எபி 4

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

Bill's_Bungy_Jump.jpg

பங்கீ ஜம்ப்பிங்


எபி பாடல்

இந்தப் பாட்டுக் கேக்கறப்ப அவ்ளோ இனிமையா இருக்கும். அப்படியே யாரோ நெற்றியை வருடித் தூங்க வைக்கறது போல ஃபீலாகும்! ஜானகி பாடற இள மேனி உன் வசமோ, அப்படியே அவங்க வசம் இழுக்கும் நம்மல! அழகே நீ எங்கே, என் பார்வை அங்கேன்னு யேசுதாஸ் பாடறப்ப அப்படியே உருகிடுவோம்!



அத்தியாயம் 4



காரை ஓட்டிக் கொண்டிருந்தவனும் அமைதியாய் வர, அதில் பயணித்தவளும் அமைதியாய் வர, யேசுதாஸும் ஜானகியும் மட்டும் தங்களது மயக்கும் குரலால் இனிமையைப் பரப்பியபடி அவர்களுடன் பயணித்தனர்.

“கண்ணாலே காதல் கவிதை

சொன்னாளே எனக்காக” என ரம்மியமாய் காதை நிறைத்தது பாடல்.

காரில் ஏறியதிலிருந்தே இது போலத்தான் பல ரகமாய் காதல் சொட்டும் பாடல்கள் ஒலியேறிக் கொண்டிருந்தன. போன் வழி ஸ்போடிஃபை கனேக்ட் செய்து உருக்கமான காதல் ரசம் சொட்டும் பாடல்களை போட்டு விட்டிருந்தான் சக்தி அமரன். அன்று மட்டுமல்ல, அவள், அவன் காரில் பயணிக்க ஆரம்பித்த இந்த ஒரு வாரமாய் இதுதான் நடக்கிறது.

அவள் காரில் ஏறி அமரும் போது சின்னதாய் ஒரு புன் முறுவல் தருவான். இவள் ஹாய் என்றால் பதிலுக்கு ஒரு ஹாய் வரும்! பிறகு காரோட்டவே பிறப்பெடுத்தவன் போல சாலையிலே இருக்கும் அவன் கவனம். இவளும் அதற்கு மேல் எதுவும் பேசிக் கொள்ளமாட்டாள். காலேஜ் வாசலில் இறக்கி விடுபவன், அதே சிறிய முறுவலுடன் பாய் எனச் சொல்லிக் கிளம்பி விடுவான். மாலையில் காலேஜ் முடிந்ததும் அவளை ஏற்றிக் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டுக் கிளம்பி விடுவான்.

முதன் முதலில் அவளைப் பார்த்தப் போது அவன் கண்களில் தெரிந்த மின்னலைக் கவனித்திருந்தாள் சிவமஞ்சரி. இந்த ஒரு வார பயணத்தில் ஏதாவது வழிவான், சிரிப்பான், சில்மிஷங்கள் செய்யப் பார்ப்பான் என இவள் பயந்திருக்க, அவனோ அவள் எண்ணங்களைப் பொசுக்கி இருந்தான்.

‘நல்லவன்தான் போல!’ என மனதினுள் எண்ணிக் கொண்டாள் இவள்.

யூத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்குச் சக்தி அமரனைத் தெரிந்திருக்கும். இன்ஸ்டாவில் அவனுக்கு நிறைய பெண்களே ஃபோலோவர்களாக இருந்தார்கள். ஒரு போட்டோவோ, ரீல்ஸோ எது போட்டாலும், லைக்ஸ் அண்ட் கமேண்ட் பிய்த்துக் கொள்ளும். இவளும் ஃபேக் ஐடியில் அவனை ஃபோலோ செய்து கொண்டுதான் இருந்தாள். ஒரு நாள் பப்பில் பரவசமாய் இருப்பான். மறுநாள் கங்கை ஆர்த்தியில் பக்திமயமாய் நிற்பான். ஒரு நாள் கடலோரத்து தொங்கும் ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருப்பான். மறுநாள் மலை உச்சியில் பங்கீ ஜம்ப்பில் தொங்கிக் கொண்டிருப்பான். இவன் இப்படித்தான் எனக் கணிக்க முடியாத அவனது பெர்சனல் வாழ்க்கையை மிகவுமே ரசித்தாள் சிவமஞ்சரி. அவனிடம் பேசிப் பழக ஆவல் இருந்ததுதான். ஆனாலும் ஒரு தயக்கம்.

‘அழகு இருக்கு! பணம் இருக்கு! மில்லியன்ல பாலோவர்ஸ் இருக்காங்க! கண்டிப்பா ஈகோ புடிச்சவனாத்தான் இருப்பான். நாமும் இளிச்சிட்டுப் பின்னால போய் இவன் ஈகோவுக்குத் தீனிப் போட்டுடக் கூடாது!’ எனத் தள்ளியே இருந்தாள்.

ஆனாலும் மனது கேட்கவில்லை. அவனது வேலையெல்லாம் ஒதுக்கி விட்டு ட்ரைவர் வேலைப் பார்ப்பவனைக் கண்டு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பது, அவனை அவமதிப்பது போல இருக்க,

“சக்தி சார்” என அழைத்தாள் இவள்.

“கூப்டியா மஞ்சரி?” எனக் கேட்டான் சக்தி.

“ஆமா சக்தி சார்! நானே பேச ஆரம்பிக்கலனா ஒரு மாசம் ஆனாலும் உங்க பக்கம் இருந்து ஹாய் பாய் தவிர ஒன்னும் வராதுன்னு தெரிஞ்சிருச்சு! அதான் நானே ஒரு ஸ்டேப் எடுத்து முன்னுக்கு வச்சேன்” எனச் சொல்லிப் புன்னகைத்தாள் பெண்.

சற்று நேரம் அமைதியாய் இருந்தவன்,

“சாரி மஞ்சரி” என்றான்.

“எதுக்கு சாரி? பேசறதும் பேசாததும் உங்க இஷ்டம்தானே! அதுக்கெல்லாமா சாரி சொல்வாங்க”

“எனக்கு உன் மேல சின்னதா கோபம்”

கொஞ்சமாய் திரும்பி அமர்ந்து, கார் ஓட்டுபவனை ஆழ்ந்து பார்த்தாள் இவள்.

“ஏன் சக்தி சார்? எனக்கு ட்ரைவர் வேலைப் பார்க்கறது உங்க இமேஜ்கு ரொம்பக் கேவலமா இருக்கோ?”

“சேச்சே! அப்படிலாம் இல்ல மஞ்சரி. அந்த வீணாப் போனவளுக்காக நீ என்னைத் திட்டிட்டேல்ல, அதுல சின்னதா கோபம் எனக்கு”

சிவமஞ்சரிக்கெனத் தனியாய் ஒரு ட்ரைவர் இருந்தார். மிகவும் நம்பிக்கையான ஆள் அவர். தனது கிராமத்தில் ஏதோ பிரச்சனை என அவர் போயிருக்க, மஞ்சரியை யாரை நம்பியும் விட மனதில்லை சுப்பு ரத்தினத்துக்கு. இவரே அழைத்துப் போய் வரலாம் என்றால், கோவையில் நிகழ்ச்சி ஒன்றுக்குத் தலைமைத் தாங்க அழைத்திருந்தார்கள். அதோடு அங்கேயே சில நாட்கள் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை.

சுப்பு ரத்தினம் அழைத்தார் என அவர் வீட்டுக்கு இவன் போயிருந்த போதுதான் பெற்றவர்களுக்கும் மகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது.

“அக்காவ மட்டும் அப்படியே சுதந்திரமா விட்டுட்டு என்னை மட்டும் ஏன்பா பொத்திப் பொத்தி வளக்கறீங்க? எனக்குக் கார் ஓட்ட முடியும். லைசென்சும் வச்சிருக்கேன்! பிறகேன்பா என்னைத் தனியா காரெடுக்க விட மாட்டறீங்க” எனக் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தாள் சிவமஞ்சரி.

“ஏன்னு உனக்குத் தெரியாதாடி? வீட்டுல இருந்து வெளியாகறப்பவே நாலு பூச்சாடிய இடிச்சு, தோட்டக்காரன உரசின்னு எங்களுக்குப் பீதிய கிளப்பிட்ட! உன் கைல காரைக் குடுத்துட்டு, நாங்க உசுர கைல புடிச்சிட்டு இருக்கவா? உங்கக்காவ சுதந்திரமா விடறோம்னா, சரக்கு மப்புல இருந்தாலும், சரியா ஓட்டிட்டு வந்துடறா! அதோட அவ கிட்ட இதை செய் அதை செய்யாதேன்னு நாங்க வாயைத் திறக்கவா முடியும்?” என அங்கலாய்த்தார் ரங்க நாயகி.

“உங்க ரெண்டு பேருக்கும் நான்தான் இளிச்சவாய்! அக்காட்ட காட்ட முடியாத கெடுபிடிலாம் என் கிட்ட காட்டறீங்க!” எனக் கண்ணீரைத் துடைத்தபடி பேசியவள், வாசலில் பி.ஏவுடன் நின்றிருந்த சக்தி அமரனைப் பார்த்ததும் வேகமாய் டைனிங் ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.

“அட சக்தி! வாப்பா! வா! இன்னிக்கு நான் கோயம்புத்தூருக்குக் கிளம்பனும்னு உனக்குத் தெரியும்ல! போகிற முன்ன உன் கிட்ட ஒரு விஷயம் நேரா சொல்லிட்டுப் போகலாம்னுதான் வரச் சொன்னேன்” என்றவாறே இவனிடம் வந்தார் சுப்பு ரத்தினம்.

“சொல்லுங்க மாமா!”

“அதான்ப்பா நீ சஜஸ்ட் பண்ணிருந்தியே, நமக்குன்னு ஒரு ஐ.டி விங் வச்சிக்கலாம்னு!”

“ஆமாம் மாமா”

“நானும் யோசிச்சுப் பார்த்தேன்பா! முதல்ல எனக்குப் புடிக்கல! செய்யற வேலைக்கு எதுக்கு விளம்பரம்னு நெனைச்சேன்! பிறகு நீ சொன்ன பாய்ண்ட்டையும் அலசிப் பார்த்தேன்”

“விளம்பரம்னு ஏன் மாமா சொல்றீங்க! தெரியப்படுத்தல்னு எடுத்துக்கலாமே! இப்போ ஒரு ரைட்டரோ, இல்ல ஆர்ட்டிஸ்ட்டோ, யாரா இருந்தாலும், அவங்க இந்திந்த சாதனையைச் செஞ்சிருக்காங்கன்னு அவங்களே சொல்லிக்கறதுல தப்பென்ன மாமா? அவங்க சொல்லாம அது மத்தவங்கள எப்படிப் போய் சேரும்? இது என்னோட நூறாவது புத்தகம், இது கண்ணை மூடிட்டே நான் வரைஞ்ச ஓவியம்னு அவங்களே சொன்னால் ஒழிய மத்தவங்களுக்கு எப்படி அது தெரியும்? அதுக்குப் பேரு தற்பெருமையோ சுயதம்பட்டமோ இல்லை! பகிர்தல்! இப்ப இருக்கற காலக்கட்டத்துக்கு நீங்க இப்படி செஞ்சித்தான் ஆகனும்! இல்லைனா, நீ என்னடா செஞ்ச நாட்டுக்குன்னு நாக்கு மேல பல்லப் போட்டுப் பேசுவானுங்க! அதனாலத்தான் நீங்க செய்யற நல்ல காரியங்கள மீம், போட்டோஸ், செய்தின்னு பரப்பி விடுவோம்! பொய்யா எதையும் சொல்லலியே மாமா! உண்மையத்தானே வெளியிடப் போறோம்! ஓரோருத்தான் ஒன்னுமே செய்யாம வாயால வடைச் சுட்டு, ஊரையே ஏய்ச்சிக்கிட்டு இருக்கானுங்க!”

“சரிதான் மருமகனே! நீங்களே அதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க! உங்க கண்காணிப்புக்குக் கீழ இருக்கட்டும் அந்த ஐ.டி விங்”

“பண்ணிடலாம் மாமா” என்றவன்,

“மாமா! நீங்க பேசனத கேட்டேன்! உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா, சிவமஞ்சரிய நான் பிக்கப் பண்ணி ட்ராப் ஆஃப் பண்றேன்! என் மேல நம்பிக்கை இருந்தா அனுப்பி விடுங்க” என முடித்தான்.
 
அவனை சில விநாடிகள் ஆழ்ந்து பார்த்த சுப்பு ரத்தினம்,

“உன் மேல நம்பிக்கை இல்லாமலா வீடு வரைக்கும் வர விடறேன்! நம்ம பையன்னு செக்கியூரிட்டி செக்லாம் இல்லாம நடு வீட்டு வரைக்கும் வர உரிமைக் குடுத்திருக்கேனேப்பா! அதுல தெரியலையா என்னோட நம்பிக்கை!” என்றவர்,

“சரிப்பா! அவளோட ட்ரைவர் வர வரைக்கும் நீ ஹெல்ப் பண்ணு!” என்றார்.

உள்ளுக்குள் உற்சாகம் குமிழியிட, முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டான் சக்தி அமரன்.

“நீ போய் சாப்பிடுப்பா! போன தடவை வந்தப்ப கூட ஒன்னுமே சாப்பிடல! நான் இப்படியே கிளம்பறேன்” எனச் சொல்லியவர், மகளிடம் சக்தி அமரன் இனி அழைத்துப் போவான் எனச் சொல்லி விடை பெற்றார்.

ரங்க நாயகி அவரை வழி அனுப்பி வைக்கப் போக,

“சாப்பிட வாங்க” என இவனை டைனிங் ஹால் அழைத்துப் போனாள் மஞ்சரி.

மெல்லிய இடையாட நடந்தவளின் மேல் பார்வையைப் பதித்தபடியே பரவசமாக அவள் பின்னால் போனான் இவன்.

“உங்காருங்க சக்தி சார்!” என அவனை அமர்த்தித் தட்டு எடுத்து வைத்தவள், பூரி ஒன்றைப் பரிமாறினாள்.

“சாப்பிடுங்க! நான் உள்ள போய் சுடச் சுடக் காபி எடுத்துட்டு வரேன்” என்றவள் சமையல் கூடம் போய் விட்டாள்.

இவன் பூரியைப் பிய்த்து வாயில் வைக்கும் நேரம்,

“ஆவ்வ்வ்வ்” எனக் கொட்டாவி விட்டபடி அங்கு வந்து நின்றாள் சிவரஞ்சனி.

டீ ஷர்ட் ஒரு பக்கமாய் சரிந்து தோளைக் காட்ட, முடி கலைந்து அங்கிங்கு சிலிப்பிக் கொண்டிருக்க, கண்களில் தூக்கக் கலக்கம் மிச்சமிருக்க, முகம் ரத்தப்பசை இல்லாமல் ஆவிப் போல நின்றிருந்தாள் அவள். பார்த்ததுமே முகத்தைச் சுளித்தான் இவன்.

இவனைப் பார்த்தவள்,

“ஏய்! யார் மேன் நீ? என் வீட்டுல சாவகாசமா உக்காந்துட்டு என்னோட பூரியைச் சாப்பிட்டுட்டு இருக்க? கெட் அப் அண்ட் கெட் லாஸ்ட்” எனப் பொரிந்தாள்.

“அது சரி!! சரக்கப் போட்டாத்தான் சரசம் பண்ண வருமோ! மார்னிங் ஆகிட்டா மிஸ்டர் மேன்லிலாம் மறந்திடும் போல!” எனச் சத்தமாக முணுமுணுத்தான்.

“ஏய் யூ!! நீ மிஸ்டர் மேன்லியா? குட் ஜோக்! நான்லாம் சரசம் பண்ணனும்னா கூட அதுக்கு சில குவாலிட்டிஸ் இருக்கனும்!” என்றவள், ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் வலது கண் பக்கம் வைத்து படம் பிடிப்பது போல க்ளிக்கியவள்,

“தேஞ்சுப் போனத் தேகம், ஓஞ்சுப் போன முகம், காஞ்சுப் போன கேசம்! நாட் மை டேஸ்ட்!” என உடலைக் குலுக்கிக் கொண்டாள்.

பூரியைச் சுருட்டி ஒரே வாயில் உள்ளே தள்ளிய சக்தி அமரன், படக்கென எழுந்து கொண்டான்.

“தேஞ்சுப் போன தேகத்தப் பத்தி ஒரு தேவாங்கு பேசக் கூடாது! ஓஞ்சுப் போன முகத்தைப் பத்தி ஒரு ஓராங் ஊட்டான் பேசக் கூடாது! காஞ்சுப் போன கேசத்தைப் பத்தி ஒரு காண்டாமிருகம் பேசக் கூடாது! நீ என்ன என்னைப் பார்த்து நாட் மை டேஸ்ட்னு சொல்றது! நான் சொல்றேன் கேட்டுக்கோ, உன்னைப் பார்த்தாலே அடி வயித்துல இருந்து அப்படியே உவேக்னு வருது! சீச்சீ” எனச் சீறினான் சக்தி அமரன்.

“ஹவ் டேர் யூ!” எனக் கத்தியவள், மேசையில் இருந்த கிளாஸ் தண்ணீரை அவன் மீது விசிறியடித்தாள்.

சட்டென நடந்து விட்டத் தாக்குதலில் இவன் முகம் நனைந்து போனது.

“திமிராடி!” எனக் கத்தியவன், வேகமாய் அவள் அருகே வந்து ஜக்கில் இருந்த முழு நீரையும் அவள் தலையில் கவிழ்த்தான்.

ஆ, ஊவென சவுண்ட் விட்டுக் கொண்டிருந்த இருவரையும் சிவமஞ்சரித்தான் வந்து பிரித்து விட்டாள். அவள் கையில் இருந்த காபியைப் பிடுங்கி கடகடவெனக் குடித்த சிவரஞ்சனி,

“சொல்லி வை இவன்ட்ட நான் எப்படிப்பட்ட ஆள்னு! மர்கயா சாலா பண்ணிடுவேன்” எனக் கத்தி விட்டுப் போனாள்.

“சொல்லி வை அவட்ட, நான் எப்படிப்பட்ட ஆள்னு! மர்டர் சாலா பண்ணிடுவேன்” எனக் கத்திய இவனும் வேகமாய் தனது காருக்குப் போய் விட்டான்.

அவசரமாக சிவமஞ்சரி அவன் பின்னால் போய் காரில் ஏறிக் கொண்டாள். அன்றிலிருந்து அவனோடுதான் காலேஜ் போய் வருகிறாள் இவள்.

“போன தடவை அவ மர்கயான்னும் நீங்க மர்டர்னும் சண்டைப் போட்டப்பா நான் யார் பக்கமும் பேசலையே”

“அதுக்கும் முன்ன! மேனர்ஸ் இல்லையா! சென்ஸ் இல்லையான்னு திட்டனயே, அதை சொன்னேன்!”

“அக்கா கொஞ்சம் அப்படி இப்படித்தான்! அதுக்குன்னு ஹார்ஷா பிஹேவ் பண்ணலாமா! வாய் பேச்சோட உங்க சண்டையை வச்சிக்கோங்க சக்தி! மேன்ஹேண்டில் பண்ணாதீங்க! எனக்குப் பிடிக்கல”

“பாரு! பாரு! நீ அவளுக்குத்தான் சப்போர்ட் பண்ணற மஞ்சரி! டூ டெல் யூ தெ த்ரூத், ஐ அம் அட்ராக்டட் டூ யூ! உன் கிட்ட உள்ள எதுவோ என்னை ஈர்க்குது மஞ்சரி. இந்த அட்ராக்ஷன், நாள பின்ன லவ்வா கூட மாறலாம்! நான் லவ் பண்ற பொண்ணு எனக்குப் பக்கபலமா இருக்கனும்! நான் என்ன பண்ணாலும் எனக்கு சப்போர்ட்டிவ்வா இருக்கனும்! அம்மா, அப்பா, அக்கான்னு நிக்காம, என் பின்னாடி எனக்காக நிக்கனும்! இதெல்லாம் என்னோட எதிர்ப்பார்ப்பு! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா தெரியல! என் மேல அட்ராக்ட் ஆகிருக்கியான்னு தெரில! உனக்கு காலேஜ்ல பாய்ப்ரேண்ட் கூட இருக்கலாம்! எதுவும் எனக்குத் தெரியல! ஆனா இந்த ஃபீல உள்ள வச்சி மருக முடியல என்னால! சோ, சொல்லிட்டேன்! ஐ லைக் யூ மஞ்சு”

அதிர்ந்து போனாள் சிவமஞ்சரி.

“வீடு வந்திருச்சி! என்னைப் பிடிச்சிருக்கான்னு நல்லா யோசிச்சு சொல்லு மஞ்சு! பாய்!” என்றான் இவன்.

சாவி கொடுத்தப் பொம்மைப் போல இறங்கி உள்ளே போனாள் மஞ்சரி. இவனோ உல்லாசமாக சீழ்க்கையடித்துக் கொண்டே காரை ரிவர்ஸ் செய்தான்.

திடீரென படாரென ஒரு சத்தம்.

“வாட் தெ ஹெல்!!” எனக் கத்தியபடியே காரை விட்டு இறங்கினான் இவன்.

அங்கே அவன் காரை இன்னொரு கார் முட்டி நின்றது. அந்தக் காரில் இருந்து தள்ளாடியபடி இறங்கிய சிவரஞ்சனியின் கண்கள் இவனைப் பார்த்ததும் விளக்குப் போட்டதைப் போல ஒளிர்ந்தன.

“மிஸ்டர் மேன்லி!!!” என அவள் இளிக்க,

“இன்னிக்கு உன்னைக் கைமா பண்ணி காக்காய்க்கு போடல என் பேரு மிஸ்டர் மேன்லி இல்லைடி! ச்சைக்!!! சக்தி அமரன் இல்லடி” என்றபடி ஆக்ரோஷமாக அவளை நெருங்கினான் இவன்.

(உயிராவாயா???)
 
சக்திக்கு சட்டம் சரி இல்ல... இந்த சிவா இவன சீண்டி சிக்கெடுக்க போறா.. 🤣🤦😏
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 4)


அய்யய்யோ..! இவன் என்ன வந்த அன்னைக்கே அக்கா தங்கச்சின்னு ரெண்டு பேருக்கும் ரூட் விடறானோ...?
ஒருத்தி சரசத்துக்கி, இன்னொருத்தி சமரசத்துக்கா ?


தங்கச்சியை காதலிச்சு அக்கா கழுத்துல தாலி கட்டுவானா ?
இல்ல அக்காவை கடுப்பேத்த தங்கச்சி கழுத்துல தாலி கட்டுவானா தெரியலையே..?


ஆனா, இது எப்படியும் டூ.. டூட்டு, டூ..டூட்டு... வழியிலத் தான் போகப்போகுது போல..?


அது சரி, இந்த சக்தி ராமனா ?
கிருஷ்ணனா...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அருமையான பதிவு 😆 😆 😆 🤭 🤭 🤭 🤭 🤭 🤭
அச்சோ இவனைய நம்மாளு கயுவிகயுவி ஊத்தறாளே.
தூங்கி எந்திரிச்சு வந்து இவனையப் பாத்து நம்மாளு பாராட்டு மழையா பொழியறா
தேஞ்சு காஞ்சு ஓஞ்சு 🤣🤣🤣🤣🤣 ன்னு.
வேற ஆளா மாறுனதும் இந்த காஞ்சு தேஞ்சு மேன்லிமேன் ஆகிட்டானே🤭🤭🤭🤭😨😨😨😨😨
ஏன் இந்த டிபரன்ஸூ🙄🙄🙄🙄😂😂😂
 
நம்மாளுக்காக நாம ஒரு மாஸ்ஸான சாங்கை 👇 👇 போடலாம். போடலைன்னா ஆர்மீ குத்தமாகிப் போயிடும்.
இந்த சாங்கை என்றாளுக்காக பீமேல் வெர்ஷனில் இமேஜின் செய்து கொள்ளவும்.😎😎😎😎🤪🤪🤪🤪

 
அவ கிட்ட லவ்வை சொல்லிட்டு இவ கிட்ட எதுக்கு டா வம்பு சண்டைக்குப் போற
 
Adhu ena சரக்கு உள்ள போன மேன்லி... 🤷 மத்த நேரம் தேஞ்சு போன மூஞ்சு 🧐🧐 எனக்கு என்னமோ இந்த சரக்கு பார்டி தான் உன் காதல் பார்டி போலனு தோணுது சக்தி 🙄
 
Back
Top