VanishaAdmin
Moderator
“இத்தனை வருஷமா இந்த வீட்டுல இது உன் பொருள் என் பொருள்னு பிரிச்சுப் பார்க்கல. நான் மட்டும் வந்தவுடனே இது என் பாத்திரம்னு பிரிச்சுக் காட்டனுமா? ராமன் லஷ்மன் மாதிரி இருக்கற இந்த குடும்பத்துல நானும் ஒன்னாயிட்டேன்னு சந்தோஷப் பட்டுக்கிட்டு இருக்கேன்”
மீனா--- வானத்தைப் போல
ஹாஸ்பிட்டலுக்கு சென்று குடும்பமே தாமரையையும், மதனையும் பார்த்துவிட்டு வீடு திரும்பி இருந்தனர். தேவி மிகுந்த களைப்பாக இருந்ததால் விருந்தினர் அறையிலேயே தங்கிக் கொள்ள சொல்லி வற்புறுத்தி தங்க வைத்தார் இந்து. வீங்கி இருந்த அவள் கால்களுக்கு அம்மாவும் மகனும் மாறி மாறி சுடுநீர் ஒத்தடம் கொடுத்தார்கள். தேவிக்கு அவர்களின் பாசத்தில் கண் கலங்கிவிட்டது. கண்களை துடைத்து விட்ட இந்து,
“ஏண்டாம்மா கண் கலங்குது? பழைய ஞாபகம் வந்துருச்சா? நாங்கள்லாம் இருக்கோம் உனக்கு. கண்ண துடைச்சிக்கம்மா. நான் போய் பால் கொண்டு வரேன். குடிச்சிட்டு தூங்குவியாம்” என மருமகளின் தலையைக் கோதிக் கொடுத்தவர், கீழே இறங்கி சென்றார்.
“அம்மாவுக்கு உன் கதை தெரியுமா ரோஜா?” ஆச்சரியமாக கேட்டான் வேந்தன்.
“உங்களுக்கு முன்னாலேயே தெரியும்”
“என்னடி சொல்லுற? அம்மா என் கிட்ட இது வரைக்கும் வாயையே தொறக்கலையே!” அதிர்சியுடன் கேட்டான் அவன்.
மெலிதாக சிரித்தாள் அவள்.
“என் கஸ்டடில இருந்தப்போ அவங்கள பார்க்க போனேன். பார்த்த உடனே எனக்கு கண்ணு கலங்கிருச்சு. என்னை மடியில சாய்ச்சுகிட்டாங்க. என்ன ஏதுன்னு கேக்காம, தலையை வருடிக்கிட்டே இருந்தாங்க. கண்ணீர் நிக்கற வரைக்கும் அவங்க மடியிலேயே படுத்துருந்தேன். அவங்க கையாலே சாப்பாடு ஊட்டுனாங்க. ஒன் டே அவங்க கூடவே இருந்தேன் மலர். என்னோட கதைய சொல்லி, உன்னைப் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டேன். முதல்ல தயங்குனாங்க உன் விருப்பத்தை நினைச்சு. அப்புறம் ஒத்துக்கிட்டாங்க” சொல்லி நிறுத்தினாள்.
பாலுடன் உள்ளே வந்த இந்து, மருமகளிடம் கொடுத்து விட்டு,
“நீ தான் வேணாம் வேணாம்னு ஒத்தைக் காலுல நின்ன. அதனால கொஞ்சம் யோசிச்சேன். ஆனாலும் நீ சொன்ன காரணம் எல்லாத்துலயும் அந்தஸ்து, அழகு, சுயகௌரவம் இப்படின்னு இருந்துச்சே தவிர தேவிய பிடிக்கலன்னு ஒரு வார்த்தை இல்ல. அப்புறம் ரித்வி ரித்வின்னு பகலெல்லாம் பேனாத்திட்டு, தேவிய பாக்கறப்போ கண்ணு அப்படியே அலைபாயுது. உன்னப் பத்தி எனக்குத் தெரியாதாடா? அதான் தேவிம்மாகிட்ட சரின்னு சொல்லிட்டேன். அவ காயத்துக்கெல்லாம் நீ மருந்தா இருப்பன்னு எனக்கு முழு நம்பிக்கை இருந்துச்சு. அதனால தான் நீ எங்க குடும்ப விஷயத்துல தலையிடாதன்னு தேவிய சொன்னவுடனே எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. எப்படியோ என் முடிவு தப்பாகல. இப்போ உங்க ரெண்டு பேரோட பிணைப்பை பார்க்கறப்போ எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?” கண் கலங்கினார்.
மகனும் மருமகளும் இரு பக்கமாக அவரை அணைத்துக் கொண்டனர்.
“மாமியாரும் மருமகளும் எனக்குத் தெரியாம பிளான் பண்ணி என்னைக் கவுத்துருக்கீங்க. தினம் நாலு சுவத்துக்குள்ள அடி வாங்கிகிட்டு வெளிய நானும் ரவுடிதான்னு சுத்துற நான் தான் அழுவனும். நீங்க இல்ல.” என வராத கண்ணீரைத் துடைத்தான் வேந்தன்.
“தேவிம்மா, என்னம்மா என் மகனை ரூமுக்குள்ள கும்மாங்குத்து குத்துறீயாம். இதெல்லாம் நல்லா இல்ல. பப்ளிக்கா உதை, நாங்க எல்லாம் கமான் கமான்னு உனக்கு சப்போர்ட் பண்ணுறோம்” என சிரித்தார் இந்து. அவருடன் சேர்ந்து இவர்கள் இருவரும் சிரித்தனர்.
“ஏண்டா வேந்தா, உங்க மாமாகூட போலிஸ் ஸ்டேசன் போனீயே என்ன சொன்னாங்க?” என திடீரென ஞாபகம் வந்தவராய் கேட்டார் இந்து.
“கொள்ளை அடிக்க வந்துருக்கலாம், இல்லைனா முன் பகையா இருக்கலாம்னு சந்தேகப் படுறாங்கம்மா. சூப்பர்மார்கேடுல ரைடு, அப்புறம் பொம்பள புள்ள மேட்டருல ஏற்கனவே சிக்கி தலைமறைவா இருந்தாங்க. அப்புறம் காச குடுத்து கேச கலைச்சிட்டு, தைரியமா வெளிவந்துருக்காங்க ரெண்டு பேரும். சென்னையில காலு வச்ச மறுநிமிஷமே இப்படி நடந்துருக்கு”
“பாவம்டா உங்க அத்தை. வளையல தான் புடுங்கனானுங்களே, அப்படியே விட்டுட்டுப் போக வேண்டிதானே. ரெண்டு கையையும் எதையோ வைச்சு கிழிச்சு விட்டுட்டுப் போயிருக்கானுங்க பார்க்கவே பாவமா இருக்கு. அத்தையயாச்சும் பொம்பளன்னு அதோட விட்டுட்டானுங்க, மதன கையையும் காலையும் ஒடச்சி படுக்க வச்சிட்டானுங்க. எழுந்து நடக்கவே சில வருஷம் ஆகுமாம். பாவிபயலுக. நல்லா இருப்பானுங்களா?” புலம்பினார்.
“அத்தை, இப்போ எதுக்கு சாபம் குடுக்கறீங்க? யாருக்கு என்ன கிடைக்கனுமோ லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கடவுள் குடுப்பாரு. அவங்க சிக்கல அவங்களே தீர்த்துக்கட்டும். நீங்க போய் படுங்க” என செல்லமாய் அதட்டி அனுப்பி வைத்தாள் தேவி.
“யெ விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குட்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுனாக்க
ஓரமா ஒத்திக்கோமா
சோகமா சோகமா
ஹே ஜால்லி இலோ ஜிமு கான் தாமா.
ஹே மாமா பனாமா
போயி பார்ட்டி பண்ணலமா” என பாடிக் கொண்டே வெளியேறினார் இந்து.
“இந்த வயசுக்கு எங்கம்மா படுற பாட்ட பார்த்தியா? சரியான லொள்ளு” என சிரித்தப்படியே மனைவியின் காலை அமுக்கி விட்டான் வேந்தன்.
குளித்துவிட்டு வெளியே வரும் வீராவை கட்டிலில் உட்கார்ந்தவாறே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
“ஏய் போண்டா டீ(பொண்டாட்டி). என்ன இன்னிக்கு பார்வையெல்லாம் பலமா இருக்கு? மாமன அந்த முட்டைக்கண்ணாலேயே முழுங்கிருவ போல இருக்கு.” என்றவாறே அவள் பக்கத்தில் வந்து நெருங்கி அமர்ந்து கொண்டான்.
“இன்னிக்கும் என் சோப்பு தான் பாவிச்சிங்களா?” அவனை வாசம் பிடித்தவாறே முறைத்தாள் அவள்.
“உன் சோப்பை தேய்ச்சிக் குளிச்சுக்கிட்டா உன்னையே தேய்ச்சிகிட்டு குளிச்ச மாதிரி சோக்கா இருக்குடி” வழிந்தான் அவன்.
“ஜொள்ளு ஊத்துது துடைச்சிக்கிங்க” சிரித்தாள் அவள்.
“போடி, என் பாடு எனக்கு தான் தெரியும். நாலு மாசம் ஆகற வரைக்கும் டாக்டர், உன் கிட்ட கூட வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. அப்புறம் நான் என்ன தான் செய்யறது சொல்லு”
அவன் மடியில் சாய்ந்து படுத்துக் கொண்டாள் அனு. இப்பொழுது அவள் ஒன்றரை மாத கர்ப்பிணி. அவள் கர்ப்பப்பை வீக்காக இருப்பதால், கவனமாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என டாக்டரின் உத்தரவு. வீட்டில் எல்லோரும் அவளை தாங்கோ தாங்கேன தாங்கினார்கள். விட்டால் வீரா அவளை நடக்க கூட விடாமல் இடுப்பிலேயே தூக்கி வைத்து சுற்றுவான். அப்படி தாங்கினான் மனைவியை.
“மாமு, இதுல உனக்கு ஏதாச்சும் வருத்தமா?” பாவமாக கேட்டாள் அவள்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அனும்மா. உன்னோட நலன் தான் முக்கியம். நான் உனக்கு உடம்பு தேறி பலமா இருக்கறப்போ பெத்துக்கலாம்னு சொன்னேன். அடம் புடிச்ச கழுதை, பாவ முகத்தைக் காட்டியே என்னை சரிகட்டிட்ட. நீ நல்ல படியா பெத்து எடுக்கற வரைக்கும் என் உயிர் என்கிட்ட இருக்காது” மனைவியின் மணிவயிற்றை மென்மையாக தடவிக் கொடுத்தான் வீரா.
இருக்கமாக அவனை வயிற்றோடு கட்டிக் கொண்டாள். பின் அவன் முகத்தைப் பார்த்து,
“சரி, சொல்லுங்க!” என கேட்டாள்.
“என்னத்த சொல்லனும்” என அவள் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தான் வீரா.
“மதன் மாமா கை காலை உடைச்சக் கதைய சொல்லுங்கன்னு கேக்குறேன்”
“எவன் மாமா? அவனா? இனிமே மாமான்னு அவன கூப்பிட்ட, உதட்டைக் கடிச்சு வச்சிருவேன்” கோபப்பட்டான்.
“சரி கூப்புடல. இப்ப சொல்லுங்க”
“உன் கதைய கேட்துல இருந்து அவன போடறதுக்கு நாள் பார்த்துக் கிட்டு தான் இருந்தேன். பாவி எஸ்கேப் ஆயிட்டான். சென்னைக்கு திரும்ப வந்துட்டான்னு தெரிஞ்ச கையோட போட்டு தாக்கிட்டேன். சாவடிச்சிருப்பேன், ஆனா எனக்கு என் பொண்டாட்டி கூட நூறு வருஷம் வாழனும். அதான் முகமூடி போட்டுட்டுப் போய் வெளுத்து வாங்கிட்டேன்” ஆனந்தமாக சிரித்தான் அவன்.
கண்கலங்க, அவன் உதட்டில் ஆவேசமாக தன் உதட்டைப் பொருத்தினாள் அனு.
“ஏய்! விடுடி! டாக்டர் தள்ளி இருக்க சொல்லிருக்காருடி என் ராட்சசி. இப்படி என்னைக் கொல்லாதடி” என தன் மனைவியை கெஞ்சி கொஞ்சினான் வீரா.
லட்டுவின் அறையில் முக்கியமான மின்னஞ்சல் ஒன்றை லாப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்தான் கார்த்திக். அம்மாவிடம் கொஞ்சிவிட்டு ரூமுக்கு வந்த லட்டு,
“மங்கூஸ், என்னடா செய்ற?”
“முக்கியமான ஈமெயில் ஒன்னு அனுப்பனும் கக்கூஸ்”
“யார பார்த்துடா கக்கூஸ் சொன்ன?” கடுப்பானாள் லட்டு.
“இங்க வேற யாரு இருக்கா? உன்னைப் பார்த்துதான். என்னை மங்கூஸ்னு கூப்பிட்டா நான் உன்னை அப்படித்தான் கூப்புடுவேன்”
“சரி விடு. இனிமே வேற பேரு வைக்கிறேன். இப்ப கீழே போய் எனக்கு பால் எடுத்துட்டு வா”
“கீழே இருந்து தானடி வந்த. குடிச்சுட்டு வர வேண்டிதானே?” பார்வையை லாப்டாப்பில் வைத்த படியே கேட்டான்.
“அது வந்து, அப்போ குடிக்கனும் போல இல்ல. இப்ப இருக்கு. போறியா இல்லையா?” கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
நிமிர்ந்து பார்த்து முறைத்தவன்,
“மனுஷன் வேலை செய்யறது கண்ணுக்கு தெரியல? போடி போய் குடிச்சுட்டு வா” என்றான்.
“இன்னிக்கு காலேஜ்ல ரொம்ப நடந்துட்டேன். அப்புறம் வேற ஹாஸ்பிட்டல் அங்க இங்கன்னு அலைச்சல். கால் வலிக்கிதுடா மாமா”
அவளின் மாமா எனும் மந்திர மகுடிக்கு மயங்கிய நாகமாய் ஊர்ந்து நெளிந்து கிச்சனுக்கு சென்றான் கார்த்திக். மேலே ரூமுக்கு வரும் போது, கதவு பூட்டி இருந்தது.
மீனா--- வானத்தைப் போல
ஹாஸ்பிட்டலுக்கு சென்று குடும்பமே தாமரையையும், மதனையும் பார்த்துவிட்டு வீடு திரும்பி இருந்தனர். தேவி மிகுந்த களைப்பாக இருந்ததால் விருந்தினர் அறையிலேயே தங்கிக் கொள்ள சொல்லி வற்புறுத்தி தங்க வைத்தார் இந்து. வீங்கி இருந்த அவள் கால்களுக்கு அம்மாவும் மகனும் மாறி மாறி சுடுநீர் ஒத்தடம் கொடுத்தார்கள். தேவிக்கு அவர்களின் பாசத்தில் கண் கலங்கிவிட்டது. கண்களை துடைத்து விட்ட இந்து,
“ஏண்டாம்மா கண் கலங்குது? பழைய ஞாபகம் வந்துருச்சா? நாங்கள்லாம் இருக்கோம் உனக்கு. கண்ண துடைச்சிக்கம்மா. நான் போய் பால் கொண்டு வரேன். குடிச்சிட்டு தூங்குவியாம்” என மருமகளின் தலையைக் கோதிக் கொடுத்தவர், கீழே இறங்கி சென்றார்.
“அம்மாவுக்கு உன் கதை தெரியுமா ரோஜா?” ஆச்சரியமாக கேட்டான் வேந்தன்.
“உங்களுக்கு முன்னாலேயே தெரியும்”
“என்னடி சொல்லுற? அம்மா என் கிட்ட இது வரைக்கும் வாயையே தொறக்கலையே!” அதிர்சியுடன் கேட்டான் அவன்.
மெலிதாக சிரித்தாள் அவள்.
“என் கஸ்டடில இருந்தப்போ அவங்கள பார்க்க போனேன். பார்த்த உடனே எனக்கு கண்ணு கலங்கிருச்சு. என்னை மடியில சாய்ச்சுகிட்டாங்க. என்ன ஏதுன்னு கேக்காம, தலையை வருடிக்கிட்டே இருந்தாங்க. கண்ணீர் நிக்கற வரைக்கும் அவங்க மடியிலேயே படுத்துருந்தேன். அவங்க கையாலே சாப்பாடு ஊட்டுனாங்க. ஒன் டே அவங்க கூடவே இருந்தேன் மலர். என்னோட கதைய சொல்லி, உன்னைப் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டேன். முதல்ல தயங்குனாங்க உன் விருப்பத்தை நினைச்சு. அப்புறம் ஒத்துக்கிட்டாங்க” சொல்லி நிறுத்தினாள்.
பாலுடன் உள்ளே வந்த இந்து, மருமகளிடம் கொடுத்து விட்டு,
“நீ தான் வேணாம் வேணாம்னு ஒத்தைக் காலுல நின்ன. அதனால கொஞ்சம் யோசிச்சேன். ஆனாலும் நீ சொன்ன காரணம் எல்லாத்துலயும் அந்தஸ்து, அழகு, சுயகௌரவம் இப்படின்னு இருந்துச்சே தவிர தேவிய பிடிக்கலன்னு ஒரு வார்த்தை இல்ல. அப்புறம் ரித்வி ரித்வின்னு பகலெல்லாம் பேனாத்திட்டு, தேவிய பாக்கறப்போ கண்ணு அப்படியே அலைபாயுது. உன்னப் பத்தி எனக்குத் தெரியாதாடா? அதான் தேவிம்மாகிட்ட சரின்னு சொல்லிட்டேன். அவ காயத்துக்கெல்லாம் நீ மருந்தா இருப்பன்னு எனக்கு முழு நம்பிக்கை இருந்துச்சு. அதனால தான் நீ எங்க குடும்ப விஷயத்துல தலையிடாதன்னு தேவிய சொன்னவுடனே எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. எப்படியோ என் முடிவு தப்பாகல. இப்போ உங்க ரெண்டு பேரோட பிணைப்பை பார்க்கறப்போ எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?” கண் கலங்கினார்.
மகனும் மருமகளும் இரு பக்கமாக அவரை அணைத்துக் கொண்டனர்.
“மாமியாரும் மருமகளும் எனக்குத் தெரியாம பிளான் பண்ணி என்னைக் கவுத்துருக்கீங்க. தினம் நாலு சுவத்துக்குள்ள அடி வாங்கிகிட்டு வெளிய நானும் ரவுடிதான்னு சுத்துற நான் தான் அழுவனும். நீங்க இல்ல.” என வராத கண்ணீரைத் துடைத்தான் வேந்தன்.
“தேவிம்மா, என்னம்மா என் மகனை ரூமுக்குள்ள கும்மாங்குத்து குத்துறீயாம். இதெல்லாம் நல்லா இல்ல. பப்ளிக்கா உதை, நாங்க எல்லாம் கமான் கமான்னு உனக்கு சப்போர்ட் பண்ணுறோம்” என சிரித்தார் இந்து. அவருடன் சேர்ந்து இவர்கள் இருவரும் சிரித்தனர்.
“ஏண்டா வேந்தா, உங்க மாமாகூட போலிஸ் ஸ்டேசன் போனீயே என்ன சொன்னாங்க?” என திடீரென ஞாபகம் வந்தவராய் கேட்டார் இந்து.
“கொள்ளை அடிக்க வந்துருக்கலாம், இல்லைனா முன் பகையா இருக்கலாம்னு சந்தேகப் படுறாங்கம்மா. சூப்பர்மார்கேடுல ரைடு, அப்புறம் பொம்பள புள்ள மேட்டருல ஏற்கனவே சிக்கி தலைமறைவா இருந்தாங்க. அப்புறம் காச குடுத்து கேச கலைச்சிட்டு, தைரியமா வெளிவந்துருக்காங்க ரெண்டு பேரும். சென்னையில காலு வச்ச மறுநிமிஷமே இப்படி நடந்துருக்கு”
“பாவம்டா உங்க அத்தை. வளையல தான் புடுங்கனானுங்களே, அப்படியே விட்டுட்டுப் போக வேண்டிதானே. ரெண்டு கையையும் எதையோ வைச்சு கிழிச்சு விட்டுட்டுப் போயிருக்கானுங்க பார்க்கவே பாவமா இருக்கு. அத்தையயாச்சும் பொம்பளன்னு அதோட விட்டுட்டானுங்க, மதன கையையும் காலையும் ஒடச்சி படுக்க வச்சிட்டானுங்க. எழுந்து நடக்கவே சில வருஷம் ஆகுமாம். பாவிபயலுக. நல்லா இருப்பானுங்களா?” புலம்பினார்.
“அத்தை, இப்போ எதுக்கு சாபம் குடுக்கறீங்க? யாருக்கு என்ன கிடைக்கனுமோ லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கடவுள் குடுப்பாரு. அவங்க சிக்கல அவங்களே தீர்த்துக்கட்டும். நீங்க போய் படுங்க” என செல்லமாய் அதட்டி அனுப்பி வைத்தாள் தேவி.
“யெ விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குட்சிக்கமா.
சிக்கலு சிக்கலு சிக்கலுனாக்க
ஓரமா ஒத்திக்கோமா
சோகமா சோகமா
ஹே ஜால்லி இலோ ஜிமு கான் தாமா.
ஹே மாமா பனாமா
போயி பார்ட்டி பண்ணலமா” என பாடிக் கொண்டே வெளியேறினார் இந்து.
“இந்த வயசுக்கு எங்கம்மா படுற பாட்ட பார்த்தியா? சரியான லொள்ளு” என சிரித்தப்படியே மனைவியின் காலை அமுக்கி விட்டான் வேந்தன்.
குளித்துவிட்டு வெளியே வரும் வீராவை கட்டிலில் உட்கார்ந்தவாறே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
“ஏய் போண்டா டீ(பொண்டாட்டி). என்ன இன்னிக்கு பார்வையெல்லாம் பலமா இருக்கு? மாமன அந்த முட்டைக்கண்ணாலேயே முழுங்கிருவ போல இருக்கு.” என்றவாறே அவள் பக்கத்தில் வந்து நெருங்கி அமர்ந்து கொண்டான்.
“இன்னிக்கும் என் சோப்பு தான் பாவிச்சிங்களா?” அவனை வாசம் பிடித்தவாறே முறைத்தாள் அவள்.
“உன் சோப்பை தேய்ச்சிக் குளிச்சுக்கிட்டா உன்னையே தேய்ச்சிகிட்டு குளிச்ச மாதிரி சோக்கா இருக்குடி” வழிந்தான் அவன்.
“ஜொள்ளு ஊத்துது துடைச்சிக்கிங்க” சிரித்தாள் அவள்.
“போடி, என் பாடு எனக்கு தான் தெரியும். நாலு மாசம் ஆகற வரைக்கும் டாக்டர், உன் கிட்ட கூட வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. அப்புறம் நான் என்ன தான் செய்யறது சொல்லு”
அவன் மடியில் சாய்ந்து படுத்துக் கொண்டாள் அனு. இப்பொழுது அவள் ஒன்றரை மாத கர்ப்பிணி. அவள் கர்ப்பப்பை வீக்காக இருப்பதால், கவனமாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என டாக்டரின் உத்தரவு. வீட்டில் எல்லோரும் அவளை தாங்கோ தாங்கேன தாங்கினார்கள். விட்டால் வீரா அவளை நடக்க கூட விடாமல் இடுப்பிலேயே தூக்கி வைத்து சுற்றுவான். அப்படி தாங்கினான் மனைவியை.
“மாமு, இதுல உனக்கு ஏதாச்சும் வருத்தமா?” பாவமாக கேட்டாள் அவள்.
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அனும்மா. உன்னோட நலன் தான் முக்கியம். நான் உனக்கு உடம்பு தேறி பலமா இருக்கறப்போ பெத்துக்கலாம்னு சொன்னேன். அடம் புடிச்ச கழுதை, பாவ முகத்தைக் காட்டியே என்னை சரிகட்டிட்ட. நீ நல்ல படியா பெத்து எடுக்கற வரைக்கும் என் உயிர் என்கிட்ட இருக்காது” மனைவியின் மணிவயிற்றை மென்மையாக தடவிக் கொடுத்தான் வீரா.
இருக்கமாக அவனை வயிற்றோடு கட்டிக் கொண்டாள். பின் அவன் முகத்தைப் பார்த்து,
“சரி, சொல்லுங்க!” என கேட்டாள்.
“என்னத்த சொல்லனும்” என அவள் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தான் வீரா.
“மதன் மாமா கை காலை உடைச்சக் கதைய சொல்லுங்கன்னு கேக்குறேன்”
“எவன் மாமா? அவனா? இனிமே மாமான்னு அவன கூப்பிட்ட, உதட்டைக் கடிச்சு வச்சிருவேன்” கோபப்பட்டான்.
“சரி கூப்புடல. இப்ப சொல்லுங்க”
“உன் கதைய கேட்துல இருந்து அவன போடறதுக்கு நாள் பார்த்துக் கிட்டு தான் இருந்தேன். பாவி எஸ்கேப் ஆயிட்டான். சென்னைக்கு திரும்ப வந்துட்டான்னு தெரிஞ்ச கையோட போட்டு தாக்கிட்டேன். சாவடிச்சிருப்பேன், ஆனா எனக்கு என் பொண்டாட்டி கூட நூறு வருஷம் வாழனும். அதான் முகமூடி போட்டுட்டுப் போய் வெளுத்து வாங்கிட்டேன்” ஆனந்தமாக சிரித்தான் அவன்.
கண்கலங்க, அவன் உதட்டில் ஆவேசமாக தன் உதட்டைப் பொருத்தினாள் அனு.
“ஏய்! விடுடி! டாக்டர் தள்ளி இருக்க சொல்லிருக்காருடி என் ராட்சசி. இப்படி என்னைக் கொல்லாதடி” என தன் மனைவியை கெஞ்சி கொஞ்சினான் வீரா.
லட்டுவின் அறையில் முக்கியமான மின்னஞ்சல் ஒன்றை லாப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்தான் கார்த்திக். அம்மாவிடம் கொஞ்சிவிட்டு ரூமுக்கு வந்த லட்டு,
“மங்கூஸ், என்னடா செய்ற?”
“முக்கியமான ஈமெயில் ஒன்னு அனுப்பனும் கக்கூஸ்”
“யார பார்த்துடா கக்கூஸ் சொன்ன?” கடுப்பானாள் லட்டு.
“இங்க வேற யாரு இருக்கா? உன்னைப் பார்த்துதான். என்னை மங்கூஸ்னு கூப்பிட்டா நான் உன்னை அப்படித்தான் கூப்புடுவேன்”
“சரி விடு. இனிமே வேற பேரு வைக்கிறேன். இப்ப கீழே போய் எனக்கு பால் எடுத்துட்டு வா”
“கீழே இருந்து தானடி வந்த. குடிச்சுட்டு வர வேண்டிதானே?” பார்வையை லாப்டாப்பில் வைத்த படியே கேட்டான்.
“அது வந்து, அப்போ குடிக்கனும் போல இல்ல. இப்ப இருக்கு. போறியா இல்லையா?” கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
நிமிர்ந்து பார்த்து முறைத்தவன்,
“மனுஷன் வேலை செய்யறது கண்ணுக்கு தெரியல? போடி போய் குடிச்சுட்டு வா” என்றான்.
“இன்னிக்கு காலேஜ்ல ரொம்ப நடந்துட்டேன். அப்புறம் வேற ஹாஸ்பிட்டல் அங்க இங்கன்னு அலைச்சல். கால் வலிக்கிதுடா மாமா”
அவளின் மாமா எனும் மந்திர மகுடிக்கு மயங்கிய நாகமாய் ஊர்ந்து நெளிந்து கிச்சனுக்கு சென்றான் கார்த்திக். மேலே ரூமுக்கு வரும் போது, கதவு பூட்டி இருந்தது.
Last edited: