VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,
இன்னைக்கு அஞ்சாவது நாள். எழுந்து கிளம்பி ரூமை செக் அவுட் பண்ணியாச்சு! கிரிவலம் போகிற வழில காலை உணவு சாப்பிட்டுக்கலாம்னு முடிவு எடுத்து கிளம்பியாச்சு.
கிரிவலம்னா நடந்து போனோம்னு தப்பு கணக்குலாம் போட்டுட கூடாது! அவ்வ்வ்! கார்லயேதான் ஒவ்வொரு இடமா நின்னு நின்னு போனோம்! முதல் லிங்கம் இந்திர லிங்கம். நாங்க போறப்ப வெளி கதவு திறந்திருந்துச்சு. தங்கம் சொன்னாங்க அவங்க வரப்பலாம் எப்பவும் பூட்டிருக்கும். வெளியே நின்னே கும்பிட்டுத்தான் போயிருக்கோம்னு! உள்ள வரைக்கும் போய் கேட் வழியா லிங்கத்த பார்த்திட்டு ஒரு வலம் வந்திட்டு, வெளிய வந்தோம். அடுத்தடுத்து எல்லாம் லிங்கமும் போனோம். பாப்பா ராசிக்கு இந்திர லிங்கம், இவருக்கு குபேர லிங்கம், எனக்கு ஈசான்ய லிங்கம்னு கூகுள் பண்ணிப் பார்த்துட்டு வேண்டிக்கிட்டோம்! இவ இருக்காளே, நாநா லிங்கமும் உங்க லிங்கமும் மட்டும் நல்லா பூலாம் போட்டு அலங்காரம் பண்ணிருந்துச்சு! என்னோட லிங்கம்ல அலங்காரம் இல்லன்னு அதுக்கொரு பஞ்சாயத்து!!!!

இந்த வெதர்லதான் கிரிவலம் போனோம்.

ஆரா அமுதே எந்தன் அன்பே ரமணான்னு பவதாரிணி பாடுன பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அப்படியே கரைஞ்சு மறைஞ்சு போகிற மாதிரி ஒரு ஃபீல் வரும்! அந்தப் பாட்டோட தாக்கத்துலத்தான் ரமண மஹரிஷி ஆசிரமம் பார்க்கனும்னு சொல்லிருந்தேன். ஆஸ்ரமம் முன்னாடி ஸ்லிப்பர்ஸ கழட்டி வச்சிட்டு நாங்க நாலு பேரும் உள்ள போனோம்! அப்படிப்பட்ட ஒரு காம்ல் ஃபீல்! பசேல்னு, அழகா, அமைதியா இருந்தது அந்த இடம். கொஞ்ச நேரம் உக்காந்து கண்ணை மூடி தியானம் பண்ணிட்டு, அந்த இடத்தோட சரவுண்டிங்க சுத்திப் பார்த்துட்டு கிளம்ப இருந்தோம்! அப்போ இந்த மூனு பேருல யாரொ ஒருத்தர் என்னமோ சொல்ல, நான் கெக்கெபெக்கென்னு சிரிச்சுட்டேன்! தியான பில்டிங் வெளிய வந்துதான் இது நடந்தது! சைலன்ஸ் பிளிஸ்னு பதாகை வச்சிட்டு சுத்துவாங்களே, அவங்க என் பின்னாடி வந்து நின்னு சைன் போர்ட்ட காட்டவும், கப்புன்னு வாயை மூடிட்டேன். அதுல இருந்து அங்கிருந்து கிளம்பற வரைக்கும் அந்த சைலன்ஸ் பிளிஸ் என் பின்னாடியே வந்தாங்க!!!! டோட்டல் டேமேஜ்
ஹவுஸ் ஓனர் வேற என்னை முறைச்சிப் பார்த்தீங்!!!! அந்த சம்பவத்துல ஸ்லிப்பர அங்க வைச்ச ஞாபகமே இல்லாம கார்ல ஏறியாச்சி! பாதி தூரத்துல, ம்மா ஸ்லிப்பர காணோம்னு இவ சொல்லவும்தான் அடடான்னு இருந்துச்சு! மறுபடி அங்க போய் ஸ்லிப்பர் எடுத்துட்டு வந்தோம்!
அதுக்கு அப்புறம்தான் காலை உணவு சாப்பிட இடம் தேடுனோம்! அங்காளம்மன் தேநீர் விடுதின்னு ஓரிடம். அங்கத்தான் சாப்பிட உக்காந்தோம். இட்லி பூப்போல செம்ம ருசி. சரியான கூட்டம். பூரியும் செம்ம டேஸ்ட்!!! கடை லேடிகிட்ட உங்க சாப்பாடு சூப்பர்னு சொல்லிட்டுத்தான் வந்தேன்!!!

நிருதி லிங்கம் பார்த்துட்டு ஒரு இடத்துல மான்கள் இருந்தது! பாப்பா பார்க்கனும்னு நிறுத்தி போட்டோ எடுத்தோம்.

சூரிய லிங்கம், வருண லிங்கம்லாம் பார்த்துட்டு அடி அண்ணாமலையும் போய் பார்த்தோம்.




அவரையும் கும்பிட்டுட்டு, அடுத்த லிங்கம் பார்க்கப் போனோம். வாயு லிங்கம், சந்திர லிங்கம், குபேர லிங்கம்னு வரிசையா ஒவ்வொன்னா போனோம். குபேர லிங்கம் வெளிய குட்டியா சைனீஸ் குபேரன் பச்சை கலர்ல வாங்கி ஹவுஸ் ஓனருக்குக் குடுத்து, பேர்த்டே கிப்டுன்னு சந்துல சிந்து பாடியாச்சு!
அம்மா சொல்லி சொல்லி அனுப்பனாங்க, இடுக்குப்பிள்ளையார பார்த்துட்டு அதுக்குள்ள நுழைஞ்சுட்டு வான்னு! அங்க பார்த்தா கியூ கட்டி நிக்கறாங்க! நெக்ஸ்ட் காஞ்சிபுரம் வேற போகனுமே! சோ புள்ளயார மட்டும் கும்பிட்டுட்டு வந்துட்டோம்.

அதை கடந்து ஒரு கும்பகோணம் டிகிரி காபி கடை! கும்பகோணத்துக்குத்தான் போகல, காபியாச்சும் குடிப்போம்னு, நின்னு வாங்கிக் குடிச்சாச்சு.

காபி குடிச்சிட்டு ஈசான்ய லிங்கம் பார்த்துட்டு காஞ்சிக்குக் கிளம்பிட்டோம்!
இன்னைக்கு அஞ்சாவது நாள். எழுந்து கிளம்பி ரூமை செக் அவுட் பண்ணியாச்சு! கிரிவலம் போகிற வழில காலை உணவு சாப்பிட்டுக்கலாம்னு முடிவு எடுத்து கிளம்பியாச்சு.
கிரிவலம்னா நடந்து போனோம்னு தப்பு கணக்குலாம் போட்டுட கூடாது! அவ்வ்வ்! கார்லயேதான் ஒவ்வொரு இடமா நின்னு நின்னு போனோம்! முதல் லிங்கம் இந்திர லிங்கம். நாங்க போறப்ப வெளி கதவு திறந்திருந்துச்சு. தங்கம் சொன்னாங்க அவங்க வரப்பலாம் எப்பவும் பூட்டிருக்கும். வெளியே நின்னே கும்பிட்டுத்தான் போயிருக்கோம்னு! உள்ள வரைக்கும் போய் கேட் வழியா லிங்கத்த பார்த்திட்டு ஒரு வலம் வந்திட்டு, வெளிய வந்தோம். அடுத்தடுத்து எல்லாம் லிங்கமும் போனோம். பாப்பா ராசிக்கு இந்திர லிங்கம், இவருக்கு குபேர லிங்கம், எனக்கு ஈசான்ய லிங்கம்னு கூகுள் பண்ணிப் பார்த்துட்டு வேண்டிக்கிட்டோம்! இவ இருக்காளே, நாநா லிங்கமும் உங்க லிங்கமும் மட்டும் நல்லா பூலாம் போட்டு அலங்காரம் பண்ணிருந்துச்சு! என்னோட லிங்கம்ல அலங்காரம் இல்லன்னு அதுக்கொரு பஞ்சாயத்து!!!!

இந்த வெதர்லதான் கிரிவலம் போனோம்.

ஆரா அமுதே எந்தன் அன்பே ரமணான்னு பவதாரிணி பாடுன பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அப்படியே கரைஞ்சு மறைஞ்சு போகிற மாதிரி ஒரு ஃபீல் வரும்! அந்தப் பாட்டோட தாக்கத்துலத்தான் ரமண மஹரிஷி ஆசிரமம் பார்க்கனும்னு சொல்லிருந்தேன். ஆஸ்ரமம் முன்னாடி ஸ்லிப்பர்ஸ கழட்டி வச்சிட்டு நாங்க நாலு பேரும் உள்ள போனோம்! அப்படிப்பட்ட ஒரு காம்ல் ஃபீல்! பசேல்னு, அழகா, அமைதியா இருந்தது அந்த இடம். கொஞ்ச நேரம் உக்காந்து கண்ணை மூடி தியானம் பண்ணிட்டு, அந்த இடத்தோட சரவுண்டிங்க சுத்திப் பார்த்துட்டு கிளம்ப இருந்தோம்! அப்போ இந்த மூனு பேருல யாரொ ஒருத்தர் என்னமோ சொல்ல, நான் கெக்கெபெக்கென்னு சிரிச்சுட்டேன்! தியான பில்டிங் வெளிய வந்துதான் இது நடந்தது! சைலன்ஸ் பிளிஸ்னு பதாகை வச்சிட்டு சுத்துவாங்களே, அவங்க என் பின்னாடி வந்து நின்னு சைன் போர்ட்ட காட்டவும், கப்புன்னு வாயை மூடிட்டேன். அதுல இருந்து அங்கிருந்து கிளம்பற வரைக்கும் அந்த சைலன்ஸ் பிளிஸ் என் பின்னாடியே வந்தாங்க!!!! டோட்டல் டேமேஜ்
அதுக்கு அப்புறம்தான் காலை உணவு சாப்பிட இடம் தேடுனோம்! அங்காளம்மன் தேநீர் விடுதின்னு ஓரிடம். அங்கத்தான் சாப்பிட உக்காந்தோம். இட்லி பூப்போல செம்ம ருசி. சரியான கூட்டம். பூரியும் செம்ம டேஸ்ட்!!! கடை லேடிகிட்ட உங்க சாப்பாடு சூப்பர்னு சொல்லிட்டுத்தான் வந்தேன்!!!

நிருதி லிங்கம் பார்த்துட்டு ஒரு இடத்துல மான்கள் இருந்தது! பாப்பா பார்க்கனும்னு நிறுத்தி போட்டோ எடுத்தோம்.

சூரிய லிங்கம், வருண லிங்கம்லாம் பார்த்துட்டு அடி அண்ணாமலையும் போய் பார்த்தோம்.




அவரையும் கும்பிட்டுட்டு, அடுத்த லிங்கம் பார்க்கப் போனோம். வாயு லிங்கம், சந்திர லிங்கம், குபேர லிங்கம்னு வரிசையா ஒவ்வொன்னா போனோம். குபேர லிங்கம் வெளிய குட்டியா சைனீஸ் குபேரன் பச்சை கலர்ல வாங்கி ஹவுஸ் ஓனருக்குக் குடுத்து, பேர்த்டே கிப்டுன்னு சந்துல சிந்து பாடியாச்சு!
அம்மா சொல்லி சொல்லி அனுப்பனாங்க, இடுக்குப்பிள்ளையார பார்த்துட்டு அதுக்குள்ள நுழைஞ்சுட்டு வான்னு! அங்க பார்த்தா கியூ கட்டி நிக்கறாங்க! நெக்ஸ்ட் காஞ்சிபுரம் வேற போகனுமே! சோ புள்ளயார மட்டும் கும்பிட்டுட்டு வந்துட்டோம்.

அதை கடந்து ஒரு கும்பகோணம் டிகிரி காபி கடை! கும்பகோணத்துக்குத்தான் போகல, காபியாச்சும் குடிப்போம்னு, நின்னு வாங்கிக் குடிச்சாச்சு.

காபி குடிச்சிட்டு ஈசான்ய லிங்கம் பார்த்துட்டு காஞ்சிக்குக் கிளம்பிட்டோம்!
Last edited:













