எபி 16

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

எபி பாடல்

கதைல இந்தப் பாட்டு வரல. ஆனா பாட்டுக்கு முன்ன வரும் வசனம் இருக்கு. வரும்.வரும்.வரும்னு வரும் அந்த வசனம். யூடியூப்ல தேடனேன் கிடைக்கல! இந்தப் பாட்டு அவ்ளோ நல்லா இருக்கும். ஒரு வித சோகம் வந்து தாக்கிப் போகும். கேட்டுப் பாருங்களேன். குணா படத்துல எல்லாரும் கண்மணி பாட்டக் கேட்டா, நான் இந்தப் பாட்டத்தான் கேப்பேன்.



அத்தியாயம் 16



“மச்சி! மணியாச்சிடா! அப்பா வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு! கிளம்பலாம்டா!” என நண்பன் ரவீந்திரனை உசுப்பினான் சக்தி அமரன்.

“நைட் ஸ்டில் யங் மச்சி! நீ சக்தியா இல்ல சப்பாணியா? வீட்டுக்குப் போனும் ஆத்தா வைய்யும்னு பொலம்பிட்டு இருக்க! ம்ப்ச்! சுத்திலும் பாருடா! அந்தப் பொண்ண பாரு தொப்புள காட்டிட்டு எப்படி ஆடுதுன்னு! இந்தப் பொண்ண பாரு கைய மேல தூக்கி எப்படி சைட் போஸ் குடுக்குதுன்னு! தோ, தோ பாரேன் மினி ஸ்கேர்ட்ல வாழத்தண்டுக் கால! அச்சோ! அச்சோ! பிரம்மன் ஒரு கலாரசிகன்டா! பொண்ண படைக்கறப்ப மட்டும், போதை போட்டுருப்பான் போல!” எனக் கிறக்கமாகச் சொன்னான் இவன்.

நண்பன் காட்டிய திசையெல்லாம் இவன் பார்வையும் ஆர்வமாய் போனது.

அந்த நேரம் டீ.ஜே சிஸ்டத்தில் பாட்டு ஒலித்தது.

“பெண்கள் நாலு வகை

இன்பம் நூறு வகை வா!!!”

“போட்டான் பாரேன் சிட்டுவேஷன் சாங்க!”

“மச்சி! அப்பாவுக்குப் புடிச்ச பாட்டுடா! இந்தா போனு! நாலு ஸ்டேப் போடறேன்! ரெக்கார்ட் பண்ணு! ரீல்ஸ் ஏத்திடுவோம்” என உற்சாகமாக ஆடும் இடத்துக்குப் போனான் சக்தி.

ஒரே கூத்தும் கும்மாளமுமாக நேரத்தைக் கடத்தியவர்கள், ஒரு வழியாக அவ்விடத்தை விட்டுக் கிளம்பினார்கள். சக்தி, ரவீந்திரன் மற்றும் இன்னும் இரண்டு நண்பர்களும் அன்று பப்புக்கு வந்திருந்தார்கள். நண்பர்களில் சக்தி கொஞ்சம் தெளிவாக இருக்க, அவன்தான் காரை ஓட்டினான். கார் கண்ணாடியைத் திறந்து வைத்துக் கொண்டு, கத்திப் பாடியவாறு பயணித்தனர் நண்பர்கள் நால்வரும்.

“மச்சி! மச்சி! வருதுடா”

“என்னடா?”

“வாந்தி!!”

“அட நாசமாப் போனவனே!” எனக் கத்திய சக்தி, காரைச் சாலை ஓரமாக நிறுத்தினான்.

இறங்கி ஓடிய ரவீந்திரன், உவ்வேக் என வயிற்றில் உள்ளதை எல்லாம் சாலை ஓரமாகக் காலி செய்ய, தண்ணீர் பாட்டிலுடன் இறங்கினான் சக்தி. பின்னால் அமர்ந்திருந்த இருவரும் கூட தள்ளாடியபடி இறங்கினார்கள். நண்பனுக்கு முகம் கழுவி விட்டுத் தண்ணீரைப் புகட்டினான் சக்தி அமரன்.

“ஓசி குடின்னு ஓவரா குடிச்சா இப்படித்தான் மச்சி ஆகும்” எனக் கலாய்த்தான் இவன்.

“டேய் போடா! மாத்தி மாத்தித்தானே வாங்கித் தந்துக்கறோம்! ஓசி குடின்னு சொல்வியா என்னை?” என நண்பன் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான் ரவீ.

சிரிப்புடன் நால்வரும் அப்படியே குளிர் காற்றை அனுபவித்தபடி ஓரமாய் நின்றார்கள். அந்த நேரம் பைக்கில் வந்த இருவர், இவர்களை நோக்கி வந்தார்கள். யாரென்பது போல பார்த்தார்கள் நண்பர்கள் நால்வரும்.

“ரோட்டுல என்னங்கடா ஆட்டம்?” என அதில் ஒருவன் கேட்க,

“ஓரமாத்தானே நின்னுட்டு இருக்கோம்! என்ன ஆட்டத்தப் போட்டத பார்த்தீங்க?” எனக் கேட்டான் நண்பர்களில் ஒருவன்.

“சரக்கடிச்சிட்டு ரோட்டுல நின்னு வம்பு பண்றீங்களா?”

“டேய்! பார்த்து பேசுடா! யாருடா வம்பு பண்ணாங்க?” என எகிறினான் ரவீ.

பளாரென அவனுக்கு ஓர் அறை விழுந்தது. மற்றவர்கள் அதிர்ந்து போக, சக்தி அடித்தவனை நோக்கிப் பாய்ந்தான். அவனும் தாக்குதலுக்குத் தயாராக இருக்க, அடிதடி ஆரம்பித்தது அங்கே. அவர்கள் இருவர், இவர்கள் நால்வர். போதையில் இருந்ததால், சரமாரியாக அடி விழுந்தது நண்பர்கள் நால்வருக்கும். அந்த நேரம்தான் போலீஸ் ஜீப் வந்தது.

இறங்கி வந்த இன்ஸ்பெக்டரை பார்த்து இந்த இருவரும் சல்யூட் வைக்க, பிறகுதான் தெரிந்தது அவர்கள் மஃப்டியில் வந்த போலீசென! சக்தி தாங்கள் எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை எனச் சொல்லியும், அந்த இன்ஸ்பெக்டர் காது கொடுத்துக் கேட்கவில்லை. நண்பர்கள் நால்வரும் நாயைப் போல ஜூப்புக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள்.

ஸ்டேசனில் வைத்து, சட்டை பேண்ட்டையெல்லாம் உறுவிப் போட்டு, லத்தியால் பொழந்து கட்டி விட்டார்கள்.

“சார்! நாங்க ஒரு தப்பும் செய்யல” என எகிறிய சக்திக்கு மட்டும் இன்னும் பலமாய் கிடைத்தது பூசை.

இவர்கள் சொல்ல வந்ததைக் காது கொடுத்துக் கேட்காமல், வேண்டுமென்றே அடித்துத் துவைத்தார்கள். சக்திக்கு அப்போதே ஏதோ சரியில்லை எனத் தோன்றி விட்டது. ஜட்டியோடு நின்றது வேறு அவமானமாய் இருந்தது. அங்கே கொண்டு வரப் பட்டிருந்த பலானத் தொழில் செய்யும் பெண்கள் சிலர் இவனைப் பார்த்து விரசமாகப் பேச, காது கொண்டு கேட்க முடியவில்லை இவனால். பிறந்ததில் இருந்து தங்கத்தட்டில் வைத்துக் தாங்கப்பட்ட சக்தி, தகரத்துக்கும் கீழாய் நடத்தப்பட்டான் அங்கே.

அருள்மணி அங்கே வரும் வரை, பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான் அவன். தந்தை வந்ததும் முதலில் வீட்டுக்குப் போவோம் எனத்தான் இருந்தது அவனுக்கு. ஆனால் இந்த விஷயத்தை சும்மா விட்டு விடக் கூடாது எனச் சங்கல்பம் செய்து கொண்டான். குற்றமென எதையும் செய்யாதவர்களை இந்தப் பாடு படுத்துவார்களா எனக் கருவினான். காரில் ஏறி அமர்ந்ததும்தான் அவனது போன் போலிஸ் ஸ்டேஷனில் இருப்பதை உணர்ந்தான் சக்தி. அதை எடுக்க உள்ளே போகும் முன்னே, அவன் அருகே போனோடு வந்தார் ஏட்டு ஒருவர்.

“தம்பி! அந்தப் பக்கமா போய்டலாம் வாங்க” என மறைவாக ஓரிடத்தைக் காட்டினார்.

இவனும் அவரோடு போனான்.

“தம்பி! முக்கியமான ஒரு விஷயம் சொல்லனும்!” என்றவர் தலையைச் சொறிந்தார்.

வாலட்டை வெளியே எடுத்தச் சக்தி உள்ளே இருந்த பணம் மொத்தத்தையும் அப்படியே அவர் கையில் அள்ளி வைத்தான். வாயெல்லாம் பல்லானது அவருக்கு.

“உங்கள கட்டம் போட்டுத்தான் தூக்குனாங்க தம்பி”

“ஓஹோ!”

“தூக்க சொன்னது நம்ம அமைச்சர் சுப்பு ரத்தினம்தான்”

முகம் இறுகிப் போனது இவனுக்கு.
 
“ஏன், எதுக்குன்னுலாம் எனக்குத் தெரியாது தம்பி! ஆனா இதுக்கெல்லாம் உங்க வக்கீலும் உடந்தை! வக்கீலும் இன்சும் நீங்க போய்ட்டீங்கன்னு நெனைச்சு இன்னும் உள்ள பேசிட்டு இருக்காங்க! உங்க கூட்டாளிங்கலாம் வக்கீல் கார்ல இருக்காங்க! உங்கள தூக்கி மரணக் காட்டுக் காட்டனா, இன்சுக்கு பதவி உயர்வுக்கு ஹேல்ப் பண்ணறதா பேச்சு வார்த்தை! இன்சுக்கும் அமைச்சருக்கும் நடு ஆள்தான் உங்க வக்கீல்! பார்த்து சூதனமா இருந்துக்குங்க தம்பி!”

அவரை ஆழ்ந்து பார்த்தான் சக்தி.

“என்ன தம்பி இப்படி பார்க்கறீங்க! ஓ! நான் சொல்றது உண்மையா பொய்யான்னு நெனைக்கறீங்களா?” என்றவர், தனது பழைய போனில் வாய்ஸ் ரெக்கார்டரை ஓட விட்டார்.

அதில் இன்சும் வக்கீலும் பேசுவது கேட்டது.

“இன்சு ரூமு வெளிய ஜன்னல் இருக்கு! அங்க நின்னு ரெக்கார்ட் பண்ணேன்! அதான் சவுண்டு கிளியரா இல்லை! சட்டத்தைக் காக்க வந்தவன் மாதிரி பேசுவான் தம்பி அந்த இன்சு! எங்கள மாமூல் வாங்க கூட விட மாட்டான். ஆனா அவன் மட்டும் நல்லா பெரிய இடமா பார்த்து வாங்கி வயித்த வளப்பான்! துத்தேரி! நீங்க பெரிய வீட்டுக் பிள்ளைன்னு தெரியவும்தான் இந்த வேலைப் பார்த்தேன் நான்! எதாச்சும் போட்டுக் குடுப்பீங்கன்னு நெனைச்சேன்! விஷயத்த சொல்ற முன்னமே, அள்ளிக் குடுத்திட்டீங்க!” என இளித்தார்.

அவர் போனை வாங்கி, ஆடியோவைத் தனக்கு அனுப்பி விட்டு, அதை அழித்து விட்டான் சக்தி.

“இது நமக்குள்ளயே இருக்கட்டும்! அப்பப்ப ரொம்ப நல்லா கவனிச்சுடறேன் உங்கள” என்றவன் கிளம்பி விட்டான்.

அப்பாவின் பால்ய நண்பர், இப்போது ஓர் அமைச்சர்! எதற்காக தன்னை டார்கேட் செய்ய வேண்டும் என யோசனையாக இருந்தது சக்திக்கு!

‘ஏன்? ஏன்? ஏன்?’

பணம் பத்தும் செய்தாலும், அதனோடு பதவியும் சேர்ந்தால் மட்டுமே மதிப்பு எனப் புரிந்தது! இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாய் வாழ்ந்து மடிய வேண்டியதுதான். பாடுபட்டுப் படித்து அரசாங்க வேலையில் இருப்பவர்களை, பத்தாவது கூடத் தாண்டாத அரசியல்வாதியால் காலுக்கடியில் போட்டு நசுக்க முடிகிறது என்றால் அந்தப் பதவியின் பலம் நன்றாய் புரிந்தது இப்போது.

தூரத்தில் நின்று ஏன், ஏன் எனக் கேள்விக் கேட்டு மண்டைக் காய்வதை விட, அருகிலேயே போய் அமர்ந்து கொண்டால் என்ன என அவன் மனம் கணக்குப் போட்டது! உறவாடி கெடு என்பதை அமைச்சரால் மட்டும்தான் செய்ய முடியுமா? இந்த அமரனால் முடியாதா எனத் தோன்ற, முடிவெடுத்து விட்டான் சக்தி! கூடவே இருந்து குழிப் பறிப்பதை கற்றுக் கொடுத்தவரிடமே முயற்சித்துப் பார்க்க முனைந்து விட்டான் இவன்.

“இவ்ளோ பணம் இருந்து என்னப்பா யூஸ்? அதை வச்சி என்னை வெளிய எடுக்க முடியலைல உங்களால! யாருக்கும் பயப்படாம வாழனும்னா பணம் மட்டும் இருந்தா போதாதுப்பா! பதவியும் இருக்கனும்! அதிகாரமும் இருக்கனும். என்னை ரத்தினம் மாமா கூட சேர்த்து விடுங்கப்பா!”

தகப்பன் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை இவன். தன் முடிவில் உறுதியாய் நின்று சுப்பு ரத்தினத்தின் கோட்டைக்குள் பிரவேசித்தான்.

பலதையும் நினைத்துக் கொண்டே தனதறையில் கோபமாய் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த சக்தியின் கவனத்தைக் கதவு திறக்கும் சத்தம் கலைத்தது.

உள்ளே நுழைந்த சிவரஞ்சனியைக் கோபத்துடன் முறைத்தான் அவன். அவளும் இவனை நிமிர்ந்து நேராய் பார்த்தாள். கோப முகம் மெல்ல, மெல்லப் புன்னகையைப் பூசிக் கொள்ள,

“வெல்கம் பார்ட்னர்!” என ஆரவாரமாக அழைத்தான் சக்தி அமரன்!

அலட்சியமாய் அவனைப் பார்த்தவள், மெல்ல நடந்து போய் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

“ஓ மை பொண்டாட்டி! உனக்குத் தமிழ் கலாச்சாரத்தப் பத்தி யாரும் சொல்லிக் குடுக்கலியா? ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு அன்ன நடை நடந்து வந்து, பால் சொம்ப மேசைல வைச்சிட்டு, புருஷன் காலுல மடார்னு விழுகனும்மா! அவன் ரெண்டுக் கை பிடிச்சுத் தூக்கி விடறப்ப, சேலை முந்தானைய ரகசியமா லேசா நகர்த்தி விட்டு இலைமறைக்காயா இடுப்பையும், வளுவளுப்பான வயித்தையும் காட்டனும்மா! எதிர்ப்பார்ப்போட காத்திட்டு இருக்கற இந்தக் கன்னிப் பையனோட ஆசைய அழிச்சிடுடாதே! வா, வந்து காலுல விழு”

அவன் முகத்தின் மேல் குட்டித் தலையணை மோதி விழுந்தது.

“ஏய்! பேச்சு பேச்சோட இருக்கனும்! அடிக்கறது, கடிக்கறது, புடிக்கறதுலாம் கட்டிலுக்கு உள்ள மட்டும்தான் அலவுட்! வெளிய இல்ல” என்றவனை முறைத்துப் பார்த்தாள் சிவரஞ்சனி.

“வாய மூடிட்டு வந்து உக்காரு” எனக் கடுப்பாய் அழைத்தாள் அவள்.

புன்னகை முகத்துடன் அதே சோபாவில் சற்றுத் தள்ளி அமர்ந்தான் சக்தி அமரன்.

“நாளைக்கு நான் அங்க போறேன் சக்தி! இங்க இருந்தா சந்தேகம் வரும்”

“சரி! கிளம்பு!”

“மண்டை வலிக்குது! நான் படுக்கப் போறேன்!” என்றவள், எதுவும் பேசாமல் அவன் கட்டிலில் ஓர் ஓரமாய் சுருண்டுக் கொண்டாள்.

இவனும் விளக்கணைத்து விட்டு இன்னோர் ஓரம் படுத்துக் கொண்டான். நடு இரவில், என்னவோ சத்தம் கேட்க கண் விழித்தான் சக்தி அமரன். அவன் கையெட்டும் தூரத்தில் படுத்திருந்த சிவரஞ்சனி, தூக்கத்திலேயே அழுது கொண்டிருந்தாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளையே பார்த்தபடி படுத்திருந்தான் இவன். அவளுக்குக் கையும் காலும் உதற ஆரம்பிக்க, போர்வையை நன்றாகப் போர்த்தி விட்டான். வெளியில் இருந்து வந்த நடுக்கமாய் இருந்தால், அடங்கி இருக்கும்! அது உள்ளிருந்து வந்த நடுக்கமாயிற்றே!

இவனுக்குப் பார்க்கவே பாவமாய் இருந்தது. மெல்ல நகர்ந்து, ஆதரவாய் பட்டும் படாமல் அணைத்துக் கொண்டான் அவளை. இன்னும் அவனை நெருங்கி நெஞ்சில் ஒண்டிக் கொண்டவள்,

“சக்தி” என அழைத்தாள்.

“ஹ்ம்ம்”

“சரக்கு வச்சிருக்கியா?”

“இருக்கு!”

“இந்த நடுக்கம் போகனும்னா, நான் என்னை மறக்கனும்! அதுக்கு போதை வேணும் சக்தி! ப்ளிஸ் ஊத்திக் குடு!”

அமைதியாகவே அவளைப் பார்த்திருந்தவன்,

“சரக்கு மாதிரியே போதைத் தர இன்னொரு விஷயமும் இருக்கு ரஞ்சனி” என்றான்.

“ட்ரக்ஸா? அதை நான் விட்டுத் தொலைச்சி வருசம் பல ஆச்சு”

“இல்லை”

“வேற?”

“சூரசம்ஹாரம் படம் பார்த்துருக்கியா?”

“சக்தி! கண்டதையும் பேசாம, நான் கேட்டத குடு” என எரிச்சலாக மொழிந்தாள் இவள்.

“அந்தப் படத்துல ட்ரக் அடிக்ட்டா இருக்கற கமல, நிரோஷா தன்னையே தந்து அந்தப் பழக்கத்துல இருந்து வெளிய கொண்டு வருவாங்க! உன் சரக்கு அடிக்‌ஷன் போக, நான் என்னையே தியாகம் பண்ண முடிவெடுத்துட்டேன் பார்ட்னர்”

“எதே!!! தியாகம்??? மவனே! ஒழிஞ்சடா நீ” என அவனை சரமாரியாக இவள் அடிக்க, இறுக்கமாய் அணைத்துப் பிடித்துக் கொண்டான் சக்தி அமரன்.

அவனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை! அவனது சிரிப்பைப் பார்த்து இவளுக்கும் சிரிப்பு வந்தது.

“நான் தட்டிக் குடுக்கறேன்! தூங்கு!” என்றவன், கட்டில் பக்கத்தில் வைத்திருந்த ரிமோட்டை எடுத்து ஒரு பட்டனைத் தட்ட, கடல் அலைகளின் சத்தம் மெலிதாய் ஒலிக்கத் தொடங்கியது.

“சரக்கில்லாம தூக்கம் வராது சக்தி”

“வரும்! வரும்! வரும்!!!!” என்றவன், மெல்லத் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.

புரண்டுப் புரண்டுப் படுத்தவள், சற்று நேரத்தில் ஆழ்ந்து உறங்கி விட்டாள். தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணவளையே காதலாய் பார்த்தபடி விழித்துக் கிடந்தான் சக்தி அமரன்.

(உயிரானாய்!!!)

(அடேய்ஸ்! எல்லாரும் என்னைப் போட்டுத் திட்டி விட்டீங்கல்ல போன எபிக்கு! கொஞ்சம் கூட பாவம்னு பாக்கலல்ல!! ஹாஹாஹா! இந்தக் கதை இப்படித்தான் போகுது! வேணும்னே நான் அப்படி எழுதல! ஃப்ளோ அப்படித்தான் வருது! ஆனாலும் எல்லா எபியும் ஒரு காரணமாத்தான் வருது! ஒரு ஹிண்ட்டோடத்தான் வருது! ஆகவே, கொஞ்சம் பொறுமைடா டியரிஸ்!!! இனி அடுத்த எபில சந்திக்கலாம்)
 
காதலா....😯😯😯 சூப்பரு.... 🥰🥰🥰🥰🥰 அப்போ ரஞ்சுவை தான் லவ் பண்ணுறான் சக்தி 🤗🤗🤗

ஜட்டியோட உட்கார வச்சது சுப்பு பார்த்த வேலையா... 😡😡😡திட்டம் போட்டு கூட இருந்து அமைச்சருக்கு ஆப்பு வைக்கிறான் சக்தி 🤩🤩🤩
 
😍😍😍

சுப்புவை பழி வாங்க சக்தியும் ரஞ்சனியும் கூட்டு சேர்ந்துக்கிட்டாங்களா? அப்ப சக்தி காதலிச்சது மஞ்சுவை இல்ல, ரஞ்சனியை..🤔🤔
அப்ப இந்த ஜட்டி மேட்டர் ரஞ்சனிக்கு எப்படி தெரிஞ்சது? 😁😁
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 16)


ஸோ.. அருள்மணி சுப்பு ரத்தினம் தேர்தலுக்காக கேட்ட பணத்தை கொடுக்கலைன்னதும், அதுவும் அரசியல் சகவாசமே வேணாம்ன்னு ஒதுங்கி போனதும்... காண்டுல சுப்பு ரத்தினம் வேணுமின்னே ஆடின அரசியல் ஆதாய விளையாட்டுத்தான் இந்த சக்தி அமரனை லாடம் கட்டினதுன்னு நினைக்கிறேன்.


இப்படிப்பட்ட அரசியல்வாதியான சுப்பு தன்னுடைய முதல் பொண்டாட்டி தில்லையை மட்டும் எப்படி விட்டு வைச்சிருப்பாரு..? ஸோ.. அவங்களையும் ஏதோ பண்ணியிருக்கான். அது கூட அவங்களோட சொத்துக்கு ஆசைப்பட்டும், அரசியல் ஆதாயத்துக்காவும் இருக்கலாம். இதெல்லாம் தெரிஞ்சதாலத்தான் ரஞ்சனி
சும்மாவே ட்ரக்ஸ் அடிக்ட் மாதிரி ஆக்ட் பண்ணியிருக்கா. ரஞ்சனிக்கு ஹெல்ஃப் பண்ணவும் சுப்புரத்தினத்தை உறவாடி கெடுக்கவும், ரஞ்சனிக்காகவும் தான்
சக்தி அமரன் அந்த வீட்டுக்குள்ளேயும் நுழைஞ்சிருக்கானோ..?


இதுல அமைதி பூங்காவா இருந்த மஞ்சரி, அப்பன் மாதிரியா, இல்லை அவளும் கூட்டுக் களவாணியா...
அது தான் தெரியலை.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍

ஆத்தீஇஇஇஇ சுப்புவோட இன்னொரு மொகம் வெளிய வருது. அப்ப நம்மாளோட அம்மா சாவுக்கு கூட சுப்பு தான் காரணம் போல.😡😡😡😡

ஹோய் யாருப்பா அது வனிம்மாவ வஞ்சது 😁😁😁😁
வனிம்மா ஃபீலிங் பாத்துட்டு 🤧🤧🤧🤧🤧🤧🤧வைஸூ மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 16)


ஸோ.. அருள்மணி சுப்பு ரத்தினம் தேர்தலுக்காக கேட்ட பணத்தை கொடுக்கலைன்னதும், அதுவும் அரசியல் சகவாசமே வேணாம்ன்னு ஒதுங்கி போனதும்... காண்டுல சுப்பு ரத்தினம் வேணுமின்னே ஆடின அரசியல் ஆதாய விளையாட்டுத்தான் இந்த சக்தி அமரனை லாடம் கட்டினதுன்னு நினைக்கிறேன்.


இப்படிப்பட்ட அரசியல்வாதியான சுப்பு தன்னுடைய முதல் பொண்டாட்டி தில்லையை மட்டும் எப்படி விட்டு வைச்சிருப்பாரு..? ஸோ.. அவங்களையும் ஏதோ பண்ணியிருக்கான். அது கூட அவங்களோட சொத்துக்கு ஆசைப்பட்டும், அரசியல் ஆதாயத்துக்காவும் இருக்கலாம். இதெல்லாம் தெரிஞ்சதாலத்தான் ரஞ்சனி
சும்மாவே ட்ரக்ஸ் அடிக்ட் மாதிரி ஆக்ட் பண்ணியிருக்கா. ரஞ்சனிக்கு ஹெல்ஃப் பண்ணவும் சுப்புரத்தினத்தை உறவாடி கெடுக்கவும், ரஞ்சனிக்காகவும் தான்
சக்தி அமரன் அந்த வீட்டுக்குள்ளேயும் நுழைஞ்சிருக்கானோ..?


இதுல அமைதி பூங்காவா இருந்த மஞ்சரி, அப்பன் மாதிரியா, இல்லை அவளும் கூட்டுக் களவாணியா...
அது தான் தெரியலை.


😀😀😀
CRVS (or) CRVS 2797
🙌🙌🙌 நானும் இப்படி தான் இருக்கும் ன்னு நெனைச்சேன் சிஸ்.
 
Adei😱😱 ipdi oru twist😲😲 ethir pakkavey illaye🤷🤷 Ranjini and sakthi unmaiyavey partner ah😱😱😱 nan kuda kaduppula sonnan irundhean😬😬 apo manju ku pimlikkapilappi ya🤭🤭🤭

Intha அமைச்சர் கதை என்ன தான்🤷🤷 starting laa enna pola oru nallavan illanu introduce aanar apram poga poga nanum arasiyalvaathinu kaamichar ipo innum thonda thoonda innum naarum polaye😡😡😡 yow உனக்கு ean ya avan mela vanmam🧐🧐😡😡

Coincident ila manju 👃 nose panjar aanadhu 😂😂😂 ennama avalta love dialogue vitta 😁😁😁 apo ellam nadippa gobaluuu🤭🤭🤭
 
Back
Top