VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

எபி பாடல்
“அம்மா! அம்மா! ஏன்மா அழுகறீங்க?” எனக் கேட்ட மகளை இறுக அணைத்துக் கொண்டாள் தில்லை.
“அச்சோ செல்லம்! அம்மா அழுகலடா! கண்ணுல தூசி விழுந்துடுச்சு! நீங்க தூங்குங்க கண்ணுக்குட்டி”
“ஏ நாட்டி தூசி! எங்கம்மா கண்ணுல ஏன் நீ விழுந்த! அடிச்சிருவேன் பார்த்துக்கோ” என்ற குட்டி ரஞ்சனி, எழுந்து அமர்ந்து தில்லையின் கண்களில் ஓர் அடி வைத்தாள்.
“அடியே! என்னடி பண்ணற?”
“தூசிய அடிக்கறேன்மா”
மகளின் செய்கையில் சிரிப்பு வந்து விட்டது தில்லைக்கு.
“தூசி அம்மா கண்ணுக்குள்ளல இருக்கு! அதை அடிச்சா அம்மாவுக்கும் வலிக்குமே கண்ணா” என்றவளுக்கு இன்னும் அதிகமாய் கண்களில் மழை பொழிந்தது.
அவளது இரட்டை அர்த்த வார்த்தைகள் புரியாத சின்னவள், தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.
“பாப்பா!”
“என்னம்மா?”
“நாம ரெண்டு பேரும் தாத்தா வீட்டுக்கே போய்டலாமா?”
“தினம் அங்கத்தானே போறோம்” என்றவள் அவளது ஃபேவரேட் ஸ்பைடர்மென் பொம்மையை அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.
“தினம் போறோம்தான்! ஆனா நைட்டுக்கு இங்க வந்திடறமே! இனி நைட்டும் அங்கயே இருந்துப்போமா?”
“நோம்மா! அப்பாவ நைட்டுத்தானே பார்க்க முடியும்! அங்க இருந்தா, எப்படி அப்பாவ பார்க்கறது?” எனக் கேட்டவள்,
“அப்பா எங்கம்மா? அப்பா வேணும்! வேணும்!” என அழ ஆரம்பித்தாள்.
அந்த நேரம் அவர்களின் அறைக் கதவு திறக்கப்பட்டது. அங்கே சுப்பு ரத்தினத்தைக் காணவும், எழுந்து புயலென அவரை நோக்கி ஓடினாள் சிவரஞ்சனி. அப்படியே அலேக்காக மகளை அள்ளிக் கொண்டான் சுப்பு ரத்தினம்.
“என் செல்ல பாப்பா கண்ணுல எதுக்கு கண்ணீர்?” எனக் கேட்டு அழுத்தமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் சுப்பு.
“த்ரீ டேய்ஸ் அப்பாவ பார்க்கல! ஐ மிச்(ஸ்) யூ அப்பா!” என்ற மகளை தூக்கிப் போட்டுப் பிடித்த சுப்பு ரத்தினம், மனைவியைப் புன்னகையுடன் ஏறிட்டான்.
கண்கள் துடைக்கப்பட்டிருந்தாலும், மூக்கிலும் முகத்திலும் தெரிந்த சிவப்பு மனைவி அழுதிருக்கிறாள் எனப் பறை சாற்றியது அவனுக்கு. சட்டெனக் கட்டிலை நெருங்கியவன், மகளை கட்டிலில் விட்டு,
“பாப்பா! பொம்மைக் கூட விளையாடுங்க!” என்றான்.
அவளும் நகர்ந்து போய் விளையாட்டில் மும்முரமாகி விட, மனைவியின் அருகே அமர்ந்தான் சுப்பு.
“என்னம்மா? என்னாச்சி? நீயும் பாப்பா மாதிரி என்னை மிஸ் பண்ணுறியா? எலெக்ஷன் நெருங்குதுடாமா! உட்காரக் கூட டைமில்ல எனக்கு! இந்த நேரத்துல அடிக்கடி வீட்டுக்கு வர முடியல! என் அறிவாளி பொண்டாட்டி, ரொம்ப அண்டெர்ஸ்டேண்டிங்னு நெனைச்சேனே! இல்லையா?” எனக் கனிவாகக் கேட்டபடி அவள் தோள் அணைத்துக் கொண்டான் இவன்.
ஒன்றும் பேசாமல் அமைதியாய் அவன் முகம் நோக்கினாள் இவள்.
“என்னம்மா?”
ஒன்றும் இல்லை என்பது போல அவள் தலையாடியது.
மெல்ல நெருங்கி அவள் காதில்,
“ரொம்ப டென்ஷனா இருக்குடி தில்லை! நீ வேணும் எனக்கு! அதான் ஓடி வந்துட்டேன் வீட்டுக்கு! உன்னால மட்டும்தான் என்னை ரிலேக்ஸ் பண்ண முடியும்! பாப்பா எத்தனை மணிக்குத் தூங்குவா?” எனத் தாபம் இழையோட யாசிப்பாய் கேட்டான் அவன்.
“இப்போ தூங்கிடுவா!” என்ற தில்லையின் குரலில் கடலளவு துயரம் இருந்தது.
“உடம்பு முடியலையா? கஷ்டப்படுத்தறனா உன்னை?” எனக் கேட்டவனின் குரலில் கரிசனம் இருந்தது.
கணவனை முன்பு போல தன்னால் மகிழ்ச்சிப்படுத்த முடியவில்லை எனப் புரிந்துதான் இருந்தது தில்லைக்கு. உடல் நலக் குறைவு, அடிக்கடி வரும் மூச்சிரைப்பு எனத் திண்டாடித்தான் போனாள். ஆசையாய் தன்னை நாடும் சுப்புவை சில சமயங்களில் பாதியில் நிறுத்தி இருக்கிறாள்! ஓர் ஆண் மகனின், அதுவும் சுப்பு ரத்தினத்தைப் போல அதீத தாபம் கொண்ட ஆண் மகனை ஆசைக் காட்டி மோசம் செய்வது அவர்களுக்கு எவ்வளவு ஏமாற்றத்தையும், கஷ்டத்தையும் கொடுக்கும் என்பது தெரிந்துதான் இருந்தது. அதுவே இவளைக் கொல்லாமல் கொன்றது!
“நல்லா இருக்கேங்க! ரஞ்சு இப்போ தூங்கிடுவா! நீங்க முதல்ல போய் சாப்பிட்டு வாங்க” எனக் கணவனை அறையை விட்டு அனுப்பியவளுக்குத் துக்கம் பொங்கி வழிந்தது.
“அம்மா! அம்மா! ஓகேவா நீங்க?” எனக் கேட்ட மகளுக்காக முகத்தைப் புன்னகையாய் வைத்துக் கொண்டாள்.
அன்றிரவு மகள் தூங்கியதும், கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்தவளுக்கு மனம் விண்டு வலித்தது. சுப்பு ரத்தினம் உறங்கியதும் குளித்து வந்தவள், மகள் படுத்திருந்த ஒற்றைக் கட்டிலில் அவளை ஒண்டியபடிப் படுத்துக் கொண்டாள்.
“எனக்கு நீ போதும் கண்ணு”
“ஹ்ம்ம் மா” எனத் தூக்கத்தில் கூட மகள் பதில் கொடுத்தாள்.
மறுநாள் ரங்க நாயகி வந்திருந்தாள் இவர்கள் இல்லத்திற்கு. அன்றைய தினம் விடுமுறை தினமாகிக் போக, தில்லை மகளுக்கு ஏ,பி,சி,டி படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். சுப்பு ரத்தினம் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார். சித்தியைப் பார்த்ததும் படிப்பதை விட்டு விட்டுப் பாய்ந்து ஓடினாள் குட்டி ரஞ்சனி.
“சித்தி!!!!”
“ரஞ்சும்மா” எனக் கத்தியபடியே சின்னவளைத் தூக்கிக் கொண்டாள் ரங்க நாயகி.
தங்கையை நிமிர்ந்து பார்த்தத் தில்லை,
“வாடி! ப்ரேக்பஸ்ட் சாப்பிட்டுட்டியா?” எனக் கேட்டாள்.
“எல்லாம் ஆச்சுக்கா!”
“சரி! ரெண்டு பேரும் விளையாடுங்க! சத்தத்த கொஞ்சம் குறைச்சுக்கோங்க! உங்க மாமா இன்னும் தூங்கறாரு! நான் கொஞ்ச நேரம் சாமி ரூம்ல தியானம் பண்ணிட்டு வரேன்”
“என்ன அதிசயமா இருக்கு! அரசியல் இன்னிக்கு ஆத்துல என்ன பண்ணுது?”
“போடி குறும்பி!” எனத் தங்கையைச் செல்லமாகக் கடிந்து கொண்ட தில்லை, பூஜையறைக்குப் போய் விட்டாள்.
ரங்க நாயகியும் ரஞ்சனியும் தோட்டத்துப் பக்கம் விளையாடப் போனார்கள். அன்றைய தினம் வீட்டில் சமையல்கார அம்மா மட்டுமே இருந்தார். இவர்கள் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடினார்கள். சற்று நேரத்தில்,
“ரஞ்சு! சித்தி போய் தண்ணிக் குடிச்சிட்டு வரேன்! நீ இங்கயே விளையாடு!” என வீட்டுக்குள் போனாள் ரங்க நாயகி.
எதிர்ப்பட்ட சமையல்கார அம்மாவிடம்,
“பாப்பாவ கொஞ்சம் பார்த்துக்கோங்க! நான் தண்ணிக் குடிச்சிட்டு வரேன்” எனச் சொன்னாள் ரங்க நாயகி.
“சரிங்க சின்னம்மா!” என்றவர் தோட்டத்துப் பக்கம் போய் விட்டார்.
அரை மணி நேரத்தில் வீட்டில் இருந்து புகையும், கதறும் ஓலமும் வர குட்டி ரஞ்சனி உள்ளே ஓடினாள்.
“காப்பாத்துங்க! எரியுது! எரியுது!” எனச் சத்தம் பூஜையறையில் இருந்து வந்தது.
பூசையறையின் கதவுப் பூட்டி இருந்தது. என்னவோ விபரீதம் எனப் புரிந்தது குட்டி ரஞ்சனிக்கு.
“அம்மா! அம்மா! அம்மா” எனக் கதறினாள் கதவின் இந்தப் பக்கம் நின்றுக் கொண்டு.
“செல்லம்! ஓடிப்போ! ஓடிப்போ! அங்க நிக்காதே!” எனக் கூச்சலிட்டாள் தில்லை.
“அம்மா! வாம்மா! வா!” என அழுதபடியே கத்தினாள் குழந்தை!
“ஐயோ! அம்மா! எரியுதே! காப்பாத்துங்க! ஏங்க! ஏங்க!” என அவரின் ஓலம் இன்னும் வேகமாய் கேட்க, சுப்பு, ரங்க நாயகி, சமையல்கார அம்மா எல்லோரும் ஓடி வந்தார்கள்.
அதற்குள் நெருப்பு கதவைப் பிடிக்க ஆரம்பித்திருந்தது.
“பாப்பாவ கூட்டிட்டு வெளிய ஓடு” என ரங்க நாயகியைப் பார்த்துக் கத்திய சுப்பு ரத்தினம், அந்தக் கதவை உடைக்க முனைந்தார்.
“ஐயோ மாமா! அக்காவ காப்பாத்துங்க!” எனக் கதறினாள் ரங்க நாயகி.
“பாப்பாவ சேஃப் பண்ணு! போ!” எனக் கர்ஜித்தவனின் குரலுக்குக் கட்டுப்பட்டு பிள்ளையை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினாள் ரங்க நாயகி.
சமையல்கார அம்மா அதற்குள் தீயணைப்புப் படைக்குப் போன் போட்டிருந்தார், அவரோடு சேர்ந்து பாத்ரூமில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து இறைத்தார் சுப்பு. தீ வேகமாக பூசையறையில் இருந்து வெளியே பரவ ஆரம்பித்தது.
“கண்ணு! தில்லை! தில்லை” எனக் கத்தி அழுதபடியே தண்ணீரை வாரி வாரி ஊற்றினார் சுப்பு.
உள்ளே இருந்து சத்தமே வரவில்லை!
“தம்பி! நெருப்புப் பரவுது! வெளிய வாங்க! வாங்க!” என அவரை இழுத்தார் அந்த சமையல்கார அம்மா!
“ஐயோ! என் பொண்டாட்டிம்மா! என் பொண்டாட்டி” எனக் கதறினார் சுப்பு!

எபி பாடல்
“அம்மா! அம்மா! ஏன்மா அழுகறீங்க?” எனக் கேட்ட மகளை இறுக அணைத்துக் கொண்டாள் தில்லை.
“அச்சோ செல்லம்! அம்மா அழுகலடா! கண்ணுல தூசி விழுந்துடுச்சு! நீங்க தூங்குங்க கண்ணுக்குட்டி”
“ஏ நாட்டி தூசி! எங்கம்மா கண்ணுல ஏன் நீ விழுந்த! அடிச்சிருவேன் பார்த்துக்கோ” என்ற குட்டி ரஞ்சனி, எழுந்து அமர்ந்து தில்லையின் கண்களில் ஓர் அடி வைத்தாள்.
“அடியே! என்னடி பண்ணற?”
“தூசிய அடிக்கறேன்மா”
மகளின் செய்கையில் சிரிப்பு வந்து விட்டது தில்லைக்கு.
“தூசி அம்மா கண்ணுக்குள்ளல இருக்கு! அதை அடிச்சா அம்மாவுக்கும் வலிக்குமே கண்ணா” என்றவளுக்கு இன்னும் அதிகமாய் கண்களில் மழை பொழிந்தது.
அவளது இரட்டை அர்த்த வார்த்தைகள் புரியாத சின்னவள், தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.
“பாப்பா!”
“என்னம்மா?”
“நாம ரெண்டு பேரும் தாத்தா வீட்டுக்கே போய்டலாமா?”
“தினம் அங்கத்தானே போறோம்” என்றவள் அவளது ஃபேவரேட் ஸ்பைடர்மென் பொம்மையை அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.
“தினம் போறோம்தான்! ஆனா நைட்டுக்கு இங்க வந்திடறமே! இனி நைட்டும் அங்கயே இருந்துப்போமா?”
“நோம்மா! அப்பாவ நைட்டுத்தானே பார்க்க முடியும்! அங்க இருந்தா, எப்படி அப்பாவ பார்க்கறது?” எனக் கேட்டவள்,
“அப்பா எங்கம்மா? அப்பா வேணும்! வேணும்!” என அழ ஆரம்பித்தாள்.
அந்த நேரம் அவர்களின் அறைக் கதவு திறக்கப்பட்டது. அங்கே சுப்பு ரத்தினத்தைக் காணவும், எழுந்து புயலென அவரை நோக்கி ஓடினாள் சிவரஞ்சனி. அப்படியே அலேக்காக மகளை அள்ளிக் கொண்டான் சுப்பு ரத்தினம்.
“என் செல்ல பாப்பா கண்ணுல எதுக்கு கண்ணீர்?” எனக் கேட்டு அழுத்தமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் சுப்பு.
“த்ரீ டேய்ஸ் அப்பாவ பார்க்கல! ஐ மிச்(ஸ்) யூ அப்பா!” என்ற மகளை தூக்கிப் போட்டுப் பிடித்த சுப்பு ரத்தினம், மனைவியைப் புன்னகையுடன் ஏறிட்டான்.
கண்கள் துடைக்கப்பட்டிருந்தாலும், மூக்கிலும் முகத்திலும் தெரிந்த சிவப்பு மனைவி அழுதிருக்கிறாள் எனப் பறை சாற்றியது அவனுக்கு. சட்டெனக் கட்டிலை நெருங்கியவன், மகளை கட்டிலில் விட்டு,
“பாப்பா! பொம்மைக் கூட விளையாடுங்க!” என்றான்.
அவளும் நகர்ந்து போய் விளையாட்டில் மும்முரமாகி விட, மனைவியின் அருகே அமர்ந்தான் சுப்பு.
“என்னம்மா? என்னாச்சி? நீயும் பாப்பா மாதிரி என்னை மிஸ் பண்ணுறியா? எலெக்ஷன் நெருங்குதுடாமா! உட்காரக் கூட டைமில்ல எனக்கு! இந்த நேரத்துல அடிக்கடி வீட்டுக்கு வர முடியல! என் அறிவாளி பொண்டாட்டி, ரொம்ப அண்டெர்ஸ்டேண்டிங்னு நெனைச்சேனே! இல்லையா?” எனக் கனிவாகக் கேட்டபடி அவள் தோள் அணைத்துக் கொண்டான் இவன்.
ஒன்றும் பேசாமல் அமைதியாய் அவன் முகம் நோக்கினாள் இவள்.
“என்னம்மா?”
ஒன்றும் இல்லை என்பது போல அவள் தலையாடியது.
மெல்ல நெருங்கி அவள் காதில்,
“ரொம்ப டென்ஷனா இருக்குடி தில்லை! நீ வேணும் எனக்கு! அதான் ஓடி வந்துட்டேன் வீட்டுக்கு! உன்னால மட்டும்தான் என்னை ரிலேக்ஸ் பண்ண முடியும்! பாப்பா எத்தனை மணிக்குத் தூங்குவா?” எனத் தாபம் இழையோட யாசிப்பாய் கேட்டான் அவன்.
“இப்போ தூங்கிடுவா!” என்ற தில்லையின் குரலில் கடலளவு துயரம் இருந்தது.
“உடம்பு முடியலையா? கஷ்டப்படுத்தறனா உன்னை?” எனக் கேட்டவனின் குரலில் கரிசனம் இருந்தது.
கணவனை முன்பு போல தன்னால் மகிழ்ச்சிப்படுத்த முடியவில்லை எனப் புரிந்துதான் இருந்தது தில்லைக்கு. உடல் நலக் குறைவு, அடிக்கடி வரும் மூச்சிரைப்பு எனத் திண்டாடித்தான் போனாள். ஆசையாய் தன்னை நாடும் சுப்புவை சில சமயங்களில் பாதியில் நிறுத்தி இருக்கிறாள்! ஓர் ஆண் மகனின், அதுவும் சுப்பு ரத்தினத்தைப் போல அதீத தாபம் கொண்ட ஆண் மகனை ஆசைக் காட்டி மோசம் செய்வது அவர்களுக்கு எவ்வளவு ஏமாற்றத்தையும், கஷ்டத்தையும் கொடுக்கும் என்பது தெரிந்துதான் இருந்தது. அதுவே இவளைக் கொல்லாமல் கொன்றது!
“நல்லா இருக்கேங்க! ரஞ்சு இப்போ தூங்கிடுவா! நீங்க முதல்ல போய் சாப்பிட்டு வாங்க” எனக் கணவனை அறையை விட்டு அனுப்பியவளுக்குத் துக்கம் பொங்கி வழிந்தது.
“அம்மா! அம்மா! ஓகேவா நீங்க?” எனக் கேட்ட மகளுக்காக முகத்தைப் புன்னகையாய் வைத்துக் கொண்டாள்.
அன்றிரவு மகள் தூங்கியதும், கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்தவளுக்கு மனம் விண்டு வலித்தது. சுப்பு ரத்தினம் உறங்கியதும் குளித்து வந்தவள், மகள் படுத்திருந்த ஒற்றைக் கட்டிலில் அவளை ஒண்டியபடிப் படுத்துக் கொண்டாள்.
“எனக்கு நீ போதும் கண்ணு”
“ஹ்ம்ம் மா” எனத் தூக்கத்தில் கூட மகள் பதில் கொடுத்தாள்.
மறுநாள் ரங்க நாயகி வந்திருந்தாள் இவர்கள் இல்லத்திற்கு. அன்றைய தினம் விடுமுறை தினமாகிக் போக, தில்லை மகளுக்கு ஏ,பி,சி,டி படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். சுப்பு ரத்தினம் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார். சித்தியைப் பார்த்ததும் படிப்பதை விட்டு விட்டுப் பாய்ந்து ஓடினாள் குட்டி ரஞ்சனி.
“சித்தி!!!!”
“ரஞ்சும்மா” எனக் கத்தியபடியே சின்னவளைத் தூக்கிக் கொண்டாள் ரங்க நாயகி.
தங்கையை நிமிர்ந்து பார்த்தத் தில்லை,
“வாடி! ப்ரேக்பஸ்ட் சாப்பிட்டுட்டியா?” எனக் கேட்டாள்.
“எல்லாம் ஆச்சுக்கா!”
“சரி! ரெண்டு பேரும் விளையாடுங்க! சத்தத்த கொஞ்சம் குறைச்சுக்கோங்க! உங்க மாமா இன்னும் தூங்கறாரு! நான் கொஞ்ச நேரம் சாமி ரூம்ல தியானம் பண்ணிட்டு வரேன்”
“என்ன அதிசயமா இருக்கு! அரசியல் இன்னிக்கு ஆத்துல என்ன பண்ணுது?”
“போடி குறும்பி!” எனத் தங்கையைச் செல்லமாகக் கடிந்து கொண்ட தில்லை, பூஜையறைக்குப் போய் விட்டாள்.
ரங்க நாயகியும் ரஞ்சனியும் தோட்டத்துப் பக்கம் விளையாடப் போனார்கள். அன்றைய தினம் வீட்டில் சமையல்கார அம்மா மட்டுமே இருந்தார். இவர்கள் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடினார்கள். சற்று நேரத்தில்,
“ரஞ்சு! சித்தி போய் தண்ணிக் குடிச்சிட்டு வரேன்! நீ இங்கயே விளையாடு!” என வீட்டுக்குள் போனாள் ரங்க நாயகி.
எதிர்ப்பட்ட சமையல்கார அம்மாவிடம்,
“பாப்பாவ கொஞ்சம் பார்த்துக்கோங்க! நான் தண்ணிக் குடிச்சிட்டு வரேன்” எனச் சொன்னாள் ரங்க நாயகி.
“சரிங்க சின்னம்மா!” என்றவர் தோட்டத்துப் பக்கம் போய் விட்டார்.
அரை மணி நேரத்தில் வீட்டில் இருந்து புகையும், கதறும் ஓலமும் வர குட்டி ரஞ்சனி உள்ளே ஓடினாள்.
“காப்பாத்துங்க! எரியுது! எரியுது!” எனச் சத்தம் பூஜையறையில் இருந்து வந்தது.
பூசையறையின் கதவுப் பூட்டி இருந்தது. என்னவோ விபரீதம் எனப் புரிந்தது குட்டி ரஞ்சனிக்கு.
“அம்மா! அம்மா! அம்மா” எனக் கதறினாள் கதவின் இந்தப் பக்கம் நின்றுக் கொண்டு.
“செல்லம்! ஓடிப்போ! ஓடிப்போ! அங்க நிக்காதே!” எனக் கூச்சலிட்டாள் தில்லை.
“அம்மா! வாம்மா! வா!” என அழுதபடியே கத்தினாள் குழந்தை!
“ஐயோ! அம்மா! எரியுதே! காப்பாத்துங்க! ஏங்க! ஏங்க!” என அவரின் ஓலம் இன்னும் வேகமாய் கேட்க, சுப்பு, ரங்க நாயகி, சமையல்கார அம்மா எல்லோரும் ஓடி வந்தார்கள்.
அதற்குள் நெருப்பு கதவைப் பிடிக்க ஆரம்பித்திருந்தது.
“பாப்பாவ கூட்டிட்டு வெளிய ஓடு” என ரங்க நாயகியைப் பார்த்துக் கத்திய சுப்பு ரத்தினம், அந்தக் கதவை உடைக்க முனைந்தார்.
“ஐயோ மாமா! அக்காவ காப்பாத்துங்க!” எனக் கதறினாள் ரங்க நாயகி.
“பாப்பாவ சேஃப் பண்ணு! போ!” எனக் கர்ஜித்தவனின் குரலுக்குக் கட்டுப்பட்டு பிள்ளையை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினாள் ரங்க நாயகி.
சமையல்கார அம்மா அதற்குள் தீயணைப்புப் படைக்குப் போன் போட்டிருந்தார், அவரோடு சேர்ந்து பாத்ரூமில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து இறைத்தார் சுப்பு. தீ வேகமாக பூசையறையில் இருந்து வெளியே பரவ ஆரம்பித்தது.
“கண்ணு! தில்லை! தில்லை” எனக் கத்தி அழுதபடியே தண்ணீரை வாரி வாரி ஊற்றினார் சுப்பு.
உள்ளே இருந்து சத்தமே வரவில்லை!
“தம்பி! நெருப்புப் பரவுது! வெளிய வாங்க! வாங்க!” என அவரை இழுத்தார் அந்த சமையல்கார அம்மா!
“ஐயோ! என் பொண்டாட்டிம்மா! என் பொண்டாட்டி” எனக் கதறினார் சுப்பு!