VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

எபி பாடல்கள்
அத்தியாயம் 13
சாமான்ய மக்கள் அறிந்திருக்காத ஜவுளி மாளிகை அது! பெரும் பணக்காரர்கள், வி.ஐ.பிகள், நடிகர்கள் என மேல் தட்டு மக்கள் மட்டுமே வந்து போகக் கூடிய இடமது! அங்கு விற்கப்படும் ஜவுளிகள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருந்தன. அதற்கேற்றது போல விலையோ, மூக்கின் மேல் விரல் என்ன, மூச்சிருக்கிறதா என என நம்மைப் போன்ற மக்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருக்கும்.
சக்தி அமரனும் அவன் தாய் சங்கரியும், பெண் வீட்டினர் வரவுக்காக அக்கடையின் வாசலில் காத்திருந்தனர். மகனிடம் ஏதும் பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்திருந்தார் சங்கரி.
“ம்மா”
பதில் இல்லை அவரிடம்.
“அம்மா!!!!”
“என்னடா?”
“இன்னும் அப்செட்டா இருந்தா எப்படிமா? தவமிருந்து பெத்த மகனோடக் கல்யாணம் வரப் போகுதேன்னு ஒரு கலகலப்பு இல்ல! ஒரு குதூகலம் இல்ல! ஓர் ஆனந்தம் இல்ல! வாட் இஸ் திஸ் மாம்!” எனக் கடிந்து கொண்டான் இவன்.
“கலகலப்பு, குதூகலம், ஆனந்தம்லாம் எப்படிடா வரும்! என்ன செய்யனும், ஏது செய்யனும்னு சிந்திச்சுத் திட்டமிடக் கூட டைம் குடுக்காம, இப்பவே வேணும் கல்யாணம்னு சாதிச்சிட்ட! சம்பந்தி வீட்டுல டைம் கேப்பாங்கன்னு பார்த்தா, அவங்களும் நீ ஊதுற மகுடிக்கு டான்ஸ் ஆடறாங்க! கடுப்பா இருக்குடா சக்தி!”
“ம்மா! உங்களோட வேலை, அழகா உடுத்திக்கிட்டு, நம்ம கடைல இருக்கற அற்புதமான நகை செட்டெல்லாம் மாட்டிக்கிட்டு, மணமேடைல தகதகன்னு நிக்க வேண்டியதுதான். மத்த வேலைலாம் நான் பார்த்துப்பேன்மா! ட்ரஸ்ட் மீ”
“என்னமோ போ! எல்லாத்துலயும் அவசரம் உனக்கு! பிறக்கறப்பயும், டாக்டர் சொன்னத விட ரெண்டு வாரம் முந்திக்கிட்டுப் பிறந்த! நான் இன்னும் நாள் இருக்கேன்னு, பீச் ரிசார்ட்ல உக்காந்து பீச்(peach) ஜூஸ் குடிச்சிட்டு இருந்தேன் அப்போ! உங்கப்பா பக்கத்துல அரை டவுசரோட உக்காந்துட்டு சன் பாத் எடுத்துட்டு இருந்தாரு! சட்டுன்னு வலி வந்திட, அந்த அரை டவுசரோடயே, ஒரு டீ ஷர்ட்ட மாட்டிக்கிட்டு, என்னைக் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் ஓடுனாரு! அப்போ ஓட ஆரம்பிச்ச மனுஷன், இன்னும் உனக்காக ஓடிட்டேத்தான் இருக்காரு! படவா!” என எப்பொழுதும் சொல்லும் கதையை அப்பொழுதும் சொன்னார்.
வாய் விட்டு நகைத்தவன்,
“எனக்கே கல்யாணம் ஆகப் போகுது! குழந்தை குட்டின்னு வரப் போகுது! இன்னும் நான் பொறந்த கதையைப் பேசிட்டு திரியறீங்களே ம்மா” என்றான்.
“உனக்குப் பேரனே வந்தாலும் இந்தக் கதைய சொல்லறத நான் நிறுத்த மாட்டேன்டா! அதெல்லாம் பெத்தவங்களோட சுகமான நினைவுகள்” என்றவரின் தோளணைத்துக் கொண்டான் சக்தி அமரன்.
“லவ் யூமா”
“ஹ்க்கும்! இப்போ வருவா பாரு மஞ்சு! அவள வேணும்னா கொஞ்சு! என்னை விட்டுருடா!”
அதற்கும் மகன்காரன் அப்படி ஒரு சிரிப்புச் சிரித்தான். வாஞ்சையுடன் அவனைப் பார்த்திருந்தார் சங்கரி.
கல்யாணத்தை அடுத்த மாதமே வைத்துக் கொள்வது எனப் பேசி முடிவெடுத்திருந்தார்கள். ஒரேடியாக இரு பெண்களின் திருமணத்தை ஒரே மேடையில், ஒரே நேரத்தில் வைத்து விடலாம் என்றார் சுப்பு ரத்தினம். சங்கரி ஒத்துக் கொள்ளவே இல்லை.
“அண்ணா! எங்களுக்கு ஒத்தை மகன். அவனோட கல்யாணம் அவன மட்டுமே ஃபோகஸ் பண்ணி இருக்கனும்! அதோட ரெண்டு மேடையில ஒன்னா வைக்கற கல்யாணத்துல ஒரு ஜோடிதான் சுபிட்சமா வாழ்வாங்க! இன்னொரு ஜோடிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டு இருக்கும். பிரச்சனை வர ஜோடில என் மகன் இருந்திடக் கூடாது! அந்த முத்தையாவ விட மூத்தவன் என் மகன். அதனால சக்தியோட கல்யாணம் முதல்ல நடக்கட்டும். அதே நாளுல அடுத்த முகூர்த்தத்துல வேணும்னா இன்னொரு கல்யாணம் நடத்திக்கோங்க!” என ஒரே போடாய்ப் போட்டு விட்டார்.
அருள்மணியும் இந்த விஷயத்தில் மனைவி பக்கம் இருந்து கொண்டார். மந்திரியாய் இருந்தாலும், மாப்பிள்ளை வீடு என வந்து விட்டால் மரியாதைக் கொடுத்துத்தானே ஆக வேண்டும். சுப்பு ரத்தினமும் சங்கரியின் பேச்சுக்கு ஒத்துக் கொண்டு விட்டார்.
பெரிய மகளின் கிறுக்குத்தனங்களைத்தான் பார்க்கிறாரே! ஆகையால் சீக்கிரமாகவே இந்தத் திருமணங்களை முடித்து விட்டு, தேர்த்தலுக்கு ஆயத்தமாக முடிவெடுத்து விட்டார் அவர். திருமணப் பரிசாக மருமகனை அடுத்து வரும் வார்ட் கவுன்சிலர் பதவிக்கு நாமினியாக்க ஏற்பாடுகளைப் பார்த்து வைத்திருந்தார்.
கடை வாசலில் கார் வந்து நிற்க, அம்மா மகனின் பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது. ஆவலாக காரில் இருந்து இறங்குபவர்களைப் பார்த்திருந்தான் இவன். மாஸ்க் அணிந்து கொண்டு வந்த மஞ்சுவைப் பார்த்ததும் இவன் முகம் வருத்தத்தைக் தத்தெடுத்துக் கொண்டது.
அன்றைய தினம் மஞ்சரி, ரஞ்சனியை அறைந்திருக்க, தங்கையின் மோதிரத்தில் இருந்த கல் பட்டு அக்காவின் உதடு கிழிந்து இரத்தம் கொட்டியது. இரத்தம் இவன் சட்டையில் வழிய, வேகமாய் தன்னிடமிருந்து ரஞ்சனியை அப்புறப்படுத்த முயன்றான் சக்தி. அந்தக் குரங்குக் குட்டியை உதற முயன்ற வேகத்தில் இவன் கை முட்டி, பக்கத்தில் நின்றிருந்த மஞ்சரியின் மூக்கில் இடித்திருந்தது. அம்மாவென அவள் கத்த, இவனுக்குப் பதறி விட்டது.
“பேபி! பேபி” எனப் பதறியவன், தன்னிடமிருந்து பிரித்து ரஞ்சனியைத் பக்கத்தில் இருந்து சோபாவில் தள்ளி விட்டு இவளிடம் ஓடி வந்தான்.
“அச்சோ! சாரிடா! சாரி! அவள தள்ளி விடற வேகத்துல இருந்தேனே தவிர நீ கிட்ட வருவன்னு நினைக்கல! அச்சோ! மாமா! சீக்கிரம் ஃபர்ஸ்ட் அய்ட் கிட் கொண்டு வாங்க! என் பேபிக்கு மூக்குல இரத்தம் வருது! வேகமா டாக்டருக்குப் போன் போடுங்க” என ஆர்ப்பாட்டம் செய்து விட்டான்.
டாக்டர் வருவதற்குள் இவன் சின்னவளுக்கு முதலுதவி செய்ய, பெரியவளை சுப்பு ரத்தினம் கவனித்துக் கொண்டார்.
“ஏன் அடிச்சா அவ? ஏன்?” எனக் கத்திக் கொண்டே இருந்தாள் ரஞ்சனி.
“அவளோட புருஷன நீ எடுத்துக்கப் பார்த்தா சும்மா இருப்பாளா கண்ணு! ஏன்மா இப்படிலாம் பண்ணுற?” என நொந்து போய் பேசினார் சுப்பு ரத்தினம்.
“எங்கம்மா புருஷன இவ அம்மா எடுத்துக்கலையா? அது மட்டும் ஓகேவா?” எனக் குறுக்குக் கேள்விக் கேட்டாள் ரஞ்சனி.
“உங்கம்மா செத்துட்டாங்கடி! அதான் எங்கம்மா உன்னைப் பார்க்கனும்னு அப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க! அவங்க பண்ண தியாகத்துக்கு நல்லப் பாடம் கத்துக் குடுத்துட்ட நீ!” எனக் கத்தினாள் மஞ்சரி.
“அப்போ நீயும் செத்துப்போ! சக்திய நான் எடுத்துக்கறேன்” எனச் சொல்லிக் கோணலாகச் சிரித்தாள் ரஞ்சனி.
“ரஞ்சனி” என அதட்டினார் அமைச்சர்.
ரங்க நாயகியோ இரு மகள்களின் சண்டையில் கண்ணீர் உகுத்தபடி நின்றார்.
ரஞ்சனியோ குதூகலமாக,
“இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக” எனச் சக்தியைக் காட்டிப் பாடினாள்.
“செருப்புப் பிஞ்சிடும் ராஸ்கல்” எனப் பொங்கிய சக்தி, மஞ்சரிக்கு டாக்டர் வந்து ட்ரீட்மெண்ட் செய்து முடித்ததும் கிளம்பி விட்டான்.
அடிக்கடி போன் செய்து பேசினாலும், மஞ்சரி வெளியே வரப் பிரியப் படாததால் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை! வீட்டிற்குப் போனால் அந்தப் பிசாசு இருப்பாளே என வீட்டிற்கும் செல்லவில்லை இவன். அதன் பிறகு இப்பொழுதுதான் நேரில் பார்க்கிறான் மஞ்சுவை.
வேகமாய் அவளை நெருங்கியவன், கைப் பற்றிக் கொண்டான்.
“எப்படிடா இருக்க? மூக்கு சரியாகிடுச்சா?” எனக் கேட்டான் சக்தி.
அடிக்கடி போனில் கேட்பதுதான்! வீடியோ கால் வரச் சொல்லி சரியாகி விட்டதா என ஆராய்வான். இவன் கைப்பட்டு சில்லி மூக்கு உடைந்து ரத்தம் வந்திருந்தது மஞ்சரிக்கு! இப்பொழுது குணமாகி விட்டாலும், இன்னும் மூக்கில் லேசாய் சிவப்பு இருக்கத்தான் செய்தது. அதை மறைக்கத்தான் அந்த மாஸ்க்.

எபி பாடல்கள்
அத்தியாயம் 13
சாமான்ய மக்கள் அறிந்திருக்காத ஜவுளி மாளிகை அது! பெரும் பணக்காரர்கள், வி.ஐ.பிகள், நடிகர்கள் என மேல் தட்டு மக்கள் மட்டுமே வந்து போகக் கூடிய இடமது! அங்கு விற்கப்படும் ஜவுளிகள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருந்தன. அதற்கேற்றது போல விலையோ, மூக்கின் மேல் விரல் என்ன, மூச்சிருக்கிறதா என என நம்மைப் போன்ற மக்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருக்கும்.
சக்தி அமரனும் அவன் தாய் சங்கரியும், பெண் வீட்டினர் வரவுக்காக அக்கடையின் வாசலில் காத்திருந்தனர். மகனிடம் ஏதும் பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்திருந்தார் சங்கரி.
“ம்மா”
பதில் இல்லை அவரிடம்.
“அம்மா!!!!”
“என்னடா?”
“இன்னும் அப்செட்டா இருந்தா எப்படிமா? தவமிருந்து பெத்த மகனோடக் கல்யாணம் வரப் போகுதேன்னு ஒரு கலகலப்பு இல்ல! ஒரு குதூகலம் இல்ல! ஓர் ஆனந்தம் இல்ல! வாட் இஸ் திஸ் மாம்!” எனக் கடிந்து கொண்டான் இவன்.
“கலகலப்பு, குதூகலம், ஆனந்தம்லாம் எப்படிடா வரும்! என்ன செய்யனும், ஏது செய்யனும்னு சிந்திச்சுத் திட்டமிடக் கூட டைம் குடுக்காம, இப்பவே வேணும் கல்யாணம்னு சாதிச்சிட்ட! சம்பந்தி வீட்டுல டைம் கேப்பாங்கன்னு பார்த்தா, அவங்களும் நீ ஊதுற மகுடிக்கு டான்ஸ் ஆடறாங்க! கடுப்பா இருக்குடா சக்தி!”
“ம்மா! உங்களோட வேலை, அழகா உடுத்திக்கிட்டு, நம்ம கடைல இருக்கற அற்புதமான நகை செட்டெல்லாம் மாட்டிக்கிட்டு, மணமேடைல தகதகன்னு நிக்க வேண்டியதுதான். மத்த வேலைலாம் நான் பார்த்துப்பேன்மா! ட்ரஸ்ட் மீ”
“என்னமோ போ! எல்லாத்துலயும் அவசரம் உனக்கு! பிறக்கறப்பயும், டாக்டர் சொன்னத விட ரெண்டு வாரம் முந்திக்கிட்டுப் பிறந்த! நான் இன்னும் நாள் இருக்கேன்னு, பீச் ரிசார்ட்ல உக்காந்து பீச்(peach) ஜூஸ் குடிச்சிட்டு இருந்தேன் அப்போ! உங்கப்பா பக்கத்துல அரை டவுசரோட உக்காந்துட்டு சன் பாத் எடுத்துட்டு இருந்தாரு! சட்டுன்னு வலி வந்திட, அந்த அரை டவுசரோடயே, ஒரு டீ ஷர்ட்ட மாட்டிக்கிட்டு, என்னைக் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் ஓடுனாரு! அப்போ ஓட ஆரம்பிச்ச மனுஷன், இன்னும் உனக்காக ஓடிட்டேத்தான் இருக்காரு! படவா!” என எப்பொழுதும் சொல்லும் கதையை அப்பொழுதும் சொன்னார்.
வாய் விட்டு நகைத்தவன்,
“எனக்கே கல்யாணம் ஆகப் போகுது! குழந்தை குட்டின்னு வரப் போகுது! இன்னும் நான் பொறந்த கதையைப் பேசிட்டு திரியறீங்களே ம்மா” என்றான்.
“உனக்குப் பேரனே வந்தாலும் இந்தக் கதைய சொல்லறத நான் நிறுத்த மாட்டேன்டா! அதெல்லாம் பெத்தவங்களோட சுகமான நினைவுகள்” என்றவரின் தோளணைத்துக் கொண்டான் சக்தி அமரன்.
“லவ் யூமா”
“ஹ்க்கும்! இப்போ வருவா பாரு மஞ்சு! அவள வேணும்னா கொஞ்சு! என்னை விட்டுருடா!”
அதற்கும் மகன்காரன் அப்படி ஒரு சிரிப்புச் சிரித்தான். வாஞ்சையுடன் அவனைப் பார்த்திருந்தார் சங்கரி.
கல்யாணத்தை அடுத்த மாதமே வைத்துக் கொள்வது எனப் பேசி முடிவெடுத்திருந்தார்கள். ஒரேடியாக இரு பெண்களின் திருமணத்தை ஒரே மேடையில், ஒரே நேரத்தில் வைத்து விடலாம் என்றார் சுப்பு ரத்தினம். சங்கரி ஒத்துக் கொள்ளவே இல்லை.
“அண்ணா! எங்களுக்கு ஒத்தை மகன். அவனோட கல்யாணம் அவன மட்டுமே ஃபோகஸ் பண்ணி இருக்கனும்! அதோட ரெண்டு மேடையில ஒன்னா வைக்கற கல்யாணத்துல ஒரு ஜோடிதான் சுபிட்சமா வாழ்வாங்க! இன்னொரு ஜோடிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டு இருக்கும். பிரச்சனை வர ஜோடில என் மகன் இருந்திடக் கூடாது! அந்த முத்தையாவ விட மூத்தவன் என் மகன். அதனால சக்தியோட கல்யாணம் முதல்ல நடக்கட்டும். அதே நாளுல அடுத்த முகூர்த்தத்துல வேணும்னா இன்னொரு கல்யாணம் நடத்திக்கோங்க!” என ஒரே போடாய்ப் போட்டு விட்டார்.
அருள்மணியும் இந்த விஷயத்தில் மனைவி பக்கம் இருந்து கொண்டார். மந்திரியாய் இருந்தாலும், மாப்பிள்ளை வீடு என வந்து விட்டால் மரியாதைக் கொடுத்துத்தானே ஆக வேண்டும். சுப்பு ரத்தினமும் சங்கரியின் பேச்சுக்கு ஒத்துக் கொண்டு விட்டார்.
பெரிய மகளின் கிறுக்குத்தனங்களைத்தான் பார்க்கிறாரே! ஆகையால் சீக்கிரமாகவே இந்தத் திருமணங்களை முடித்து விட்டு, தேர்த்தலுக்கு ஆயத்தமாக முடிவெடுத்து விட்டார் அவர். திருமணப் பரிசாக மருமகனை அடுத்து வரும் வார்ட் கவுன்சிலர் பதவிக்கு நாமினியாக்க ஏற்பாடுகளைப் பார்த்து வைத்திருந்தார்.
கடை வாசலில் கார் வந்து நிற்க, அம்மா மகனின் பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது. ஆவலாக காரில் இருந்து இறங்குபவர்களைப் பார்த்திருந்தான் இவன். மாஸ்க் அணிந்து கொண்டு வந்த மஞ்சுவைப் பார்த்ததும் இவன் முகம் வருத்தத்தைக் தத்தெடுத்துக் கொண்டது.
அன்றைய தினம் மஞ்சரி, ரஞ்சனியை அறைந்திருக்க, தங்கையின் மோதிரத்தில் இருந்த கல் பட்டு அக்காவின் உதடு கிழிந்து இரத்தம் கொட்டியது. இரத்தம் இவன் சட்டையில் வழிய, வேகமாய் தன்னிடமிருந்து ரஞ்சனியை அப்புறப்படுத்த முயன்றான் சக்தி. அந்தக் குரங்குக் குட்டியை உதற முயன்ற வேகத்தில் இவன் கை முட்டி, பக்கத்தில் நின்றிருந்த மஞ்சரியின் மூக்கில் இடித்திருந்தது. அம்மாவென அவள் கத்த, இவனுக்குப் பதறி விட்டது.
“பேபி! பேபி” எனப் பதறியவன், தன்னிடமிருந்து பிரித்து ரஞ்சனியைத் பக்கத்தில் இருந்து சோபாவில் தள்ளி விட்டு இவளிடம் ஓடி வந்தான்.
“அச்சோ! சாரிடா! சாரி! அவள தள்ளி விடற வேகத்துல இருந்தேனே தவிர நீ கிட்ட வருவன்னு நினைக்கல! அச்சோ! மாமா! சீக்கிரம் ஃபர்ஸ்ட் அய்ட் கிட் கொண்டு வாங்க! என் பேபிக்கு மூக்குல இரத்தம் வருது! வேகமா டாக்டருக்குப் போன் போடுங்க” என ஆர்ப்பாட்டம் செய்து விட்டான்.
டாக்டர் வருவதற்குள் இவன் சின்னவளுக்கு முதலுதவி செய்ய, பெரியவளை சுப்பு ரத்தினம் கவனித்துக் கொண்டார்.
“ஏன் அடிச்சா அவ? ஏன்?” எனக் கத்திக் கொண்டே இருந்தாள் ரஞ்சனி.
“அவளோட புருஷன நீ எடுத்துக்கப் பார்த்தா சும்மா இருப்பாளா கண்ணு! ஏன்மா இப்படிலாம் பண்ணுற?” என நொந்து போய் பேசினார் சுப்பு ரத்தினம்.
“எங்கம்மா புருஷன இவ அம்மா எடுத்துக்கலையா? அது மட்டும் ஓகேவா?” எனக் குறுக்குக் கேள்விக் கேட்டாள் ரஞ்சனி.
“உங்கம்மா செத்துட்டாங்கடி! அதான் எங்கம்மா உன்னைப் பார்க்கனும்னு அப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க! அவங்க பண்ண தியாகத்துக்கு நல்லப் பாடம் கத்துக் குடுத்துட்ட நீ!” எனக் கத்தினாள் மஞ்சரி.
“அப்போ நீயும் செத்துப்போ! சக்திய நான் எடுத்துக்கறேன்” எனச் சொல்லிக் கோணலாகச் சிரித்தாள் ரஞ்சனி.
“ரஞ்சனி” என அதட்டினார் அமைச்சர்.
ரங்க நாயகியோ இரு மகள்களின் சண்டையில் கண்ணீர் உகுத்தபடி நின்றார்.
ரஞ்சனியோ குதூகலமாக,
“இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக” எனச் சக்தியைக் காட்டிப் பாடினாள்.
“செருப்புப் பிஞ்சிடும் ராஸ்கல்” எனப் பொங்கிய சக்தி, மஞ்சரிக்கு டாக்டர் வந்து ட்ரீட்மெண்ட் செய்து முடித்ததும் கிளம்பி விட்டான்.
அடிக்கடி போன் செய்து பேசினாலும், மஞ்சரி வெளியே வரப் பிரியப் படாததால் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை! வீட்டிற்குப் போனால் அந்தப் பிசாசு இருப்பாளே என வீட்டிற்கும் செல்லவில்லை இவன். அதன் பிறகு இப்பொழுதுதான் நேரில் பார்க்கிறான் மஞ்சுவை.
வேகமாய் அவளை நெருங்கியவன், கைப் பற்றிக் கொண்டான்.
“எப்படிடா இருக்க? மூக்கு சரியாகிடுச்சா?” எனக் கேட்டான் சக்தி.
அடிக்கடி போனில் கேட்பதுதான்! வீடியோ கால் வரச் சொல்லி சரியாகி விட்டதா என ஆராய்வான். இவன் கைப்பட்டு சில்லி மூக்கு உடைந்து ரத்தம் வந்திருந்தது மஞ்சரிக்கு! இப்பொழுது குணமாகி விட்டாலும், இன்னும் மூக்கில் லேசாய் சிவப்பு இருக்கத்தான் செய்தது. அதை மறைக்கத்தான் அந்த மாஸ்க்.