் புதுசு தான? இந்த மாதிரி சீன் மட்டும் நான் பார்க்கல. சரியா? உன் அழகுக்கு நீ என்னைக்கும் ஹீரோ மட்டும் தான்"
"அப்போ நான் ஹீரோயினை..
என்று அவன் இழுக்க, அவன் வாயைப் பொத்தி,
"மூச்"
என்றாள்.
என்றவளை தோளில் கைபோட்டு வெளியே அழைத்து வந்தான் ரிஷி. தூரத்தில் கார்த்திக், வர்ஷினி தெரிய இருவரும் அங்கே சென்றார்கள். வர்ஷினி சும்மாவேணும் உம்மென்று இருக்க, கார்த்திக் இன்னமும் அவளை சீண்டிக் கொண்டிருந்தான்.
"டேய்! என்னடா?"
என்றான் ரிஷி கோபமாக.
கார்த்திக் சொன்னான்..
"அதுவா? கீத்து ஒரு கதை சொன்னா...
என்று அவன் இழுக்க,
"என்ன கதை?"
என்றனர் இருவரும் ஆர்வமாக. கார்த்திக் சொல்லத் தொடங்க, ரிஷி தடுத்து,
"வர்ஷி நீ சொல்லு"
என்றான்.
அவளும் சொன்னாள். அவள் சொல்ல, சொல்ல ரிஷியும், சக்தியும் நிலவையேப் பார்த்திருந்தனர்.
உண்மை தானே, காதலை சண்டையிட்டுப் பெற்றுக் கொள்ள முடியாது. ஏன் எதற்கு எப்படி வந்தது என்று சொல்லவும் முடியாது. இவ் அலைகளைப் போல், வீசும் காற்றைப்போல் கட்டுப்படுத்த முடியாத உணர்வு அது. அதற்கு இந்த நிலவே சாட்சி.
~~
அடுத்தநாள், வர்ஷினிக்கு விடுமுறையிருக்க, கார்த்திக்கும் வீட்டில் இருந்து கொண்டான். காலையில் நந்தகுமார், செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்க, தினேஷும், இவனும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"ப்ரோ, உனக்கு நியாபகம் இருக்கா? வர்ஷினி சாரி அண்ணி, முதமுறை நம்ம வீட்டுக்கு வந்தப்ப நான்தானே அவங்கள உனக்கு ஜோடின்னு சொன்னேன்"
"ம்ம்ம், ஆமாடா. ரிஷியை சந்திக்கிப்போறத கூட சொல்லிட்டியே. அதெப்படிடா தினேஷ், என் லைஃப்ல நடக்கிறத நீ முன்னமே சொல்லிட்ற?"
தினேஷ் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.
"சரி சொல்லு, இன்னைக்கு என்ன நடக்கும்?"
"வேறென்ன அண்ணா? அப்பா சென்டிமென்ட் தான்"
என்றவன், நந்தாவைக் காட்ட, அவரும் செ.தாளை மடித்து விட்டு நிமிர இருவரும் சிரித்தனர். சென்டிமென்ட்டுக்குத் தயாராகி, நிமிர்ந்து அமர்ந்தனர்.
நந்தா அழைத்தார்..
"கார்த்தி, கபிலன் எப்படி இருக்கான். கேட்டியா?"
"அவன் ஒழுங்கா இருந்துதான ஆகணும்? அவன் பையன் தான் ஜாலியா வயலை சுத்தி விளையாடுறானாம்"
"கூட, நம்ம சைட் ஆள் யார் இருக்கா?"
"எத்திராஜை அனுப்பி இருக்கேன்"
"அவரா?"
நந்தகுமார் யோசனையுடன் கேட்க, தினேஷின் முகம் சுண்டியது.
"அவருக்கென்ன நந்துப்பா? பஷருக்கு அடுத்து எனக்கு நம்பிக்கையான ஆள் இப்போ அவர் தான்"
என்றவன், தினேஷ் அறியாமல், நந்தகுமாரிடம் கண்காட்டினான். புரிந்து கொண்டவர்,
"ம்ம்ம் மாறிதான ஆகணும்? நம்ம வீட்டுக்கு சம்மந்தி ஆகப் போறவராச்சே"
என்க, தினேஷ் முகத்தில் மலர்ச்சி.
"அப்பா"
என்று சந்தோஷத்தில் கத்தினான்.
"படவா, போலீஸ் வீட்டுப் பெண்ணயே சைட்டடிச்சிருக்க. உன்ன லாத்தியால ரெண்டு போட்டா என்ன?"
"ஹாஹாஹா, நந்துப்பா"
என்றான். நந்தகுமார் அவனை அன்புடன் பார்க்க,
"அப்பா சென்டிமென்ட் இன்னைக்கு உனக்குதான்டா"
என்றான் கார்த்திக் மெதுவாக.
"இரு ப்ரோ இன்னும் டைமிருக்கு"
என்றான் தினேஷ்.
மங்கையும், வர்ஷினியும் காலை உணவை சாப்பாட்டு மேஜையில் கொண்டு வந்து வைத்தனர். மங்கை அழைக்க மூவரும் சென்று அமர்ந்தனர். இட்லியைப் பிட்டவருக்கு, சக்தியின் நினைவு வர, நந்தா சொன்னார்...
"சக்தி இருந்தா, நந்துப்பா எனக்குன்னு கேட்பா" என்றார்.
உடனே வர்ஷினியும், தினேஷும் ஒன்றுபோல சொல்லினர்..
"நந்துப்பா எனக்கு?"
நந்தாவும், மங்கையும் சிரிக்க, கார்த்திக் அமைதியாக இருந்தான். நந்தா அந்த இட்லித் துண்டை அவன் வாயில் வைத்தார்.
"நாங்கக் கேட்டா அவருக்குத் தரீங்க?"
வர்ஷினி சண்டைக்கு வர,
"அதான?"
என்றான் தினேஷ்.
"கேட்காத பிள்ளைக்குத் தான் ஏக்கம் இருக்கும்"
என்று விட்டார் நந்தா.
அடுத்த நொடி, மங்கை, வர்ஷினி, தினேஷ்.. கார்த்திக்கைப் பார்க்க, அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல் குனிந்து சாப்பிட ஆரம்பித்தான்.
சாப்பிடுவது நோக்கமில்லை. வெறும் பாவனை. அன்புடன் அழைத்தார் நந்தா..
"கார்த்தி"
"சொல்லுங்க"
என்றான் நிமிராமல்.
உண்மை சொல்ல வேணுமெனில், கார்த்திக்கின் பலம் வர்ஷினியும், ரிஷியும் என்றால் பலவீனம் என்றென்றும் நந்தகுமார் தான். அவர் அவனையேப் புன்சிரிப்புடன் பார்த்திருக்க, சட்டென்று எழுந்துக் கைகழுவ சென்று விட்டான். பின்னால் ஓடினான் தினேஷ்.
"ப்ரோ, பார்த்தியா? அப்பா சென்டிமென்ட் எப்பவும் உனக்கு தான்"
"போடா"
என்றான் செல்லமாக.
சற்று நிமிடத்தில், கார்த்திக்கும், வர்ஷினியும் தங்களின் அறைக்குள் சந்தித்தபோது, வர்ஷினி அவனைக் குறுகுறுவெனக் குறும்பாகப் பார்த்தாள்.
"ஏய் என்ன?"
"ஒண்ணுமில்லயே"
"அப்போ இதென்னப் பார்வை, ஆன்? என் தம்பி அழகா அப்பா சென்டிமென்ட்'னு சொல்றான். உனக்கு மட்டும் கிண்டலா இருக்கா, எப்பவும் இதே மாதிரி பண்ற. மவள உன்ன?"
என்றவன், அவள் அருகே செல்ல, வர்ஷினி விலகி ஓட, எட்டி அவள் சுடிதார் துப்பட்டாவை பிடித்து விட்டான்.
"அச்சோ, இது சேலை இல்ல, கிழிஞ்சிடும். விடுங்க" என்றாள்.
"முடியாது. நீ சொன்னா தான் விடுவேன்"
"அது... நீங்க மாமா கூட பேசிட்டு வரும்போது'லாம் உணர்ச்சி வசப்பட்டு இருப்பீங்க. உங்களை இயல்பாக்க தான் இப்படி பண்றேன்"
"அடேங்கப்பா! உனக்கு எவ்ளோ அறிவுடி தங்கம். உன்னப் பெத்து வளர்த்த மகராசனை நான் பார்க்காம போய்ட்டேனே?"
அவன் அப்படி சொன்னதுதான், தந்தையின் நினைவில், அவள் கண்கள் இருண்டு கண்ணீர் வரத் தொடங்கியது. இருபத்து மூன்று வயது பெண்ணான அவளுக்கு மட்டும் தந்தைப்பாசம் இருக்காதா என்ன?
"ஹேய் அம்மு"
என்று அருகில் சென்று அணைத்துக் கொண்டான். எவ்வளவுத் தட்டிக் கொடுத்து தேற்றியும் அவள் கண்ணீர் நிற்கவில்லை. கார்த்தி'பா என்று அவள் அழைத்தக் காரணம் இப்போது புரிந்தது அவனுக்கு. குனிந்து காதில் சொன்னான்..
"கீத்து, கார்த்தி'பா சொல்லு"
சொல்லவில்லை அவள். எனவே அவன் பாடினான்..
"நான் தாயுமானவன், தந்தையானவன், அன்புச் சேவகன், அருமை நாயகன்"
அக்குரலும், குரலிலிருந்த உண்மையும் அவளை வருட,
"கார்த்தி'பா"
என்று அவனின் இடுப்பைக் கட்டிக்கொண்டாள் வர்ஷினி. இதமாக சொன்னான்..
"அழாத பொண்ணு, மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு. அதுக்கு பதில் என்னை நாலு அடி அடிச்சிடு"
"ம்ம்ம்ம்"
"என்ன ம்ம்ம்?"
"நாலு அடி அடிக்கிறேன்"
"என்ன, அடிப்பியா?"
"சொன்னீங்க தான?"
"அட, என்ன வளர்த்து வச்சிருக்கார் உன் அப்பா, ஆன்?
இம்முறை வர்ஷினி சிரிக்க, அவனுக்கு நிம்....மதி.
~~