VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

எபி பாடல்
இந்தப் பாட்டுல எஸ்.பி.பி தேன் மழை நீ ஹோய்னும் தேவதை நீ ஹோய்னும் சொல்றப்ப யப்பா, மனசு அப்படியே மயங்கும்!!! கேட்டுப் பாருங்களேன்!!!
அத்தியாயம் 15
“உல்லாசம் ஆயிரம்
உன் பார்வைத் தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்” எனப் பின்னாலிருந்து கேட்டக் குரலில் முகமெல்லாம் வெட்கப் பூக்கள் பூத்தது சங்கரிக்கு.
“தோ! வந்துட்டாரே உன் ரோமியோ! இவ்ளோ மாசமா பின்னாடி லோ லோன்னு சுத்தறாரே, போய் பேசினாத்தான் என்னவாம்! அநியாயம் பண்ணறடி நீ”
“வேணாம் தில்லை! ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்வாங்க! அந்த எள்ளுருண்டைக்கே வழியத்துக் கிடக்கோம் நாங்க! எனக்கெல்லாம் இந்த மைனர் வீட்டுக் கன்னுக்குட்டி சரிப்பட்டு வராது! நான் காலேஜூக்கு படிக்க வரதே உங்கப்பாவோட தயவுனால! ஒழுங்கா படிச்சமா, குடும்பத்த முன்னேத்தனமான்னு இருக்கனும்! இந்தக் காதல், கத்தரிக்காய்லாம் நான் கனவுல கூட நினைக்கக் கூடாதுடி” என்றவளின் குரலில் அப்படி ஒரு நிராசை.
ஆரம்பத்தில் சங்கரி தன்னைச் சுற்றி வரும் பணக்கார வீட்டு அருள்மணியைக் கண்டுக் கொள்ளாமல்தான் இருந்தாள். இவள் பக்கத்தில் இருந்து எந்தப் பதிலும் வராமல் போனாலும் கூட, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் எனப் போய் விடாமல், பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்கும் அருள்மணியின் மேல் லேசாய் ஈர்ப்பு வரத்தான் செய்தது இவளுக்கு. அதோடு பார்க்கும் போதெல்லாம் கண்களாலேயே காதலைக் கடத்தும் அவன் கண்ணியம் இவளை அலைபாய வைத்தது! வேண்டாம் என அடக்கினாலும், அவன் பக்கம் மனம் சாயத்தான் செய்தது. தங்களது ஏழ்மையையும், மூத்தவளாய் தனக்கிருக்கும் பொறுப்பையும் எண்ணி நெஞ்சக் கதவை இறுக்க மூடிக் கொண்டாள்.
தில்லையின் வீட்டில்தான் கார் ட்ரைவராக வேலைப் பார்த்தார் சங்கரியின் தந்தை. மூத்தப் பெண் சங்கரி. அவளுக்குக் கீழ் ஆண் ஒன்றும் பெண் இரண்டுமாய் உடன் பிறந்தவர்கள் இருந்தார்கள். அவள் தந்தை எடுக்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே பத்தவில்லை. சங்கரியின் அம்மாவும் கூட தொழிற்சாலை ஒன்றில் வேலைப் பார்த்தார். தில்லை மற்றும் அவள் தங்கை ரங்க நாயகி உபயோகித்தப் பழையத் துணிகளை அணிந்து வளர்ந்தவர்கள்தான் சங்கரியும் அவள் உடன் பிறப்புகளும்.
லட்சுமி வாசம் செய்யாத வீட்டில் சரஸ்வதியின் கடாட்சம் மட்டும் வஞ்சனையில்லாமல் கிடைத்தது. சங்கரி படிப்பில் கெட்டியாக இருந்தாள். ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வந்தும் குடும்ப சூழ்நிலையால் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். தில்லைத்தான் தன் தந்தையிடம் பேசி, சங்கரி காலேஜ் போக உதவி செய்தாள். படித்தப் பள்ளி வேறு வேறாய் இருந்தாலும், அப்பாவோடு சில சமயங்கள் வீட்டுக்கு வரும் தன் வயதொத்த சங்கரியுடன் விளையாடி வளர்ந்தவள் தில்லை. ஆகவே தோழி மீது அவளுக்கு அன்பிருந்தது. அந்த வீட்டில் தில்லையும் அவள் அப்பாவும் ஒரு மாதிரி. பணம், அந்தஸ்த்து எல்லாம் பார்க்காமல் எல்லோரையும் சரி சமமாய் நடத்துவார்கள். ரங்க நாயகி அவள் அம்மாவைப் போல. தராதரம் பார்த்துத்தான் பழகுவாள். அதனாலேயே சங்கரி ரங்க நாயகியிடம் இருந்து ஒதுங்கியே இருந்து கொள்வாள்.
“இப்ப என்ன? அவனோட காதல் வேணாமா உனக்கு? அப்படின்னா பட்டுன்னு வெட்டி விடறதுதான் நல்லது! இப்படி பின்னால சுத்திட்டு இருக்க விடக் கூடாதுடி! நீ பேசாம இருந்தீனா, உனக்கும் பிடிச்சிருக்குன்னு நெனைச்சிக்குவாங்க!” என்ற தில்லை, தங்கள் பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தாள்.
“வேணா! ஒன்னும் பேசாத! போய்டலாம் தில்லை” என மெல்லியக் குரலில் சொல்லி தோழியின் கை பிடித்து இழுத்தாள் சங்கரி.
“சும்மா இருடி” என்ற தில்லை,
“ஹலோ மிஸ்டர் சுருட்டை முடி!” என அருளை அழைத்தாள்.
“சொல்லுங்க சிஸ்டர்!”
பேச்சு இவளிடம் இருந்தாலும் பார்வை முழுக்க சங்கரியிடம் இருந்தது அருளுக்கு. சுருண்டு முன்னால் வந்து விழுந்த முடியை ஸ்டைலாக டி. ராஜேந்தர் போல கோதிக் கொண்டான் அவன்.
ஓரக் கண்ணால் அதைக் கவனித்த சங்கரி, மயங்கப் பார்த்த மனதை கடிவாளமிட்டுக் கட்டி வைத்தாள்.
“சுருட்டை முடி உள்ளவங்கள எல்லாம் எங்க சங்கரிக்குப் புடிக்காதாம்! அதனால வேற ஆள போய் தேடுங்க லவ் பண்ண” என்றாள் தில்லை.
“அதை நீ சொல்லாதே! உன் ப்ரெண்டு சொல்லட்டும்!” என எகிறினான் தோழனோடு துணைக்கு வந்திருந்த சுப்பு ரத்தினம்.
“ஏய் ஒட்டடைக் குச்சி! உன்னை பேச்சு வார்த்தை நடத்த கூப்டாங்களா இப்போ?”
“ஏய் குண்டு பூசணி! உன்னை மட்டும் இவங்க நடுவுல பேச வெத்தலைப் பாக்கு வச்சு அழைச்சாங்களா?”
“யார பார்த்துடா பூசணின்னு கூப்ட?”
“யார பார்த்துடி ஒட்டடைக் குச்சின்னு கூப்பிட்ட?”
தில்லையும், சுப்பு ரத்தினமும் இவர்களுக்காக மோதிக் கொள்ள,
“வாடி போலாம்!” எனத் தில்லையின் கைப் பற்றி இழுத்தாள் சங்கரி.
“டேய்! லேடிஸ் கிட்ட என்னடா தகறாரு!” என சுப்புவின் தோளைப் பிடித்து இழுத்தான் அருள்.
அவர்களை விலக்க முனைந்த இவர்கள் இருவரின் கைகளும் லேசாய் உரசிக் கொண்டது! தம்தனதம்தனதம்தன என பின்னணி இசைக் கேட்க, அருளும் சங்கரியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபடி பிரமித்து நின்றனர். மற்ற இருவரும் போடும் சண்டை சங்கீதமாய் கேட்க, மெல்ல சங்கரியின் வலது கையைப் பற்றிக் கொண்டான் அருள். கையோடு உடலும் சேர்த்து நடுங்க, அருளை நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்து கொண்டாள் சங்கரி.
“சங்கரி”
“ஹ்ம்ம்”
“என்னை நிமிர்ந்து பாரேன்”
முடியாது எனத் தலை அசைத்தாள் சங்கரி.
“ப்ளீஸ் சங்கரி! இந்த ஒரு முறை நான் பேசறத கேட்டுடு! அதன் பிறகு நீ என்ன முடிவெடுத்தாலும் நான் ஒத்துக்கறேன்” என உருக்கமானக் குரலில் சொன்ன அருளை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் சங்கரி.
“இங்க ரொம்ப சத்தமா இருக்கு! அங்க ஓரமா போய் பேசலாமா?” என அருள் கேட்டதற்கு சரியென மெலிதாய் தலையாட்டினாள் பெண்.
“நீ என்ன பெரிய பருப்பாடி?”
“நீ என்ன பெரிய செருப்பாடா?” என சண்டைச் சூடுப் பிடித்துக் கொண்டிருக்க, இவர்கள் இருவரும் ஓரமாய் ஒதுங்கினார்கள்.
“சங்கரிம்மா”

எபி பாடல்
இந்தப் பாட்டுல எஸ்.பி.பி தேன் மழை நீ ஹோய்னும் தேவதை நீ ஹோய்னும் சொல்றப்ப யப்பா, மனசு அப்படியே மயங்கும்!!! கேட்டுப் பாருங்களேன்!!!
அத்தியாயம் 15
“உல்லாசம் ஆயிரம்
உன் பார்வைத் தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்” எனப் பின்னாலிருந்து கேட்டக் குரலில் முகமெல்லாம் வெட்கப் பூக்கள் பூத்தது சங்கரிக்கு.
“தோ! வந்துட்டாரே உன் ரோமியோ! இவ்ளோ மாசமா பின்னாடி லோ லோன்னு சுத்தறாரே, போய் பேசினாத்தான் என்னவாம்! அநியாயம் பண்ணறடி நீ”
“வேணாம் தில்லை! ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்வாங்க! அந்த எள்ளுருண்டைக்கே வழியத்துக் கிடக்கோம் நாங்க! எனக்கெல்லாம் இந்த மைனர் வீட்டுக் கன்னுக்குட்டி சரிப்பட்டு வராது! நான் காலேஜூக்கு படிக்க வரதே உங்கப்பாவோட தயவுனால! ஒழுங்கா படிச்சமா, குடும்பத்த முன்னேத்தனமான்னு இருக்கனும்! இந்தக் காதல், கத்தரிக்காய்லாம் நான் கனவுல கூட நினைக்கக் கூடாதுடி” என்றவளின் குரலில் அப்படி ஒரு நிராசை.
ஆரம்பத்தில் சங்கரி தன்னைச் சுற்றி வரும் பணக்கார வீட்டு அருள்மணியைக் கண்டுக் கொள்ளாமல்தான் இருந்தாள். இவள் பக்கத்தில் இருந்து எந்தப் பதிலும் வராமல் போனாலும் கூட, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் எனப் போய் விடாமல், பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்கும் அருள்மணியின் மேல் லேசாய் ஈர்ப்பு வரத்தான் செய்தது இவளுக்கு. அதோடு பார்க்கும் போதெல்லாம் கண்களாலேயே காதலைக் கடத்தும் அவன் கண்ணியம் இவளை அலைபாய வைத்தது! வேண்டாம் என அடக்கினாலும், அவன் பக்கம் மனம் சாயத்தான் செய்தது. தங்களது ஏழ்மையையும், மூத்தவளாய் தனக்கிருக்கும் பொறுப்பையும் எண்ணி நெஞ்சக் கதவை இறுக்க மூடிக் கொண்டாள்.
தில்லையின் வீட்டில்தான் கார் ட்ரைவராக வேலைப் பார்த்தார் சங்கரியின் தந்தை. மூத்தப் பெண் சங்கரி. அவளுக்குக் கீழ் ஆண் ஒன்றும் பெண் இரண்டுமாய் உடன் பிறந்தவர்கள் இருந்தார்கள். அவள் தந்தை எடுக்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே பத்தவில்லை. சங்கரியின் அம்மாவும் கூட தொழிற்சாலை ஒன்றில் வேலைப் பார்த்தார். தில்லை மற்றும் அவள் தங்கை ரங்க நாயகி உபயோகித்தப் பழையத் துணிகளை அணிந்து வளர்ந்தவர்கள்தான் சங்கரியும் அவள் உடன் பிறப்புகளும்.
லட்சுமி வாசம் செய்யாத வீட்டில் சரஸ்வதியின் கடாட்சம் மட்டும் வஞ்சனையில்லாமல் கிடைத்தது. சங்கரி படிப்பில் கெட்டியாக இருந்தாள். ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வந்தும் குடும்ப சூழ்நிலையால் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். தில்லைத்தான் தன் தந்தையிடம் பேசி, சங்கரி காலேஜ் போக உதவி செய்தாள். படித்தப் பள்ளி வேறு வேறாய் இருந்தாலும், அப்பாவோடு சில சமயங்கள் வீட்டுக்கு வரும் தன் வயதொத்த சங்கரியுடன் விளையாடி வளர்ந்தவள் தில்லை. ஆகவே தோழி மீது அவளுக்கு அன்பிருந்தது. அந்த வீட்டில் தில்லையும் அவள் அப்பாவும் ஒரு மாதிரி. பணம், அந்தஸ்த்து எல்லாம் பார்க்காமல் எல்லோரையும் சரி சமமாய் நடத்துவார்கள். ரங்க நாயகி அவள் அம்மாவைப் போல. தராதரம் பார்த்துத்தான் பழகுவாள். அதனாலேயே சங்கரி ரங்க நாயகியிடம் இருந்து ஒதுங்கியே இருந்து கொள்வாள்.
“இப்ப என்ன? அவனோட காதல் வேணாமா உனக்கு? அப்படின்னா பட்டுன்னு வெட்டி விடறதுதான் நல்லது! இப்படி பின்னால சுத்திட்டு இருக்க விடக் கூடாதுடி! நீ பேசாம இருந்தீனா, உனக்கும் பிடிச்சிருக்குன்னு நெனைச்சிக்குவாங்க!” என்ற தில்லை, தங்கள் பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தாள்.
“வேணா! ஒன்னும் பேசாத! போய்டலாம் தில்லை” என மெல்லியக் குரலில் சொல்லி தோழியின் கை பிடித்து இழுத்தாள் சங்கரி.
“சும்மா இருடி” என்ற தில்லை,
“ஹலோ மிஸ்டர் சுருட்டை முடி!” என அருளை அழைத்தாள்.
“சொல்லுங்க சிஸ்டர்!”
பேச்சு இவளிடம் இருந்தாலும் பார்வை முழுக்க சங்கரியிடம் இருந்தது அருளுக்கு. சுருண்டு முன்னால் வந்து விழுந்த முடியை ஸ்டைலாக டி. ராஜேந்தர் போல கோதிக் கொண்டான் அவன்.
ஓரக் கண்ணால் அதைக் கவனித்த சங்கரி, மயங்கப் பார்த்த மனதை கடிவாளமிட்டுக் கட்டி வைத்தாள்.
“சுருட்டை முடி உள்ளவங்கள எல்லாம் எங்க சங்கரிக்குப் புடிக்காதாம்! அதனால வேற ஆள போய் தேடுங்க லவ் பண்ண” என்றாள் தில்லை.
“அதை நீ சொல்லாதே! உன் ப்ரெண்டு சொல்லட்டும்!” என எகிறினான் தோழனோடு துணைக்கு வந்திருந்த சுப்பு ரத்தினம்.
“ஏய் ஒட்டடைக் குச்சி! உன்னை பேச்சு வார்த்தை நடத்த கூப்டாங்களா இப்போ?”
“ஏய் குண்டு பூசணி! உன்னை மட்டும் இவங்க நடுவுல பேச வெத்தலைப் பாக்கு வச்சு அழைச்சாங்களா?”
“யார பார்த்துடா பூசணின்னு கூப்ட?”
“யார பார்த்துடி ஒட்டடைக் குச்சின்னு கூப்பிட்ட?”
தில்லையும், சுப்பு ரத்தினமும் இவர்களுக்காக மோதிக் கொள்ள,
“வாடி போலாம்!” எனத் தில்லையின் கைப் பற்றி இழுத்தாள் சங்கரி.
“டேய்! லேடிஸ் கிட்ட என்னடா தகறாரு!” என சுப்புவின் தோளைப் பிடித்து இழுத்தான் அருள்.
அவர்களை விலக்க முனைந்த இவர்கள் இருவரின் கைகளும் லேசாய் உரசிக் கொண்டது! தம்தனதம்தனதம்தன என பின்னணி இசைக் கேட்க, அருளும் சங்கரியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபடி பிரமித்து நின்றனர். மற்ற இருவரும் போடும் சண்டை சங்கீதமாய் கேட்க, மெல்ல சங்கரியின் வலது கையைப் பற்றிக் கொண்டான் அருள். கையோடு உடலும் சேர்த்து நடுங்க, அருளை நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்து கொண்டாள் சங்கரி.
“சங்கரி”
“ஹ்ம்ம்”
“என்னை நிமிர்ந்து பாரேன்”
முடியாது எனத் தலை அசைத்தாள் சங்கரி.
“ப்ளீஸ் சங்கரி! இந்த ஒரு முறை நான் பேசறத கேட்டுடு! அதன் பிறகு நீ என்ன முடிவெடுத்தாலும் நான் ஒத்துக்கறேன்” என உருக்கமானக் குரலில் சொன்ன அருளை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் சங்கரி.
“இங்க ரொம்ப சத்தமா இருக்கு! அங்க ஓரமா போய் பேசலாமா?” என அருள் கேட்டதற்கு சரியென மெலிதாய் தலையாட்டினாள் பெண்.
“நீ என்ன பெரிய பருப்பாடி?”
“நீ என்ன பெரிய செருப்பாடா?” என சண்டைச் சூடுப் பிடித்துக் கொண்டிருக்க, இவர்கள் இருவரும் ஓரமாய் ஒதுங்கினார்கள்.
“சங்கரிம்மா”