எபி 20

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

எபி பாடல்


இந்தப் பாட்ட உங்களுக்கு எல்லாம் டெடிகேட் செய்யறேன்! நன்றி டியர்ஸ், காத்திருந்ததுக்கு. என்னால லாப் எடுத்து உக்காரவே முடியலை, அவ்ளோ ஃபங்சன், வீட்டுல கெஸ்ட்னு செம்ம பிசி. இன்னிக்குத்தான் ரிலேக்ஸ் ஆனேன். உடனே மத்த வேலைலாம் விட்டுட்டு டைப்பிங்ல உக்காந்துட்டேன். ரியலி சாரி!!!


அத்தியாயம் 20



ஓவர் ஸ்ட்ரெஸில் இருந்தார் சுப்பு ரத்தினம். விசாரணை கமிஷன், எதிர் கட்சியின் பகிரங்கக் குற்றச்சாட்டு, சோசியல் மீடியாவின் கோர முகமென அல்லாடிப் போய் விட்டார். பாலம் இடிந்து விழுந்தது இவரால்தான் என ஆரம்பித்து, டோல்கேட் வசூலிக்க இவர் சாங்க்‌ஷன் செய்த நிறுவனத்திடமும் லஞ்சம் வாங்கி இருக்கிறார் எனத் தொடர்ந்து, எங்கெங்கு இவர் கட்சி கை நீட்டி இருக்கிறது என ஒவ்வொன்றாய் முடிவே இல்லாமல் வெளியாகிக் கொண்டிருந்தது! முதலமைச்சரே தொலைப்பேசியில் அழைத்து, வெளுத்து வாங்கி விட்டார் சுப்பு ரத்தினத்தை! அரசியலில் ஏற்பட்ட குளறுபடியால் அவரால் வீட்டின் பிரச்சனைகளைக் கவனிக்க முடியவில்லை. மஞ்சு எங்கே போனாள், மகனின் கொலையாளி யார், ரஞ்சு மறுபடி வீட்டில் வந்து ஏன் அமர்ந்திருக்கிறாள் என எதையும் அலசி ஆராயும் நிதானத்தில் இல்லை அவர்.

அந்த நேரத்தில் அவருக்குப் பக்க பலமாக(?) நின்றான் சக்தி அமரன்.

“இது எதிர்கட்சியின் சதின்னு அடிச்சுப் பேசுங்க மாமா! உங்க கட்சில உள்ள ஆளுங்கள விலை பேசி உங்களுக்கு எதிரா திருப்பிட்டாங்கன்னு அதையே திரும்பத் திரும்ப சொல்லுங்க! பத்து வாட்டி உண்மைப் போலவே காண்பிடன்ண்ட்டா பேசினா, கண்டிப்பா மக்கள் நம்பிடுவாங்க! சோசியல் மீடியால வெளி வர உங்களுக்கு எதிரான விஷயங்கள நம்மாளுங்கள வச்சி ஃபில்டர் பண்ணிட்டேத்தான் இருக்கேன்! நீங்க மனச விட்டுறாதீங்க! இதோட பெரிய விஷயமா, வேற எதையாச்சும் வைரல் ஆக்கிட்டா இதை மறந்துடுவாங்க இந்த மக்கள்!”

“அப்படிங்கற!! அப்போ நம்மாளுங்க மூனு பேரைப் பிடிச்சு, என் தலைவன் மாசில்லா தங்கம்னு போர்ட் பிடிக்க வச்சு, தீ குளிக்க வச்சிடலாமா?”

“மத்தவங்கள தீ குளிக்க வைக்கறதுல நீங்க கில்லாடி மாமா”

சக்தியை ஒரு மாதிரியாய் பார்த்தார் சுப்பு ரத்தினம்.

“சில வருஷங்களுக்கு முன்ன இப்படி நமக்காக கட்சி ஆளுங்க தீ குளிச்சிருக்காங்களே! அதை நெனைச்சு சொன்னேன்! ஆனா மாமா, அதெல்லாம் பழைய டெக்னிக். இப்போ அப்படி பண்ண வச்சா, உங்க மேலத்தான் காண்டு அதிகமாகும்! முட்டாள் அமைச்சருக்கு ஏத்த முட்டா தொண்டனுங்கன்னு பொங்குவாங்களே தவிர, பரிதாபப்பட மாட்டாங்க!” என்றான் சக்தி.

தாடையைத் தடவியபடி யோசித்தார் இவர்.

“பண்ணிடலாம் சக்தி! என் மேல இந்த லஞ்ச கேசு நிக்காம இருக்க எதாச்சும் பண்ணிடலாம்! விசாரணைக் கமிஷன்ல உள்ளவங்க டீட்டேல் எடுத்தாச்சுல்ல! அதை வச்சு எதாச்சும் பண்ண முடியுதான்னு பார்க்கலாம்! அதுக்கு முதல்ல இந்த விஷயம்லாம் நம்மள மீறி எப்படி வெளிய போச்சுன்னு பார்க்கனும்! இப்போ நீ கிளம்பு சக்தி! எனக்கு ஸ்ட்ரெஸ் ரிலீவ் பண்ணனும்!” என்றவர், கெஸ்ட் ஹவுசின் அறையில் புகுந்து கொண்டார்.

சக்தி அங்கிருந்து கிளம்பும் போது, ஒரு கார் உள்ளே வந்து கொண்டிருந்தது. ரியர் வியூ கண்ணாடி வழி பார்க்கும் போது, பிரபல நடிகை ஒருத்தி இறங்கி வீட்டின் உள்ளே செல்வது தெரிந்தது. இவன் உதட்டில் கேலிப் புன்னகை ஒன்று முளைத்தது.

“யோவ் மாமா! நல்லா பண்றயா ஸ்ட்ரெஸ் ரிலீவூ!!”

கெஸ்ட் ஹவுசின் கேட்டைத் தாண்டி கார் வெளியேறியதும், இவன் வைத்திருக்கும் பர்னர் போனை எடுத்து கால் ஒன்று செய்தான் சக்தி. அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,

“சிவரஞ்சனி மேல எக்ஸ்ட்ரா கண்ணு வைங்க! அமைச்சர் சிம்பத்தி கிரியேட் பண்ண என்ன வேணா செய்யற நிலைல இருக்காரு! மகள போட்டுத் தள்ளி அனுதாபத்த சம்பாரிக்க முயற்சிக்கலாம்! சோ பீ எக்ஸ்ட்ரா கேர்ஃபூல்! அவங்க வீட்டுல நாம வச்சிருக்கற வேலைக்காரி கிட்டயும் விசயத்தை பாஸ் பண்ணிடுங்க! எக்காரணத்தக் கொண்டும் ரஞ்சனிக்குத் சின்னாதா கூட ஆபத்து வரக் கூடாது!” எனப் பேசி அழைப்பைத் துண்டித்தான்.

அதோடு இவனுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்தினான். அடுத்த அரசியல் வாரிசு இவன் என்பது மக்களுக்கு ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. இவனைப் போட்டுத் தள்ளி விட்டு,

“என் கட்சியின் எதிர்காலத்தையே செல்லரிக்க வைத்து விட்டார்கள்” என அவர் முதலைக் கண்ணீர் வடிப்பதற்கும் சான்ஸ் இருக்கிறது எனப் புரிந்தே இருந்தது சக்திக்கு.

சதுரங்க விளையாட்டைப் போல, எதிராளியின் எடுத்த மூவ் என்னவாக இருக்கும் எனக் கணிப்பதே பெருங் கஷ்டமாய் இருந்தது இவனுக்கு.

சுப்பு ரத்தினத்தின் வீட்டில், சுவரில் மாட்டி இருந்த மகனின் படத்தைப் பார்த்தபடியே கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார் ரங்க நாயகி. அந்த நேரம் அவருக்கு வெளிநாட்டு அழைப்பு ஒன்று வந்தது.

“ஹலோ”

“அம்மா”

“மஞ்சு! மஞ்சு! எங்கம்மா இருக்க? நல்லா இருக்கியா?” எனப் பதட்டமாகக் கேட்டார் ரங்க நாயகி.

“பார்டா! எங்கம்மாவுக்கு அக்கறைலாம் கூட இருக்கு!”

“என்னம்மா இப்படிலாம் பேசற!” எனக் கண்ணீருடன் கேட்டார் இவர்.

“நீலி கண்ணீர் வடிக்காதம்மா!”

“மஞ்சும்மா! எனக்கு உன்னை விட்டா யாரும்மா இருக்கா! தம்பியும் என்னை விட்டுட்டுப் போய் சேர்ந்துட்டான்” எனத் தளுதளுத்தார் ரங்க நாயகி.

“அவன் போனதும், வேற வழி இல்லைன்னு என் கால புடிக்கிறியாம்மா! எனக்கு அம்மா, அப்பா யாருமே வேணா! ஒரு நல்ல உள்ளத்தோட ஹெல்ப்ல நான் வெளிநாட்டுக்கு வந்துட்டேன்! நிம்மதியா என் புருஷன் கூட வாழத் தொடங்கிட்டேன்! பெத்தயேன்ற கடமைக்காக போன் போட்டு நல்லபடியா இருக்கேன்னு சொல்றேன்! அவ்ளோதான்! எங்கிருக்கேன், எப்படி வாழ்றேன்னு எதையும் கேக்காதே! சொல்லவும் மாட்டேன்!” எனச் சிடுசிடுத்தவளுக்குக் கண்ணீர் வந்து விட்டது.

“உன் நல்லதுக்குதானேடி அப்பா சொன்னத ஏத்துக்கச் சொல்லி ஃபோர்ஸ் பண்ணேன்! அந்தச் சக்தியக் கட்டி இருந்தா, தங்கக் கடலுக்கே நீ சொந்தக்காரியா இருந்திருப்ப! அவன் உன் மேல வச்ச காதலுக்கு, அப்படியே உன்னை இழைச்சிருப்பான் வைரத்துலயும், தங்கத்துலயும்!”

சற்று நேரம் அந்தப் பக்கம் அமைதி. தொண்டையைச் செறுமிக் கொண்ட மஞ்சரி.

“உன்னை மாதிரியும், அப்பா மாதிரியும் காசு, பணம்னா பொணம் மாதிரி வாயைப் பொழப்பேன்னு நெனைச்சியாம்மா? முத்து மேல நான் ஆசை வச்சிருக்கேன்னு தெரிஞ்சும், நீதானே அப்பாட்ட சொல்லி, அவர ரஞ்சுக்குப் பேசி முடிச்ச! உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்மா!”
 
“ஆமாடி! நான்தான் பேசி முடிச்சேன். என் மக ஒன்னும் இல்லாத பஞ்சப் பராரிய கட்டிக்கறதுல எனக்கு இஷ்டமில்ல! அதோட சனியன் புடிச்ச எங்கக்கா, கடைசி நேரத்துல சொத்தையெல்லாம் அந்த ரஞ்சுவ கல்யாணம் பண்ணிக்கப் போறவன் பேர்ல எழுதி வச்சிட்டுப் போயிருப்பான்னு நான் என்ன கனவாடி கண்டேன்! எங்கப்பாவோட சொத்துடி இது! ஒரு கண்ணுல வெண்ண, ஒரு கண்ணுல சுண்ணாம்புங்கற மாதிரி தில்லைக்கு முக்காவாசி சொத்தத் தூக்கிக் குடுத்துட்டு எனக்கு பிச்சைப் போடற மாதிரி தம்மாத்தூண்டு எழுதி வச்சான் எங்கப்பன். அந்தச் சொத்த விட்டுக் குடுக்கனுமா நானு? அதான் அந்தப் பிச்சைக்காரப் பயலுக்கு இந்த ரஞ்சுவ கட்டி வைக்கலாம்னு முடிவெடுத்தோம்! அவன் கிட்ட ஏற்கனவே ஸ்டாம்ப் பேப்பர்ல சைன் வைக்க சொல்லி சொத்தெல்லாம் எங்களுக்குன்னு எழுதி வாங்கிட்டோம்! அவன் அப்பா அம்மாவும் நாங்க போட்ட எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு பையன வித்துட்டாங்க எங்களுக்கு”

“அந்தப் பிச்சைக்காரப் பயத்தான் இப்போ உன் மாப்பிள்ள! அதை ஞாபகத்துல வச்சிக்கிட்டு பேசும்மா! பேராசை என்னைக்குமே பெரிய ஆப்பை வைக்கும்! அந்தச் சக்தியோட அப்பன் கட்சி நிதிக்குக் காசு குடுக்கலன்னு, பாம நாங்களே வைப்போம், நாங்களே எடுப்போம்ங்கற மாதிரி லாக்கப்ல அந்த சக்திய உன் புருஷனே வச்சுட்டு, அவரே வெளிய எடுத்தாரு! அந்த நன்றிக் கடனுக்கு அவன் அப்பன் காச கொட்டிக் குடுப்பான்னு நெனைச்சாரு உன் புருஷன். ஆனா மகன்காரனோ அரசியல் கத்துக்கறேன்னு நம்ம வீட்டுக்கே வந்துட்டான்! அப்பன்காரன் குடுத்தாலும் கொஞ்சமாத்தானே வரும்னு, சொந்த மகளயே ஐட்டக்காரி மாதிரி, அவனுக்குக் காபி குடுன்னு அனுப்பி வச்சு நோட்டம் பார்த்த எங்கப்பன் மாதிரி இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்கம்மா! அந்தப் பரதேசி பப்பரப்பேன்னு என்னைப் பார்த்துத் தொலைப்பானா! அங்க வந்தது எனக்குத் தலைவலி! நம்ம ட்ரைவர லீவ் போட வச்சி அவன் கூட போகிற மாதிரி அவன் வாயாலேயெ கேக்க வச்சு, அடிக்கடி அவன் கிட்ட போன் பேசு, அவன் கூட வெளிய போன்னு எப்படிலாம் மாமா வேலைப் பார்த்தாரு உன் புருஷன். சீச்சீ! என்னை வச்சி அவன் சொத்தையும், முத்தையாவ வச்சி ரஞ்சு சொத்தையும் அபகரிக்கப் பார்த்தீங்க! இப்போ ரஞ்சு சொத்து சக்திக்கும், சக்தியோட எல்லாம் அவன் பொண்டாட்டியான ரஞ்சுக்கும் போகப் போகுது! பக்காவா ப்ளான் போட்டு, முத்தையாவ கொன்னுடுவேன்னு மிரட்டி என்னைப் பணிய வச்சீங்க! எனக்கும் சக்திக்கும் எந்தக் காரணத்த கொண்டாச்சும் கல்யாணம் நின்ன்னுச்சுனா, என் முத்து பொணமா மெதப்பான்னு மிரட்டியே, சக்தியோட வழிசலையும், காதல் பார்வையையும் என்னைச் சகிச்சுக்க வச்சீங்க! முத்துக்கிட்ட, பேரண்ட்ஸ போட்டுத் தள்ளிருவோம்னு பயங்காட்டி இதுக்கு ஒத்துக்க வச்சீங்க! இப்போ எல்லாமே மண்ணாப் போய்டுச்சுல்ல! ரொம்ப சந்தோஷம்ம்மா எனக்கு! இனி நீயும் உன் புருஷனும் நடு முச்சந்தில உக்காந்து கதறிக் கதறி அழுங்க!”

“அடியே பைத்தியக்காரி! காதலெல்லாம் கொஞ்ச காலம்தான்டி கூட வரும்! அனுபவப்பட்டவ சொல்றேன் கேட்டுக்கோ! எல்லாம் கசந்து போச்சுன்னா, பணம்தான்டி பிரதானம்! சைக்கில்ல உக்காந்து அழறத விட, பென்ஸ்ல உக்காந்து அழுதா கெத்தா இருக்கும்டி மஞ்சு! என் பிள்ளைங்க நல்லதுக்குத்தான் நான் எல்லாமே செஞ்சேன். அதை நீ புரிஞ்சுக்கல! பரவால்ல விடு! பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு நம்மள பாத்துத்தான்டி சொல்லி வச்சிருக்காங்க! நீ எங்கிருக்கன்னு சொல்லு, நான் தேடி வரேன்! நீ நல்லா வாழ, தேவையான வசதிய செய்யறேன்!”

“யம்மா! பணமில்லாம எதுவும் நடக்காதுன்னு எனக்கும் தெரியும்! நான் கஷ்டப்பட்டா உன் மனசு தாங்காதுன்னு எனக்கும் புரியும்மா! என்ன இருந்தாலும் என்னைப் பெத்தத் தாயில்லையா நீ! அதான் வீட்டு லாக்கர்ல நீ பதுக்கி வச்சிருந்த பணம், நகையெல்லாம் ஆட்டையப் போட்டு, ஏஜெண்ட் மூலமா நாங்க வாழப் போற நாட்டுக்கு அனுப்பி வச்சிட்டேன்! பல வருஷத்துக்கு நான் சொகுசா வாழ வழி பண்ணிக் குடுத்ததுக்கு தேங்க்ஸ்மா! தெய்வமே! தெய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே!” என நக்கலாகப் பாடியவள்,

“இது, என் வாழ்க்கைய கைல எடுத்து விளையாடனதுக்கு நான் உனக்குக் குடுத்தத் தண்டனையா இருக்கட்டும்! பாய் மம்மி! உன் புருஷ்கிட்ட சொல்லி வை! என்னைத் தேடி வந்து கோக்குமாக்கா எதாச்சும் செய்ய முயற்சி பண்ணா, இப்போ நாறிக் கிடக்கற பேரை சோசியல் மீடியால இன்னும் நாறடிச்சிடுவேன்னு! தாய்க்கும், தாய் மண்ணுக்கும் பெரிய கும்பிடு! வர்ட்டா மம்மி!” என்றவள் அழைப்பை நிறுத்தி இருந்தாள்.

“அடியே! மஞ்சு! ஹேய் மஞ்சு!” எனக் கத்திய ரங்க நாயகி வேகமாய் தனதறை நோக்கி ஓடினார்!

மகன் இறந்து போனது, மகள் ஓடிப் போனது, கணவரின் அரசியல் பிரச்சனை என மனக் கவலையில் இருந்தவர், தனது லாக்கரை பற்றி எல்லாம் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. வேகமாய் லாக் நம்பர் போட்டுத் திறந்து பார்த்தவர், அதிர்ச்சியாய் சரிந்து தரையில் அமர்ந்து விட்டார். அதிர்ச்சியில் இருந்து மீண்டு, மகளுக்கு மீண்டும், மீண்டும் அழைக்க, நம்பர் பயன்பாட்டில் இல்லை என ஆங்கிலத்தில் வாய்ஸ் மேசேஜ் வந்தது!

“அடிப்பாவி மகளே! உனக்குச் சொத்து சேர்க்க நான் பிளான் பண்ணி குடுத்தா, நான் அமைச்சர் மனைவிங்கற ஹோதாவுல தில்லாலங்கடி பண்ணி சேர்த்து வச்ச சொத்த எல்லாம் அபேஸ் பண்ணிட்டியே! நல்லாவே இருக்க மாட்டடி நீ!!!” எனச் சாபமிட்டவர், வலிக்கத் தொடங்கிய நெஞ்சை நீவி விட்டுக் கொண்டார்.

தனதறையில் அமர்ந்து லாப்டாப்பில் வி.பி.என்னை(Virtual Private Network- இதை இன்ஸ்டால் செய்து வைஃபை அல்லது டாட்டா உபயோகிக்கும் போது, நாம் இண்டெர்னெட்டில் என்ன ஆக்டிவிட்டிஸ் மேற்கொள்கிறோம் என்பதை கண்டுப்பிடிப்பது கஷ்டம். ரகசியமாக ப்ரவுஸ் செய்ய நினைப்பவர்கள் இதனைப் பயன்படுத்துவார்கள்) ஆக்டிவேட் செய்த சிவரஞ்சனி, லாப்டாப்பில் தனக்கு வந்திருக்கும் வாய்ஸ் மேசேஜை மெல்லிய சத்ததில் கேட்க ஆரம்பித்தாள். வாய்ஸ் மேசேஜ் ஃப்ரம் த சமையல்காரி என கேப்ஷன் போட்டு சக்தி அமரன்தான் அனுப்பி இருந்தான் அதை.

“தில்லைம்மா செத்தது ஆக்சிடெண்ட் இல்ல! கொலைதான்! அந்தச் சாவுக்குக் காரணம் அமைச்சரும் அவரோட இப்போதைய பொண்டாட்டியும்தான்! ஆனா ரெண்டு பேரும் அதைச் சேர்ந்து செய்யல!!!!”



(உயிரானாய்!!!)
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 20)


அட... நான் நினைச்ச மாதிரியேத் தான் எல்லாமும் நடந்திரிக்கு. அமைச்சரும், அவரோட இந்நாள் பொண்டாட்டியும் சேர்ந்து தான் தில்லையை போட்டு தள்ளியிருக்காங்க. அதே மாதிரி கட்சி நிதிக்கு பணம் கொடுக்கலைன்னுத் தான்
சக்தியை தூக்கி பாடம் கட்டியிருக்காங்க. அங்க இருந்த போலீஸ்காரர் ஒருத்தர் சக்தி கிட்ட ஆடியோ வித் வீடியோ ரிகார்ட்டோட ப்ரூஃப் காட்டினவுடனே, அரசியல் கத்துக்கறேன்னு சொல்லி சக்தி அப்பத்துலேயிருந்தே தன் ஆட்டத்தை ஆட ஆரம்பிச்சிட்டான். அவனோட ஆல்ரெடி கூட்டுச் சேர்ந்துட்டா ரஞ்சனி. மஞ்சரியை அந்த முத்தையாவோட வெளிநாட்டுக்கு பேக் பண்ணியதும் சக்தி தான்.


ஆனா, இது எதுவும் தெரியாம சுப்பு ரத்தினமும் ரங்க நாயகியும் ஏமாந்து போயிட்டாங்க. ஆனா, இப்ப சுப்பு ரத்தினத்துக்கு ஏதோ டவுட் வந்திருக்குன்னு நினைக்கிறேன். ஸோ.. சக்தியும் ரஞ்சனியும் இனி, ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டியது அவசியம். ஏன்னா, சொத்துக்காக சொந்த பொண்டாட்டியையே அழிச்சவரு, பெத்த பொண்ணையும், மாப்பிள்ளையையும் அழிக்கவா தயங்கப் போறாரு..?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍
😱😱😱😱😱😱 அடேங்கப்பா டா மலைமுழுங்கிங்களா இருக்கும் போலயே.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா எங்க நெஞ்சை திக்திக் பக்பக் ன்னு அடிக்க வச்சிட்டீங்க வனிம்மா.
தில்லையோட மரணம் கொலை ஆனா இந்த கழிசடைங்க இரண்டும்சேந்து பண்ணலையா?🙄🙄🙄🙄🙄.
 
எமகாதங்க ரெண்டு பேரும்

அது தான் பிள்ளைகளும்
தந்திர மந்திர வேலை எல்லாம் செய்யுதுக
சக்தி மகா சக்தி
அருமையான பதிவு
 
ஆக இந்த கதைல யாரையும் நம்பிட கூடாது 😱😱 அடிச்சு கேட்டாலும் நம்ப கூடாது போல😲😲😲 மஞ்சு🙄🙄 எல்லாருக்கும் மேல பெரிய வில்லியா இருப்பா போலயே😱 எல்லாமே நிஜம் போலவே நடந்துச்சு ல😲😲😲 கதை முடியுற வரை எது உண்மை எது பொய் என்று பிரிக்கவே முடியாது போல🤷🤷🤷 ஏம்ப்பா சக்தி ராசா நீ தான் காதல் பார்வையா அள்ளி விட்டனு பாத்தா உனக்கு சமமா பார்வை வீசி இருக்கா பாரு மஞ்சு🤭🤭🤭🤭 ரெண்டு கூட்டு களவாணி இப்போ மூணு ஆகிட்டோ 🙄🙄🙄 மஞ்சு சேத்து,😂😂😂

அடேய் சுப்பு... நீ என்ன வேன்னாலும் பண்ணி தொலை... ஆனா உன் முதல் சீன்ல செத்து போன பொண்டாட்டிக்கு ஆரத்தி காட்டின பாரு😬😬😬😬 அத மட்டும் மறக்க மாட்டேன் டா😲😲😲😲😡😡 அவனா டா நீயியு 😬😬😬😬😡😡😡 எப்புடி ஏமாந்து இருக்கேன் பாரு😪😪😪

சுப்பு, ரங்கு... ரெண்டும் தனி தனியா தில்லைய எதோ பண்ணி இருக்கும் போல...

இன்னும் எம்புட்டு டுவிஸ்ட்டூடுடூ 🧐🧐🧐
 
நினைச்ச மாதிரி ரெண்டும் கூட்டுக் களவாணிங்க... தில்லை தானா சாகுற அளவுக்கு டார்ச்சர் பண்ணிருக்குங்களோ 😡😡😡😡

ரங்கா பணம்ன்ன உடனே வாயைப் பிளக்குறாங்க 😂😂😂 இவங்க பெத்தது இவங்களுக்கு மேல இருக்கு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

எப்படி ரஞ்சனி இந்த குடும்பத்துல இருந்தாளோ பாவம் 🙁🙁🙁
 
Back
Top