VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

எபி பாடல்
செம்மையா புடிக்கும் இந்தப் பாட்டு! டபுள் மீனிங்ல இருந்தாலும், நம்ம அனி பேபி கலக்கிருப்பான்!
அத்தியாயம் 14
பெண்கள் இருவரின் திருமணமும் ஒரே நாளில் நடக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார் சுப்பு ரத்தினம். காலை முகூர்த்தம் சின்னவளுக்கும், மாலை முகூர்த்தம் பெரியவளுக்கும் என முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதற்காக மிகப் பிரமாண்டமான மண்டபம் ஒன்றை புக் செய்திருந்தார் அவர்.
“அவரோட பதவியையும் நாம கன்சிடர் பண்ணனும்மா! நமக்காக வேற டைமிங்ல கல்யாணம் வைக்க அவரு ஒத்துக்கிட்டாரு! அதை நாம மதிக்கனும்ல! அவர் சொல்ற மண்டபத்துலயே கல்யாணத்த வச்சிக்கலாம்மா! மண்டபம் அவர் பார்த்ததா இருந்தாலும், ஏற்பாடுலாம் நாம பார்த்துப்போம்! சடங்கு, சாங்கியம் எல்லாம் நம்ம பக்கம் செய்யற மாதிரித்தான் செய்யப் போறோம்! மண்டபத்துக்கான செலவையும் அவர் கிட்ட குடுத்துடப் போறோம்! பிறகென்னம்மா பிரச்சனை!”
“பிரச்சனை ஒன்னும் இல்லடா சக்தி! உங்கப்பா பக்கம் ஜனக்கட்டு அதிகம். எல்லாரையும் நல்லபடி கவனிக்கனும்! அதோட பிஸ்னஸ் சர்கிள்ல இருந்து ப்ரேண்ட்ஸ், வாடிக்கையாளருங்கன்னு கூட்டம் இருக்கும்! அதான் யோசனையா இருக்கு. உங்க மாமனாரு பார்த்து வச்ச மண்டபம்னா, நாம எல்லாத்துக்கும் விட்டுக் குடுக்க வேண்டி இருக்கும். அவங்க சொல்றதுதான் சட்டமா வேற இருக்கும்! அதான் மொத்தமா நம்ம வீட்டுக் கல்யாணத்த நம்ம கைக்குள்ள வச்சிக்கலாம்னு தோணுச்சு”
“மாமா மண்டபம் பேசிருக்காரு! அவ்ளோதான்! வேற எதுலயும் அவங்கப் பக்கத்துல இருந்து ப்ரெஷர் வராது! அதுக்கு நான் கேரண்டி! நம்ம ஜனங்க எவ்ளோ பேர வேணும்னாலும் கூப்பிடுங்க! மண்டபத்துலயே ரூம் குடுங்க! பக்கத்துல ஹோட்டல் இருக்கு! அங்க கூட ரூம் போடுங்க! ஒன்னும் பிரச்சனை இல்லம்மா! காலைல நடக்கற எல்லாமே, மணமேடை அலங்காரத்துல இருந்து மணமாலை வரைக்கும் நம்மளோட பொறுப்புத்தான். அவர் சைட்ல என்ன செய்யனுமோ அத மட்டும்தான் அவர் செய்வாரு! என்ன கொஞ்சம் செக்கியூரிட்டிலாம் டைட்டா இருக்கும்! மினிஸ்ட்டர் வீட்டுக் கல்யாணம்னா சும்மாவாம்மா” என மூச்சைப் பிடித்துக் கொண்டுப் பேசினான் இவன்.
“அதான் சொல்றான்ல சங்கரி! சும்மா அவனைப் போட்டு டென்ஷன் பண்ணிட்டு இருக்க நீ! மாப்பிள்ளைடி அவன்! கொஞ்சம் அந்த ஃபீல அனுபவிக்க விடு!” என மகனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்தார் அருள்மணி.
“உடனே வந்து மூக்கை நீட்டிருங்க! எதுக்காகப் பேசறேன், என்னத்துக்காகப் பேசறேன்னு எதையும் யோசிக்காதீங்க! மகன் சொல்லிட்டா அதான் வேதவாக்கு! மகன் பிறக்கற வரைக்கும் சங்கரி என் பைங்கிளின்னு பின்னால சுத்தனீங்க! நானும் என் புருஷன் போல ஒரு மனுஷன் உண்டான்னு பூமி மேல கால் நிக்காம மிதந்துட்டு இருந்தேன்! இவன் வந்து பொறந்தான், பொண்டாட்டி ஆறிப் போன பழைய டீயா போய்ட்டேன்! ஆகாசத்துல மிதந்த என்னை படார்னு இழுத்து பாழுங் கிணத்துல தள்ளி விட்டுடீங்க! இந்த வீட்டுல நானு உங்க மகனுக்கு பாலாத்திக் குடுக்கவும், பேம்பர்ஸ் மாத்தி விடவும் மட்டுமே நேந்து விட்ட வேலைக்காரியா மாறிப் போய்ட்டேன்!”
“ம்மா! எப்பவோ மாத்தன பேம்பர்ஸ எல்லாம் இப்ப ஏன்மா இழுக்கற!”
“ஆமாடா! நான் எது பேசனாலும் உனக்கும் உங்கப்பாவுக்கும் காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்துன மாதிரித்தான் இருக்கும்! இனி மருமக வேற வரப் போறா! இப்பருந்தே வாய மூடிக்கப் பழகிடறேன்! நான் கட்டிக்கிட்டப் புருஷனும் சரியில்ல, பெத்துக்கிட்டப் புள்ளையும் சரியில்ல!” எனக் கோபித்துக் கொண்டு அறைக்குப் போய் விட்டார் சங்கரி.
“சங்கரி! ஏய் சங்கரி! பொசுக்குன்னு ஏன்டி கோச்சிக்கற! இரு பேசிக்கலாம்! சங்கு! சங்கி! சங்கி மங்கி!” என அவர் பின்னாலேயே ஓடினார் அருள்மணி.
அவரின் செல்ல அழைப்பான சங்கி மங்கி எப்பொழுதும் போல அன்றைக்கும் இவனுக்குப் பெரும் சிரிப்பை வரவழைத்தது.
இப்படியே சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் எனத் திருமண நாளும் நெருங்கி வந்தது. தனித் தனியாக வேறொரு நாள் ரிசப்ஷன் வைப்பது என முடிவெடுக்கப்பட்டிருந்தது இரு மணமகன் வீட்டிலும். ஆகையால் திருமணத்திற்கு முதல் நாள் இரவு வடநாட்டினர் போல இப்பொழுது தமிழ் நாட்டிலும் பிரபலமாகி வரும் சங்கீத் நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது.
சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் எனச் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர் அந்த நிகழ்வுக்கு. அதோடு பிரபலமாகி வரும் இசையமைப்பாளர் ஒருவரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது! ஆட்டம் பாட்டமெனத் திருமணக் களை வந்திருந்தது அவ்விடத்துக்கு.
சக்தி அமரனின் ஏற்பாட்டில் அந்த மண்டபமே சொர்க்கலோகம் போல ஜொலித்தது! ஒரிஜினல் பூக்களும், தங்கமாய் தகதகக்கும் அலங்காரப் பொருட்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த இடமே, தங்கம் விற்கும் குடும்பத்தின் தாத்பரியத்தை எடுத்துக் காட்டியது. மூன்று வேளையும் மணக்க மணக்க சூடான உணவு, நேரா நேரத்திற்கு காபி, ஜூஸ் என வந்திருந்தவர்கள் சிறப்பாகக் கவனிக்கப்பட்டனர்.
ரஞ்சனியை மணத்து கொள்ளப் போகும் முத்தையாவின் சொந்த பந்தங்கள் மஞ்சரியின் திருமணம் முடிந்ததும்தான் மண்டபத்திற்கு வந்து தங்குவதாக ஏற்பாடு! முத்தையாவும் அவன் குடும்பவும் மட்டும் அன்றே வந்திருந்தார்கள்.
“ஏன்டா மகனே அலைஞ்சிட்டே இருக்க! பாரு அந்தப் பையன! ஆட்டம் பாட்டம்னு கலக்கறான்! நாங்களாம் இல்லையா வேலையைப் பார்க்க! அதோட ஈவண்ட் மேனெஜ்மெண்ட் டீம வேற அப்பாயிண்ட் பண்ணிருக்க! அவங்க பார்க்க மாட்டாங்களா இதெல்லாம்! போ! போய் இந்த உடுப்ப மாத்திட்டு, ராஜா மாதிரி கிளம்பி வா! வந்து நீயும் ரெண்டு டான்ஸ போடு! நீ ஆடிப் பார்த்துப் பல நாள் ஆகிடுச்சு! மருமகள பாரு! உன்னையே ஏக்கமா பார்த்துட்டு உக்காதிருக்கு! போடா மகனே” எனச் சக்தியை அவனுக்கான அறைக்கு இழுத்துக் கொண்டுப் போனார் அருள்மணி.
“இப்போ என் ஆட்டம் முக்கியமாப்பா? நடக்கற ஏற்பாடுகள்ல எதாச்சும் சின்ன எரர் வந்தா கூட, உங்க வைஃப் டண்டணக்கா டான்ஸ் ஆடிருவாங்க!”
“அடப் போடா! என்னைக்கு அவ ஆடல சொல்லு! அவ பெர்பெஃக்டா இருக்கவும்தான்டா நாம பெப்பரெப்பேன்னு சுத்திட்டு இருக்கோம்! என்ன பிரச்சனைனாலும் அவ நம்ம பின்னாடி நின்னு பிடிச்சுத் தூக்கி விட்டுருவாடா மகனே! அம்மாவ பத்தி உனக்குத் தெரியாதா! நமக்காகவே வாழறவடா அவ! எதாச்சும் ஸ்ட்ரெஸ்ல சொன்னா, இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுடு! இப்போ போய் சமத்தா குளிச்சிட்டு, மாப்பிள்ளை கணக்கா வா” எனக் கதவைச் சாற்றி விட்டுப் போனார்.
புன்னகையுடன் குளித்து வந்தான் சக்தி அமரன். கோப்பர் வர்ணத்தில் பெண்கள் அணிவது போல டாப்ஸ் ஒன்று ஆண்களுக்கான பேஷனாக வெளி வந்திருந்தது! கழுத்திலும் கையிலும் வெள்ளை வர்ணத்தில் அழகிய பூ டிசைன் இருக்க, பேண்ட் வெள்ளை நிறத்தில் இருந்தது. உடையை அணிந்து மேலே இருந்த மூன்று பட்டன்களைப் போடாமல் விட்டவன், ஸ்டைலாய் முடியைச் சீவி விட்டான்.
அந்த நேரம் போன் அடித்தது. நண்பன் ரவீந்திரன் பெயர் தெரிய, அழைப்பை ஏற்றான் இவன்.
“மாப்புள்ள!”
“என்னடா?”
“நைட் பார்ட்டிக்கு எல்லாமே ரெடி! ஒரு ஹோட்டலோட டெரெஸ் சூவிட்ட புக் பண்ணிட்டேன்! வெளி ஆளுங்க கண்ணுப் படாம நமக்கான ப்ரைவட் பார்ட்டி! நம்ம பசங்க எல்லாம் வரானுங்க! தண்ணி, தம்மு, ஸ்ட்ரீப் டீஸ்(பெண் ஆட்டக்காரர்கள், ஆடிக் கொண்டே ஒவ்வொரு உடையாகக் கழட்டிப் போடுவது! வெளிநாட்டு ஆண்களின் பேச்சிலர் பார்ட்டியில் இது பெரும்பாலும் இருக்கும். இப்பொழுது நம் நாட்டிலும் இருக்கிறது! வெளியே தெரிவதில்லை! நம் நாட்டில் பெண்கள் கூட ஆண்கள் செய்யும் ஸ்ட்ரீப் டீஸ் அரேஞ் செய்வதாக கேள்வி!) எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டேன்! உன்னோட பேச்சிலர் டேவ பயங்கரமா செலிபிரேட் பண்ணறோம்! இன்னிக்கு ஒரு புடி!!!!” என ஆர்ப்பாட்டமாகக் கத்தினான்.
சக்திக்குப் புன்னகைப் பூத்தது.
“வரேன்டா! கொஞ்சம் லேட்டா வரேன்! நீங்க எனக்கு வேய்ட் பண்ணாம ஆரம்பிச்சிடுங்க!” என்றவன் அழைப்பை நிறுத்தி விட்டு மேல் மாடியில் இருந்து கீழே இறங்கினான்.

எபி பாடல்
செம்மையா புடிக்கும் இந்தப் பாட்டு! டபுள் மீனிங்ல இருந்தாலும், நம்ம அனி பேபி கலக்கிருப்பான்!
அத்தியாயம் 14
பெண்கள் இருவரின் திருமணமும் ஒரே நாளில் நடக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார் சுப்பு ரத்தினம். காலை முகூர்த்தம் சின்னவளுக்கும், மாலை முகூர்த்தம் பெரியவளுக்கும் என முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதற்காக மிகப் பிரமாண்டமான மண்டபம் ஒன்றை புக் செய்திருந்தார் அவர்.
“அவரோட பதவியையும் நாம கன்சிடர் பண்ணனும்மா! நமக்காக வேற டைமிங்ல கல்யாணம் வைக்க அவரு ஒத்துக்கிட்டாரு! அதை நாம மதிக்கனும்ல! அவர் சொல்ற மண்டபத்துலயே கல்யாணத்த வச்சிக்கலாம்மா! மண்டபம் அவர் பார்த்ததா இருந்தாலும், ஏற்பாடுலாம் நாம பார்த்துப்போம்! சடங்கு, சாங்கியம் எல்லாம் நம்ம பக்கம் செய்யற மாதிரித்தான் செய்யப் போறோம்! மண்டபத்துக்கான செலவையும் அவர் கிட்ட குடுத்துடப் போறோம்! பிறகென்னம்மா பிரச்சனை!”
“பிரச்சனை ஒன்னும் இல்லடா சக்தி! உங்கப்பா பக்கம் ஜனக்கட்டு அதிகம். எல்லாரையும் நல்லபடி கவனிக்கனும்! அதோட பிஸ்னஸ் சர்கிள்ல இருந்து ப்ரேண்ட்ஸ், வாடிக்கையாளருங்கன்னு கூட்டம் இருக்கும்! அதான் யோசனையா இருக்கு. உங்க மாமனாரு பார்த்து வச்ச மண்டபம்னா, நாம எல்லாத்துக்கும் விட்டுக் குடுக்க வேண்டி இருக்கும். அவங்க சொல்றதுதான் சட்டமா வேற இருக்கும்! அதான் மொத்தமா நம்ம வீட்டுக் கல்யாணத்த நம்ம கைக்குள்ள வச்சிக்கலாம்னு தோணுச்சு”
“மாமா மண்டபம் பேசிருக்காரு! அவ்ளோதான்! வேற எதுலயும் அவங்கப் பக்கத்துல இருந்து ப்ரெஷர் வராது! அதுக்கு நான் கேரண்டி! நம்ம ஜனங்க எவ்ளோ பேர வேணும்னாலும் கூப்பிடுங்க! மண்டபத்துலயே ரூம் குடுங்க! பக்கத்துல ஹோட்டல் இருக்கு! அங்க கூட ரூம் போடுங்க! ஒன்னும் பிரச்சனை இல்லம்மா! காலைல நடக்கற எல்லாமே, மணமேடை அலங்காரத்துல இருந்து மணமாலை வரைக்கும் நம்மளோட பொறுப்புத்தான். அவர் சைட்ல என்ன செய்யனுமோ அத மட்டும்தான் அவர் செய்வாரு! என்ன கொஞ்சம் செக்கியூரிட்டிலாம் டைட்டா இருக்கும்! மினிஸ்ட்டர் வீட்டுக் கல்யாணம்னா சும்மாவாம்மா” என மூச்சைப் பிடித்துக் கொண்டுப் பேசினான் இவன்.
“அதான் சொல்றான்ல சங்கரி! சும்மா அவனைப் போட்டு டென்ஷன் பண்ணிட்டு இருக்க நீ! மாப்பிள்ளைடி அவன்! கொஞ்சம் அந்த ஃபீல அனுபவிக்க விடு!” என மகனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்தார் அருள்மணி.
“உடனே வந்து மூக்கை நீட்டிருங்க! எதுக்காகப் பேசறேன், என்னத்துக்காகப் பேசறேன்னு எதையும் யோசிக்காதீங்க! மகன் சொல்லிட்டா அதான் வேதவாக்கு! மகன் பிறக்கற வரைக்கும் சங்கரி என் பைங்கிளின்னு பின்னால சுத்தனீங்க! நானும் என் புருஷன் போல ஒரு மனுஷன் உண்டான்னு பூமி மேல கால் நிக்காம மிதந்துட்டு இருந்தேன்! இவன் வந்து பொறந்தான், பொண்டாட்டி ஆறிப் போன பழைய டீயா போய்ட்டேன்! ஆகாசத்துல மிதந்த என்னை படார்னு இழுத்து பாழுங் கிணத்துல தள்ளி விட்டுடீங்க! இந்த வீட்டுல நானு உங்க மகனுக்கு பாலாத்திக் குடுக்கவும், பேம்பர்ஸ் மாத்தி விடவும் மட்டுமே நேந்து விட்ட வேலைக்காரியா மாறிப் போய்ட்டேன்!”
“ம்மா! எப்பவோ மாத்தன பேம்பர்ஸ எல்லாம் இப்ப ஏன்மா இழுக்கற!”
“ஆமாடா! நான் எது பேசனாலும் உனக்கும் உங்கப்பாவுக்கும் காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்துன மாதிரித்தான் இருக்கும்! இனி மருமக வேற வரப் போறா! இப்பருந்தே வாய மூடிக்கப் பழகிடறேன்! நான் கட்டிக்கிட்டப் புருஷனும் சரியில்ல, பெத்துக்கிட்டப் புள்ளையும் சரியில்ல!” எனக் கோபித்துக் கொண்டு அறைக்குப் போய் விட்டார் சங்கரி.
“சங்கரி! ஏய் சங்கரி! பொசுக்குன்னு ஏன்டி கோச்சிக்கற! இரு பேசிக்கலாம்! சங்கு! சங்கி! சங்கி மங்கி!” என அவர் பின்னாலேயே ஓடினார் அருள்மணி.
அவரின் செல்ல அழைப்பான சங்கி மங்கி எப்பொழுதும் போல அன்றைக்கும் இவனுக்குப் பெரும் சிரிப்பை வரவழைத்தது.
இப்படியே சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் எனத் திருமண நாளும் நெருங்கி வந்தது. தனித் தனியாக வேறொரு நாள் ரிசப்ஷன் வைப்பது என முடிவெடுக்கப்பட்டிருந்தது இரு மணமகன் வீட்டிலும். ஆகையால் திருமணத்திற்கு முதல் நாள் இரவு வடநாட்டினர் போல இப்பொழுது தமிழ் நாட்டிலும் பிரபலமாகி வரும் சங்கீத் நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது.
சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் எனச் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர் அந்த நிகழ்வுக்கு. அதோடு பிரபலமாகி வரும் இசையமைப்பாளர் ஒருவரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது! ஆட்டம் பாட்டமெனத் திருமணக் களை வந்திருந்தது அவ்விடத்துக்கு.
சக்தி அமரனின் ஏற்பாட்டில் அந்த மண்டபமே சொர்க்கலோகம் போல ஜொலித்தது! ஒரிஜினல் பூக்களும், தங்கமாய் தகதகக்கும் அலங்காரப் பொருட்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த இடமே, தங்கம் விற்கும் குடும்பத்தின் தாத்பரியத்தை எடுத்துக் காட்டியது. மூன்று வேளையும் மணக்க மணக்க சூடான உணவு, நேரா நேரத்திற்கு காபி, ஜூஸ் என வந்திருந்தவர்கள் சிறப்பாகக் கவனிக்கப்பட்டனர்.
ரஞ்சனியை மணத்து கொள்ளப் போகும் முத்தையாவின் சொந்த பந்தங்கள் மஞ்சரியின் திருமணம் முடிந்ததும்தான் மண்டபத்திற்கு வந்து தங்குவதாக ஏற்பாடு! முத்தையாவும் அவன் குடும்பவும் மட்டும் அன்றே வந்திருந்தார்கள்.
“ஏன்டா மகனே அலைஞ்சிட்டே இருக்க! பாரு அந்தப் பையன! ஆட்டம் பாட்டம்னு கலக்கறான்! நாங்களாம் இல்லையா வேலையைப் பார்க்க! அதோட ஈவண்ட் மேனெஜ்மெண்ட் டீம வேற அப்பாயிண்ட் பண்ணிருக்க! அவங்க பார்க்க மாட்டாங்களா இதெல்லாம்! போ! போய் இந்த உடுப்ப மாத்திட்டு, ராஜா மாதிரி கிளம்பி வா! வந்து நீயும் ரெண்டு டான்ஸ போடு! நீ ஆடிப் பார்த்துப் பல நாள் ஆகிடுச்சு! மருமகள பாரு! உன்னையே ஏக்கமா பார்த்துட்டு உக்காதிருக்கு! போடா மகனே” எனச் சக்தியை அவனுக்கான அறைக்கு இழுத்துக் கொண்டுப் போனார் அருள்மணி.
“இப்போ என் ஆட்டம் முக்கியமாப்பா? நடக்கற ஏற்பாடுகள்ல எதாச்சும் சின்ன எரர் வந்தா கூட, உங்க வைஃப் டண்டணக்கா டான்ஸ் ஆடிருவாங்க!”
“அடப் போடா! என்னைக்கு அவ ஆடல சொல்லு! அவ பெர்பெஃக்டா இருக்கவும்தான்டா நாம பெப்பரெப்பேன்னு சுத்திட்டு இருக்கோம்! என்ன பிரச்சனைனாலும் அவ நம்ம பின்னாடி நின்னு பிடிச்சுத் தூக்கி விட்டுருவாடா மகனே! அம்மாவ பத்தி உனக்குத் தெரியாதா! நமக்காகவே வாழறவடா அவ! எதாச்சும் ஸ்ட்ரெஸ்ல சொன்னா, இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுடு! இப்போ போய் சமத்தா குளிச்சிட்டு, மாப்பிள்ளை கணக்கா வா” எனக் கதவைச் சாற்றி விட்டுப் போனார்.
புன்னகையுடன் குளித்து வந்தான் சக்தி அமரன். கோப்பர் வர்ணத்தில் பெண்கள் அணிவது போல டாப்ஸ் ஒன்று ஆண்களுக்கான பேஷனாக வெளி வந்திருந்தது! கழுத்திலும் கையிலும் வெள்ளை வர்ணத்தில் அழகிய பூ டிசைன் இருக்க, பேண்ட் வெள்ளை நிறத்தில் இருந்தது. உடையை அணிந்து மேலே இருந்த மூன்று பட்டன்களைப் போடாமல் விட்டவன், ஸ்டைலாய் முடியைச் சீவி விட்டான்.
அந்த நேரம் போன் அடித்தது. நண்பன் ரவீந்திரன் பெயர் தெரிய, அழைப்பை ஏற்றான் இவன்.
“மாப்புள்ள!”
“என்னடா?”
“நைட் பார்ட்டிக்கு எல்லாமே ரெடி! ஒரு ஹோட்டலோட டெரெஸ் சூவிட்ட புக் பண்ணிட்டேன்! வெளி ஆளுங்க கண்ணுப் படாம நமக்கான ப்ரைவட் பார்ட்டி! நம்ம பசங்க எல்லாம் வரானுங்க! தண்ணி, தம்மு, ஸ்ட்ரீப் டீஸ்(பெண் ஆட்டக்காரர்கள், ஆடிக் கொண்டே ஒவ்வொரு உடையாகக் கழட்டிப் போடுவது! வெளிநாட்டு ஆண்களின் பேச்சிலர் பார்ட்டியில் இது பெரும்பாலும் இருக்கும். இப்பொழுது நம் நாட்டிலும் இருக்கிறது! வெளியே தெரிவதில்லை! நம் நாட்டில் பெண்கள் கூட ஆண்கள் செய்யும் ஸ்ட்ரீப் டீஸ் அரேஞ் செய்வதாக கேள்வி!) எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டேன்! உன்னோட பேச்சிலர் டேவ பயங்கரமா செலிபிரேட் பண்ணறோம்! இன்னிக்கு ஒரு புடி!!!!” என ஆர்ப்பாட்டமாகக் கத்தினான்.
சக்திக்குப் புன்னகைப் பூத்தது.
“வரேன்டா! கொஞ்சம் லேட்டா வரேன்! நீங்க எனக்கு வேய்ட் பண்ணாம ஆரம்பிச்சிடுங்க!” என்றவன் அழைப்பை நிறுத்தி விட்டு மேல் மாடியில் இருந்து கீழே இறங்கினான்.
Last edited: