VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

அத்தியாயம் 3
“அரசியல்னா ஈசி இல்லப்பா சக்தி! முழு மூச்சா இறங்கி வேலை செய்யனும். குடும்பம், உறவு, நட்பு எல்லாத்தையும் ஓரடி தள்ளி வச்சு உசுர குடுத்து களத்துல இறங்கனும். நேர்மையா இருக்கனும்னு நாம நினைச்சாலும் சந்தர்ப்பமும் சூழலும் கண்டிப்பா விடாது! இந்த ரெண்டு கையும் கறை படிஞ்ச கைகள்தான்! இல்லைன்னு சொல்லல! நாம நேர்மையா இருக்கனும்னாலும், நம்ம சுத்தி இருக்கறவங்க விட மாட்டாங்க! நம்மள செல்லாக்காசு ஆக்கிடுவாங்க! ஆனாலும் எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு சக்தி! என்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு நான் நல்லவனாத்தான் இருக்கேன்! அவங்க எனக்குக் குடுத்த வாக்குகளுக்காக(ஓட்டு), நான் அவங்களுக்குக் குடுத்த வாக்குகள நிறைவேத்திக் குடுத்துட்டுத்தான் இருக்கேன். என் மனசாட்சி படி நான் நல்லவன்தான்! சேத்துல இருந்தாலும் செந்தாமரைன்னு வைய்யேன்” எனப் பேசிய சுப்பு ரத்தினத்தை மென் புன்னகையுடன் பார்த்திருந்தான் சக்தி அமரன்.
“உன்னைப் போல இளைஞர்கள் அரசியலுக்கு வரது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் ரொம்ப அவசியமான ஒன்னு! எல்லோரும் படிச்சிட்டு வெளிநாட்டு வேலைன்னு போய்ட்டா, நாட்டையும் நாட்டு மக்களையும் யார் பார்த்துக்கறது? களத்துல இறங்கனும்யா! புரையோடிக் கிடக்கற களைய எடுக்கனும்! அது இளைய சமுதாயத்தாலத்தான் முடியும்! எங்கள மாதிரி ஆட்கள் சுகர், பி.பி கூட போராடிக்கிட்டே என்னத்த புதுமைய புகுத்திடப் போறோம்? என்னத்த சாதிச்சிடப் போறோம் சொல்லு! நீ அரசியலுக்கு வரன்னு சொன்னதுல எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்குய்யா! மாமா கூடவே கொஞ்ச நாளுக்கு இரு! என்ன நடக்குதுன்னு கவனி! பிறகு உனக்கேத்தது போல நான் எதாவது செய்யறேன்! ஆனா சக்தி..” எனக் குரலைக் கொஞ்சம் கடுமையாக்கி இவன் முகம் பார்த்தார் சுப்பு ரத்தினம்.
“சொல்லுங்க மாமா!”
“காசு சம்பாதிக்கனும்ங்கற நோக்கத்தோட இதுல நீ நுழையனும்னு ஆசைப்பட்டா, அதுக்கு என்னோட கட்சி சரிப்பட்டு வராது! வாசல் அங்கத்தான் இருக்கு, இப்படியே எழுந்து வெளிய போய்டு!” எனக் கறாராகச் சொன்னார்.
“எங்க கிட்ட இல்லாத காசா மாமா! உங்களுக்குத் தெரியாதா எங்க நிலையைப் பத்தி! எனக்கு எதாச்சும் சாதிக்கனும் மாமா! கடைல போய் உக்காந்து கல்லால காசு எண்ணற வேலைலாம் எனக்குச் சரிப்பட்டு வரும்னு தோணல மாமா! ப்ரேண்ட்ஸ், ஜாலி, குடி, கும்மாளம்னு நெறய வருசங்கள வேஸ்ட் பண்ணிட்டேன்! எனக்குன்னு ஓர் அடையாளம் இல்ல! சக்தினா யாரு? சக்தினா நகைக்கடை அருள்மணியோட பையன்! அப்படித்தான் பார்க்கப்படறேன்! எனக்கு அது பிடிக்கல மாமா! சக்தினா யாரு? சக்தினா இன்னார்னு எனக்கொடு பேரு வேணும். அடையாளம் வேணும்! உங்களால அதை எனக்குக் குடுக்க முடியும்னு தோணுச்சு மாமா! அதான் உங்க கிட்ட வந்துட்டேன்!” என்றவனை வாஞ்சையாகப் பார்த்தார் சுப்பு ரத்தினம்.
“நான் நல்லவன், நான் நல்லவன்னு சொல்லிட்டுத் திரியறான் பார்த்தியா, அவன மட்டும் நம்பவே முடியாதுடா மருமவனே! அவனுக்குள்ளத்தான் எல்லா கேப்மாரித்தனமும் ஒளிஞ்சு கிடக்கும்! நான் இதையெல்லாம் பண்ணேன்! இனி திருந்தி நல்ல வழி வரப் பார்க்கறேன்னு ஒத்துக்கிட்டப்பாரு, அங்க தெரியுது உன்னோட நேர்மை! இனி நீ எங்களில் ஒருவன்!” என அவரிடத்தில் இருந்து எழுந்து வந்து சக்தி அமரனை அணைத்துக் கொண்டார் சுப்பு ரத்தினம்.
இவனும் அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“ஏன்டா மருமகனே! தண்ணி, தம்முன்னு எல்லாம் ஒத்துக்கிட்ட! பொண்ணு மேட்டர்லாம் ஒன்னும் கிடையாதா?” எனக் கிசுகிசுப்பாக அவன் காதோரம் கேட்டார் இவர்.
அவர்களைத் தள்ளி சில கட்சிக்காரர்கள் நின்றிருந்தார்கள்.
இவனும் மெல்லியக் குரலில்,
“ஆசைத்தான் மாமா! ஆனா எங்க!!!!! என் மம்மி, என் ப்ரேண்ட்ஸ் சர்க்கிள்லயே ஸ்பை வைச்சிருக்காங்க! நான் மட்டும் பொண்ணு கிண்ணுன்னு போனேன்னு வைங்க, தோல உரிச்சு தோரணம் கட்டிருவாங்க! எதுக்கு மாமா ரிஸ்க்கு! எங்கப்பா வேற ராமனா ஃபார்ம் ஆகிட்டாரு! அவரு மகன் ராவணனா போய் நின்னா அவர் மேல நான் வச்சிருக்கற பாசத்துக்கு என்ன மதிப்பு! அதான் சைட்டிங் மட்டும்! லேசா அங்கிங்க டச்சிங்! அவ்ளோதான். மத்தப்படி நான் அக்மார்க் கன்னிப் பையன் மாமா”
அவனது பேச்சைக் கேட்டு வாய் விட்டு நகைத்தார் சுப்பு ரத்தினம்.
“எப்போதும் இப்படியே இருந்திருடா மருமகனே! சபலத்துக்கு அடிமையாகிட்டா, சகலமும் போய்டும்!”
“அப்படியே ஆகட்டும் மாமா” எனப் புன்னகையுடன் சொன்னவனை வாஞ்சையாகப் பார்த்தார் இவர்.
சற்றுத் தள்ளி நின்றிருந்த ஆபிஸ் பொறுப்பாளர் கார்மேகத்தை அழைத்த சுப்பு ரத்தினம்,
“காரு! நம்ம பையன் இவன். கூடமாட ஒத்தாசையா வச்சிக்கோ! இதிது இப்படி, அதது அப்படின்னு சொல்லிக் குடு” எனச் சக்தியின் பொறுப்பைக் அவரிடம் ஒப்படைத்தார்.
“காரு கூட போய்யா! இன்னிக்கு எனக்கு நெறய மீட்டிங் இருக்கு! நான் போய்ட்டு வந்துடறேன்” என வெளியேறினார் சுப்பு ரத்தினம்.
கரை வேட்டி அணிந்த சில பாடிகார்ட்களும், சுப்பு ரத்தினத்தின் பி.ஏவும் இன்னும் கட்சியில் சில முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் அவருடன் வெளியேறினார்கள்.
அந்தக் கார்மேகம் தனது ஐம்பதுகளில் இருந்தார். சாந்தமான முகம்.
“வாய்யா! முதல்ல ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்” என இவனை அழைத்தார்.
அவரோடு நடந்தவன்,
“அங்கிள்! நீங்க ரொம்பக் காலமா இங்க வேலைப் பார்க்கறீங்களா?” எனக் கேட்டான்.
நின்று அவனை ஆழ்ந்து பார்த்தக் கார்மேகம்,
“இவன் என்னடா நமக்கு இதெல்லாம் சொல்றதுன்னு நீ நினைக்காம இருந்தா, ஒரு விஷயம் சொல்லவாப்பா நானு?” எனச் சம்மதம் கேட்டார் அவர்.
“சொல்லுங்க அங்கிள்!”
“இந்த அங்கிள்தான் பிரச்சனை! இங்க யாரையும் அங்கிள், அண்ணா, தம்பின்னு முறை வச்சுக் கூப்டு பழகாதே! அப்புறம் அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க! தலை மேல ஏறிடுவாங்க! வாங்க, போங்கன்னு பேசு! நல்லா பழகு! அக்கறை இருக்கோ இல்லையோ, இருக்கற மாதிரி காட்டிக்கோ! ஆனா மனசால யாரயும் நெருங்கிடாத! ஓன் ஸ்டேப் தள்ளியே நில்லு! எவர வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் கழட்டி விட்டுட்டு முன்னுக்குப் போய்ட்டே இருக்க வேண்டிய துறை இது! தூர நிறுத்திப் பழகறப்ப, ஈசியா இருக்கும் அப்படி முன்னேறிப் போக”
“மிஸ்டர் கார்மேகம்! மனசால தூர நிறுத்திப் பழகனாலும், அவங்க நமக்கு நெருக்கமானவங்க மாதிரி ஒரு ஃபீல் தரனும்! அப்பத்தான் அவங்க தலைல நாம மொளகா அரைக்க, வாண்ட்டட்டா தலையைக் காட்டுவாங்க! அரசியல்ல உங்க மெத்தட்லயே போய் பூவைப் பூன்னும் சொல்லலாம், இல்ல என் மெத்தட்ல போய் பூவைப் புய்ப்பம்னும் சொல்லலாம்! எப்படி சொன்னா என்ன, நமக்குப் பூ மாலை கழுத்துல விழுந்தா பத்தாதா கார்மேகம் அங்கிள்?” எனக் கண் சிமிட்டிச் சொன்னவனை ஆவெனப் பார்த்தார் இவர்.
அதற்குள் கட்டிடத்துக்கு வெளியே இருந்த டீக்கடை வந்திருக்க,
“மாஸ்டர், டீ ரெண்டு! அங்கிளுக்கு கொஞ்சம் சுகர் தூக்கலா போட்டு!” எனச் சொன்னான் சக்தி.
“இப்போ என்னை அங்கிள்னு கூப்பிடறது உன் மெத்தட்ல தோளுல துண்டைப் போட்டு முதுகுல கும்மாங்குத்து குத்துறதுக்கா?” எனக் கேட்டார் இவர்.
“சேச்சே! நீங்க எவ்ளோ நல்லவருன்னு எனக்குத் தெரியாதா அங்கிள்! சோசியல் சயின்ஸ் படிச்சு, அதுல போலிடிக்கல் சயின்ஸ்ல செம்ம ஸ்கோர் வாங்கிட்டு, எங்க மாமா கிட்ட குப்பைக் கொட்டறீங்க இத்தனை வருஷமான்னு தெரிஞ்சுத்தான் வச்சிருக்கேன்! மாமா மேடைல பேசற அனல் பறக்கும் ஸ்பீச்லாம் எழுதி குடுக்கறது நீங்கத்தான்னும் தெரியும்! இந்த ஆபிஸ் ஸ்மூத்தா ஓடுதுனா அதுக்கு மூலக்காரணம் நீங்கத்தான்னும் தெரியும்! அவ்ளோ முக்கியமானப் பொறுப்புல இருந்தும் சின்னதா ஒரு வீடு, ஸ்காலர்சிப்ல இஞ்சினியரிங் படிக்கற மகன், ஸ்கூல் போற மக, வீட்டரசியா இருக்கும் மனைவின்னு ரொம்ப ஆர்ப்பாட்டமில்லாத சராசரி வாழ்க்கை வாழ்றீங்கன்னும் தெரியும்!” என ஆழ்ந்த குரலில் சொன்னவன்,
“இந்த மாதிரி ரோட்டுக் கடைலலாம் டீ குடிச்சது இல்லை அங்கிள்! வயித்த கலக்கி விடாதுல்ல?” என்று அப்பாவியாய் கேட்டான்.

அத்தியாயம் 3
“அரசியல்னா ஈசி இல்லப்பா சக்தி! முழு மூச்சா இறங்கி வேலை செய்யனும். குடும்பம், உறவு, நட்பு எல்லாத்தையும் ஓரடி தள்ளி வச்சு உசுர குடுத்து களத்துல இறங்கனும். நேர்மையா இருக்கனும்னு நாம நினைச்சாலும் சந்தர்ப்பமும் சூழலும் கண்டிப்பா விடாது! இந்த ரெண்டு கையும் கறை படிஞ்ச கைகள்தான்! இல்லைன்னு சொல்லல! நாம நேர்மையா இருக்கனும்னாலும், நம்ம சுத்தி இருக்கறவங்க விட மாட்டாங்க! நம்மள செல்லாக்காசு ஆக்கிடுவாங்க! ஆனாலும் எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு சக்தி! என்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு நான் நல்லவனாத்தான் இருக்கேன்! அவங்க எனக்குக் குடுத்த வாக்குகளுக்காக(ஓட்டு), நான் அவங்களுக்குக் குடுத்த வாக்குகள நிறைவேத்திக் குடுத்துட்டுத்தான் இருக்கேன். என் மனசாட்சி படி நான் நல்லவன்தான்! சேத்துல இருந்தாலும் செந்தாமரைன்னு வைய்யேன்” எனப் பேசிய சுப்பு ரத்தினத்தை மென் புன்னகையுடன் பார்த்திருந்தான் சக்தி அமரன்.
“உன்னைப் போல இளைஞர்கள் அரசியலுக்கு வரது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் ரொம்ப அவசியமான ஒன்னு! எல்லோரும் படிச்சிட்டு வெளிநாட்டு வேலைன்னு போய்ட்டா, நாட்டையும் நாட்டு மக்களையும் யார் பார்த்துக்கறது? களத்துல இறங்கனும்யா! புரையோடிக் கிடக்கற களைய எடுக்கனும்! அது இளைய சமுதாயத்தாலத்தான் முடியும்! எங்கள மாதிரி ஆட்கள் சுகர், பி.பி கூட போராடிக்கிட்டே என்னத்த புதுமைய புகுத்திடப் போறோம்? என்னத்த சாதிச்சிடப் போறோம் சொல்லு! நீ அரசியலுக்கு வரன்னு சொன்னதுல எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்குய்யா! மாமா கூடவே கொஞ்ச நாளுக்கு இரு! என்ன நடக்குதுன்னு கவனி! பிறகு உனக்கேத்தது போல நான் எதாவது செய்யறேன்! ஆனா சக்தி..” எனக் குரலைக் கொஞ்சம் கடுமையாக்கி இவன் முகம் பார்த்தார் சுப்பு ரத்தினம்.
“சொல்லுங்க மாமா!”
“காசு சம்பாதிக்கனும்ங்கற நோக்கத்தோட இதுல நீ நுழையனும்னு ஆசைப்பட்டா, அதுக்கு என்னோட கட்சி சரிப்பட்டு வராது! வாசல் அங்கத்தான் இருக்கு, இப்படியே எழுந்து வெளிய போய்டு!” எனக் கறாராகச் சொன்னார்.
“எங்க கிட்ட இல்லாத காசா மாமா! உங்களுக்குத் தெரியாதா எங்க நிலையைப் பத்தி! எனக்கு எதாச்சும் சாதிக்கனும் மாமா! கடைல போய் உக்காந்து கல்லால காசு எண்ணற வேலைலாம் எனக்குச் சரிப்பட்டு வரும்னு தோணல மாமா! ப்ரேண்ட்ஸ், ஜாலி, குடி, கும்மாளம்னு நெறய வருசங்கள வேஸ்ட் பண்ணிட்டேன்! எனக்குன்னு ஓர் அடையாளம் இல்ல! சக்தினா யாரு? சக்தினா நகைக்கடை அருள்மணியோட பையன்! அப்படித்தான் பார்க்கப்படறேன்! எனக்கு அது பிடிக்கல மாமா! சக்தினா யாரு? சக்தினா இன்னார்னு எனக்கொடு பேரு வேணும். அடையாளம் வேணும்! உங்களால அதை எனக்குக் குடுக்க முடியும்னு தோணுச்சு மாமா! அதான் உங்க கிட்ட வந்துட்டேன்!” என்றவனை வாஞ்சையாகப் பார்த்தார் சுப்பு ரத்தினம்.
“நான் நல்லவன், நான் நல்லவன்னு சொல்லிட்டுத் திரியறான் பார்த்தியா, அவன மட்டும் நம்பவே முடியாதுடா மருமவனே! அவனுக்குள்ளத்தான் எல்லா கேப்மாரித்தனமும் ஒளிஞ்சு கிடக்கும்! நான் இதையெல்லாம் பண்ணேன்! இனி திருந்தி நல்ல வழி வரப் பார்க்கறேன்னு ஒத்துக்கிட்டப்பாரு, அங்க தெரியுது உன்னோட நேர்மை! இனி நீ எங்களில் ஒருவன்!” என அவரிடத்தில் இருந்து எழுந்து வந்து சக்தி அமரனை அணைத்துக் கொண்டார் சுப்பு ரத்தினம்.
இவனும் அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
“ஏன்டா மருமகனே! தண்ணி, தம்முன்னு எல்லாம் ஒத்துக்கிட்ட! பொண்ணு மேட்டர்லாம் ஒன்னும் கிடையாதா?” எனக் கிசுகிசுப்பாக அவன் காதோரம் கேட்டார் இவர்.
அவர்களைத் தள்ளி சில கட்சிக்காரர்கள் நின்றிருந்தார்கள்.
இவனும் மெல்லியக் குரலில்,
“ஆசைத்தான் மாமா! ஆனா எங்க!!!!! என் மம்மி, என் ப்ரேண்ட்ஸ் சர்க்கிள்லயே ஸ்பை வைச்சிருக்காங்க! நான் மட்டும் பொண்ணு கிண்ணுன்னு போனேன்னு வைங்க, தோல உரிச்சு தோரணம் கட்டிருவாங்க! எதுக்கு மாமா ரிஸ்க்கு! எங்கப்பா வேற ராமனா ஃபார்ம் ஆகிட்டாரு! அவரு மகன் ராவணனா போய் நின்னா அவர் மேல நான் வச்சிருக்கற பாசத்துக்கு என்ன மதிப்பு! அதான் சைட்டிங் மட்டும்! லேசா அங்கிங்க டச்சிங்! அவ்ளோதான். மத்தப்படி நான் அக்மார்க் கன்னிப் பையன் மாமா”
அவனது பேச்சைக் கேட்டு வாய் விட்டு நகைத்தார் சுப்பு ரத்தினம்.
“எப்போதும் இப்படியே இருந்திருடா மருமகனே! சபலத்துக்கு அடிமையாகிட்டா, சகலமும் போய்டும்!”
“அப்படியே ஆகட்டும் மாமா” எனப் புன்னகையுடன் சொன்னவனை வாஞ்சையாகப் பார்த்தார் இவர்.
சற்றுத் தள்ளி நின்றிருந்த ஆபிஸ் பொறுப்பாளர் கார்மேகத்தை அழைத்த சுப்பு ரத்தினம்,
“காரு! நம்ம பையன் இவன். கூடமாட ஒத்தாசையா வச்சிக்கோ! இதிது இப்படி, அதது அப்படின்னு சொல்லிக் குடு” எனச் சக்தியின் பொறுப்பைக் அவரிடம் ஒப்படைத்தார்.
“காரு கூட போய்யா! இன்னிக்கு எனக்கு நெறய மீட்டிங் இருக்கு! நான் போய்ட்டு வந்துடறேன்” என வெளியேறினார் சுப்பு ரத்தினம்.
கரை வேட்டி அணிந்த சில பாடிகார்ட்களும், சுப்பு ரத்தினத்தின் பி.ஏவும் இன்னும் கட்சியில் சில முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் அவருடன் வெளியேறினார்கள்.
அந்தக் கார்மேகம் தனது ஐம்பதுகளில் இருந்தார். சாந்தமான முகம்.
“வாய்யா! முதல்ல ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்” என இவனை அழைத்தார்.
அவரோடு நடந்தவன்,
“அங்கிள்! நீங்க ரொம்பக் காலமா இங்க வேலைப் பார்க்கறீங்களா?” எனக் கேட்டான்.
நின்று அவனை ஆழ்ந்து பார்த்தக் கார்மேகம்,
“இவன் என்னடா நமக்கு இதெல்லாம் சொல்றதுன்னு நீ நினைக்காம இருந்தா, ஒரு விஷயம் சொல்லவாப்பா நானு?” எனச் சம்மதம் கேட்டார் அவர்.
“சொல்லுங்க அங்கிள்!”
“இந்த அங்கிள்தான் பிரச்சனை! இங்க யாரையும் அங்கிள், அண்ணா, தம்பின்னு முறை வச்சுக் கூப்டு பழகாதே! அப்புறம் அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க! தலை மேல ஏறிடுவாங்க! வாங்க, போங்கன்னு பேசு! நல்லா பழகு! அக்கறை இருக்கோ இல்லையோ, இருக்கற மாதிரி காட்டிக்கோ! ஆனா மனசால யாரயும் நெருங்கிடாத! ஓன் ஸ்டேப் தள்ளியே நில்லு! எவர வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் கழட்டி விட்டுட்டு முன்னுக்குப் போய்ட்டே இருக்க வேண்டிய துறை இது! தூர நிறுத்திப் பழகறப்ப, ஈசியா இருக்கும் அப்படி முன்னேறிப் போக”
“மிஸ்டர் கார்மேகம்! மனசால தூர நிறுத்திப் பழகனாலும், அவங்க நமக்கு நெருக்கமானவங்க மாதிரி ஒரு ஃபீல் தரனும்! அப்பத்தான் அவங்க தலைல நாம மொளகா அரைக்க, வாண்ட்டட்டா தலையைக் காட்டுவாங்க! அரசியல்ல உங்க மெத்தட்லயே போய் பூவைப் பூன்னும் சொல்லலாம், இல்ல என் மெத்தட்ல போய் பூவைப் புய்ப்பம்னும் சொல்லலாம்! எப்படி சொன்னா என்ன, நமக்குப் பூ மாலை கழுத்துல விழுந்தா பத்தாதா கார்மேகம் அங்கிள்?” எனக் கண் சிமிட்டிச் சொன்னவனை ஆவெனப் பார்த்தார் இவர்.
அதற்குள் கட்டிடத்துக்கு வெளியே இருந்த டீக்கடை வந்திருக்க,
“மாஸ்டர், டீ ரெண்டு! அங்கிளுக்கு கொஞ்சம் சுகர் தூக்கலா போட்டு!” எனச் சொன்னான் சக்தி.
“இப்போ என்னை அங்கிள்னு கூப்பிடறது உன் மெத்தட்ல தோளுல துண்டைப் போட்டு முதுகுல கும்மாங்குத்து குத்துறதுக்கா?” எனக் கேட்டார் இவர்.
“சேச்சே! நீங்க எவ்ளோ நல்லவருன்னு எனக்குத் தெரியாதா அங்கிள்! சோசியல் சயின்ஸ் படிச்சு, அதுல போலிடிக்கல் சயின்ஸ்ல செம்ம ஸ்கோர் வாங்கிட்டு, எங்க மாமா கிட்ட குப்பைக் கொட்டறீங்க இத்தனை வருஷமான்னு தெரிஞ்சுத்தான் வச்சிருக்கேன்! மாமா மேடைல பேசற அனல் பறக்கும் ஸ்பீச்லாம் எழுதி குடுக்கறது நீங்கத்தான்னும் தெரியும்! இந்த ஆபிஸ் ஸ்மூத்தா ஓடுதுனா அதுக்கு மூலக்காரணம் நீங்கத்தான்னும் தெரியும்! அவ்ளோ முக்கியமானப் பொறுப்புல இருந்தும் சின்னதா ஒரு வீடு, ஸ்காலர்சிப்ல இஞ்சினியரிங் படிக்கற மகன், ஸ்கூல் போற மக, வீட்டரசியா இருக்கும் மனைவின்னு ரொம்ப ஆர்ப்பாட்டமில்லாத சராசரி வாழ்க்கை வாழ்றீங்கன்னும் தெரியும்!” என ஆழ்ந்த குரலில் சொன்னவன்,
“இந்த மாதிரி ரோட்டுக் கடைலலாம் டீ குடிச்சது இல்லை அங்கிள்! வயித்த கலக்கி விடாதுல்ல?” என்று அப்பாவியாய் கேட்டான்.