VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

அத்தியாயம் 6
அந்தத் தனியார் மருத்துவமனையில் அமைக்கப் பட்டிருந்த வி.வி.ஐ.பி விங்கில் பலத்தப் பாதுக்காப்பு போடப்பட்டிருந்தது. சாதாரண உடையில், யாருக்கும் சந்தேகம் ஏற்படாத மாதிரி, பாதுகாவலர்கள் அந்த மருத்துவமனையில் அங்கிங்கு நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
மஞ்சரியின் தொலைப்பேசி அழைப்பை மீண்டும் அசைப் போட்டபடியே சுப்பு ரத்தினம் அனுமதிக்கப் பட்டிருந்த அறை நோக்கி நடந்தான் சக்தி அமரன். அவனோடு ஒரு பாதுகாவலரும் வந்தார்.
“என்னாச்சு மஞ்சு?”
“என்ன விஷயம்னே தெரியல சக்தி! அப்பா போன் பண்ணப்போ, ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்! இப்ப எதுவும் சொல்ல முடியாதுன்னு போன வச்சிட்டாரு! நாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்னா, வீட்டுல உள்ள சீஃப் செக்கியூரிட்டி எங்கேயும் இப்போதைக்கு வெளிய போகக் கூடாதுன்னு தடுத்துட்டாரு! என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னே தெரியல! அம்மா அழுதுட்டே இருக்காங்க!” எனப் பதட்டமானக் குரலில் சொன்னாள் மஞ்சரி.
“எந்த ஹாஸ்பிட்டல்னு தெரியுமா?” எனக் கேட்டான் இவன்.
அவள் மருத்துவமனைப் பெயரைச் சொன்னதும், விசாரித்து விட்டு வருவதாகக் சொல்லி அழைப்பை நிறுத்தினான்.
“என்னாச்சி மச்சி?”
“என் வருங்கால மாமனார் ஹாஸ்பிட்டல்ல இருக்காராம்டா! என்ன ஏதுன்னு தெரியல! நான் உடனே கிளம்பனும்! கார்ல மாற்றுடுப்பு வச்சிருப்பேன்! எடுத்துட்டு வந்திடுடா! நான் இங்க க்ளப்லயே ஷவர் பண்ணிடறேன்” என ஓடினான் சக்தி அமரன்.
காரை செலுத்தும் போதே சுப்பு ரத்தினத்தின் பி.ஏ இவனுக்கு அழைப்பெடுத்திருந்தார். மருத்துவமனைக்குச் சக்தியை வரச் சொன்னவர், வார்ட் நம்பர், தளம் எல்லாம் சொல்லி, கீழே பாதுகாவலர் ஒருவர் அவனுக்காகக் காத்திருப்பார் எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார்.
அறையை நெருங்கியதும்,
“நீங்க உள்ள போங்க சார்! வேற யாருக்கும், இன்க்ளூடெட் மீ, இங்க அனுமதி இல்ல” எனச் சொல்லிக் கீழே போய் விட்டார் அந்த செக்கியூரிட்டி.
சுப்பு ரத்தினத்துக்கு என்ன ஆனதோ, ஏதானதோ எனப் பதட்டமாக இருந்தது இவனுக்கு! கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவன், அதிர்ந்து போனான். அங்கே கட்டிலில் படுத்திருந்தது சுப்பு ரத்தினமல்ல! அவரது சீமந்தப் புத்திரன் திலகன். உடலில் ஓரிடம் விடாமல் கட்டுப் போடப் பட்டிருக்க, பிணம் போல் கிடந்தான் அவன். மானிட்டரில் ஓடிய கோடுகள் மட்டும் இல்லா விட்டால் உயிரற்ற உடல் என்றே சொல்லி விடலாம். அவன் அருகில் கண்கள் கலங்க, உடல் நடுங்க அமர்ந்திருந்தார் சுப்பு ரத்தினம்.
“மாமா” என மெல்ல அழைத்தான் இவன்.
“பாருங்க மாப்பிள்ளை என் மகன! உடையாத எலும்பில்லையாம் உடம்புல! சிதைச்சுப் போட்டிருக்கானுங்க! இருபதே வயசுத்தான்! என் ஆஸ்த்திக்குரிய ஆண் வாரிசு! யார் வம்புக்கும் போக மாட்டான்! அவன் உண்டு, அவன் படிப்பு உண்டுன்னு இருப்பான்! இவனுக்குப் போய் கொலைக் காட்டுக் காட்டிருக்கானுங்களே! தாங்கவே முடியலப்பா” என்றவருக்குக் கண்களில் கண்ணீர் விடாமல் வழிந்தது.
வேகமாய் அவரை நெருங்கிய சக்தி, ஆதரவாய் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான். கம்பீரமாகப் பார்த்த ஒரு மனிதரை அப்பொழுதுதான் கலங்கியத் தோற்றத்தில் பார்க்கிறான் சக்தி.
“மாமா! கண்ட்ரோல் பண்ணிக்கோங்க! என்னாச்சு? எப்படியாச்சு?” எனப் பதட்டமாகக் கேட்டான் சக்தி.
இவனால் கண் கொண்டு திலகனைப் பார்க்க முடியவில்லை. அவனிடம் அவ்வளவாகப் பேசியதில்லை சக்தி. கண்ணில் படும் போது அளவான சிரிப்பைக் கொடுத்து விட்டுக் கடந்து போய் விடுவான் அவன். அமைதியானச் சுபாவம்.
சுப்பு ரத்தினம் மகன் முகத்தை வெறித்தபடி இறுகிப் போய் அமர்ந்திருக்க, பி.ஏதான் நடந்ததைச் சொன்னார்.
“திலகன் தம்பி காலேஜ் மேட்ஸ் கூட பாண்டிச்சேரிக்கு ட்ரீப் போறதா சொல்லிட்டுப் போனாரு சக்தி! ரெண்டு நாள் நல்லா சுத்திருக்காங்க! நிறைய போட்டோஸ்லாம் எடுத்திருக்காங்க! நேத்து நைட், தம்பியோட போன்ல இருந்து சாருக்கு மேசேஜ் வந்திருக்கு! இவர் எடுத்துப் பார்த்தா, எங்கயோ ஒரு பாழடைஞ்ச பங்களால தம்பியைத் தலைக் கீழாத் தொங்க விட்டிருக்கற போட்டோ வந்திருக்கு! உடம்புல ஒட்டுத் துணி இல்ல! படத்துக்குக் கீழ அட்ரஸ் அனுப்பி, ‘வந்து அள்ளிட்டுப் போ’ன்னு மேசேஜ்! வெளிய விஷயம் கசியாம ஐயா சில நம்பிக்கையான ஆட்கள வச்சி இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டாரு! அந்த இடத்துல தம்பியோட போனோ, போட்டிருந்த சட்டையோ எதுவுமே இல்ல! அங்க வச்சி அடிச்சதுக்கான எந்தத் தடயமும் கூட இல்ல!”
“போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணீங்களா அங்கிள்?”
“ஐயா வேணான்னுட்டாரு!”
“ஏன் மாமா?” எனக் கோபமாகக் கேட்டான் சக்தி.
அவனை நிமிர்ந்து பார்த்தவர்,
“இந்த மாதிரி விஷயம்னு வெளிய கசிஞ்சா, என்னென்னவோ ஸ்பெகுலேட் பண்ணி வைரல் ஆக்கிடுவாங்க சக்தி! இத்தனை நாள் நான் கட்டிக் காப்பாத்திட்டு வந்த என்னோட அரசியல் இமேஜ் டெமேஜாகும்! அடுத்த வருஷம் தேர்தல் வேற வருது!” என்றார்.
“புள்ளைய விட, அரசியல் இமேஜ் முக்கியமாகிடுச்சா மாமா?” எனக் கொதித்தான் இவன்.
“இள ரத்தம், அதான் கொதிக்கற! பெத்தவன் எனக்குக் கோபம் இல்லையா சக்தி! செஞ்சவன வெட்டிப் பொலி போடனும்ங்கற அளவுக்குக் கொதிக்குது! ஆனா இது கோபத்தக் காட்டற நேரமில்ல! விவேகத்தக் காட்டற நேரம். ட்ரீப்புக்குப் போனவன், இன்னும் ட்ரீப்ல இருக்கறதாவே இருக்கட்டும்! வீட்டுல உள்ளவங்களுக்குக் கூட இப்போதைக்கு எதுவும் தெரிய வேணாம்! நானே வீட்டுக்குப் போனதும் சொல்லிக்கறேன்! உன்னை ஏன் அழைச்சிருக்கேன்னா, எனக்கு உன்னோட ஹெல்ப் தேவைப்படுது சக்தி”
“சொல்லுங்க மாமா! நான் என்ன செய்யனும்?”
“நம்ம ஐ.டி விங்ல வேலைப் பார்க்கறவங்க பெரிய கில்லிங்கன்னு சொன்னல்ல, அவனுங்கள வச்சி எதாச்சும் கண்டுப் புடிக்க முடியுதான்னு பாரு! தம்பி போனு சிக்னல் கடைசியா எங்கிருந்தது, இப்ப எங்கிருக்கு இப்படிலாம் எதாவது ட்ரேஸ் பண்ண முடியுதான்னு பாரு! அவன் கூட ட்ரிப்புக்கு போன ரெண்டு பயலுங்கள பிடிச்சு கொடாவுன்ல அடைக்கச் சொல்லிருக்கேன்! பிரிச்சு மேஞ்சும் கூட அவனுங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சாதிக்கறானுங்க!”
“அதெப்படி மாமா தெரியாம போகும்? விசாரிக்கற விதத்துல விசாரிச்சா, விஷயம் தானா வெளிய வரும்! நான் போய் அவனுங்கள பார்க்கறேன்!”
“சரிப்பா! நம்மால எதுவும் முடியலைனா, பிறகு ரகசியமா போலிஸ நாடலாம்! இவன காதும் காதும் வச்ச மாதிரி சிங்கப்பூருக்கு ட்ரீட்மெண்டுக்குக் கொண்டு போறதுக்கு ஏற்பாடு செய்ய சொல்லிருக்கேன்! பி.ஏ அதைப் பார்த்துப்பாரு! நீ கட்சி ஆபிச கொஞ்சம் கவனிச்சுக்கோ! கார்மேகம் லீவ்ல போய்ருக்கறதுதான் உனக்குத் தெரியுமே!”
“நான் பார்த்துக்கறேன் மாமா! நீங்க அமைச்சரா இல்லாம, சில நாளுக்காச்சும் இவனுக்கு அப்பாவா இங்கயே இருங்க!” என்றவன், திலகனை வருத்தத்துடன் பார்த்து விட்டுக் கட்சி ஆபிசுக்குக் கிளம்பினான்.
கட்சி கட்டிடத்தில் ஐ.டி விங்குக்காக ஓர் அறையை ஒதுக்கித் தந்திருந்தார் கார்மேகம். அதனுள்ளே சக்தி நுழைய,
“வாங்க பாஸ்!” என வரவேற்றனர் இவன் வேலைக்குச் சேர்த்திருந்த ஹேரி, சாம் எனும் இளைஞர்கள் இருவரும்.
அவர்களிடம் விஷயம் இதுவெனச் சொல்லாமல், போன் சிக்னல் மேட்டரை மட்டும் சொன்னான் சக்தி. அதோடு திலகனின் சோசியல் மீடியா அக்கவுண்ட்களை கொஞ்சம் நோண்டிப் பார்க்கச் சொன்னான். அவர்கள் இருவரும் வேலையில் இறங்க, மஞ்சரிக்கு மேசேஜ் ஒன்றைத் தட்டி விட்டான் இவன்.
“ஆல் ஓகே பேபி! அப்பா இஸ் ஃபைன்! அப்புறம் வீட்டுக்கு வந்திடுவாரு”
இவனது மேசேஜைப் பார்த்ததும் உடனே அழைத்து விட்டாள் மஞ்சரி.

அத்தியாயம் 6
அந்தத் தனியார் மருத்துவமனையில் அமைக்கப் பட்டிருந்த வி.வி.ஐ.பி விங்கில் பலத்தப் பாதுக்காப்பு போடப்பட்டிருந்தது. சாதாரண உடையில், யாருக்கும் சந்தேகம் ஏற்படாத மாதிரி, பாதுகாவலர்கள் அந்த மருத்துவமனையில் அங்கிங்கு நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
மஞ்சரியின் தொலைப்பேசி அழைப்பை மீண்டும் அசைப் போட்டபடியே சுப்பு ரத்தினம் அனுமதிக்கப் பட்டிருந்த அறை நோக்கி நடந்தான் சக்தி அமரன். அவனோடு ஒரு பாதுகாவலரும் வந்தார்.
“என்னாச்சு மஞ்சு?”
“என்ன விஷயம்னே தெரியல சக்தி! அப்பா போன் பண்ணப்போ, ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்! இப்ப எதுவும் சொல்ல முடியாதுன்னு போன வச்சிட்டாரு! நாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்னா, வீட்டுல உள்ள சீஃப் செக்கியூரிட்டி எங்கேயும் இப்போதைக்கு வெளிய போகக் கூடாதுன்னு தடுத்துட்டாரு! என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னே தெரியல! அம்மா அழுதுட்டே இருக்காங்க!” எனப் பதட்டமானக் குரலில் சொன்னாள் மஞ்சரி.
“எந்த ஹாஸ்பிட்டல்னு தெரியுமா?” எனக் கேட்டான் இவன்.
அவள் மருத்துவமனைப் பெயரைச் சொன்னதும், விசாரித்து விட்டு வருவதாகக் சொல்லி அழைப்பை நிறுத்தினான்.
“என்னாச்சி மச்சி?”
“என் வருங்கால மாமனார் ஹாஸ்பிட்டல்ல இருக்காராம்டா! என்ன ஏதுன்னு தெரியல! நான் உடனே கிளம்பனும்! கார்ல மாற்றுடுப்பு வச்சிருப்பேன்! எடுத்துட்டு வந்திடுடா! நான் இங்க க்ளப்லயே ஷவர் பண்ணிடறேன்” என ஓடினான் சக்தி அமரன்.
காரை செலுத்தும் போதே சுப்பு ரத்தினத்தின் பி.ஏ இவனுக்கு அழைப்பெடுத்திருந்தார். மருத்துவமனைக்குச் சக்தியை வரச் சொன்னவர், வார்ட் நம்பர், தளம் எல்லாம் சொல்லி, கீழே பாதுகாவலர் ஒருவர் அவனுக்காகக் காத்திருப்பார் எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார்.
அறையை நெருங்கியதும்,
“நீங்க உள்ள போங்க சார்! வேற யாருக்கும், இன்க்ளூடெட் மீ, இங்க அனுமதி இல்ல” எனச் சொல்லிக் கீழே போய் விட்டார் அந்த செக்கியூரிட்டி.
சுப்பு ரத்தினத்துக்கு என்ன ஆனதோ, ஏதானதோ எனப் பதட்டமாக இருந்தது இவனுக்கு! கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவன், அதிர்ந்து போனான். அங்கே கட்டிலில் படுத்திருந்தது சுப்பு ரத்தினமல்ல! அவரது சீமந்தப் புத்திரன் திலகன். உடலில் ஓரிடம் விடாமல் கட்டுப் போடப் பட்டிருக்க, பிணம் போல் கிடந்தான் அவன். மானிட்டரில் ஓடிய கோடுகள் மட்டும் இல்லா விட்டால் உயிரற்ற உடல் என்றே சொல்லி விடலாம். அவன் அருகில் கண்கள் கலங்க, உடல் நடுங்க அமர்ந்திருந்தார் சுப்பு ரத்தினம்.
“மாமா” என மெல்ல அழைத்தான் இவன்.
“பாருங்க மாப்பிள்ளை என் மகன! உடையாத எலும்பில்லையாம் உடம்புல! சிதைச்சுப் போட்டிருக்கானுங்க! இருபதே வயசுத்தான்! என் ஆஸ்த்திக்குரிய ஆண் வாரிசு! யார் வம்புக்கும் போக மாட்டான்! அவன் உண்டு, அவன் படிப்பு உண்டுன்னு இருப்பான்! இவனுக்குப் போய் கொலைக் காட்டுக் காட்டிருக்கானுங்களே! தாங்கவே முடியலப்பா” என்றவருக்குக் கண்களில் கண்ணீர் விடாமல் வழிந்தது.
வேகமாய் அவரை நெருங்கிய சக்தி, ஆதரவாய் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான். கம்பீரமாகப் பார்த்த ஒரு மனிதரை அப்பொழுதுதான் கலங்கியத் தோற்றத்தில் பார்க்கிறான் சக்தி.
“மாமா! கண்ட்ரோல் பண்ணிக்கோங்க! என்னாச்சு? எப்படியாச்சு?” எனப் பதட்டமாகக் கேட்டான் சக்தி.
இவனால் கண் கொண்டு திலகனைப் பார்க்க முடியவில்லை. அவனிடம் அவ்வளவாகப் பேசியதில்லை சக்தி. கண்ணில் படும் போது அளவான சிரிப்பைக் கொடுத்து விட்டுக் கடந்து போய் விடுவான் அவன். அமைதியானச் சுபாவம்.
சுப்பு ரத்தினம் மகன் முகத்தை வெறித்தபடி இறுகிப் போய் அமர்ந்திருக்க, பி.ஏதான் நடந்ததைச் சொன்னார்.
“திலகன் தம்பி காலேஜ் மேட்ஸ் கூட பாண்டிச்சேரிக்கு ட்ரீப் போறதா சொல்லிட்டுப் போனாரு சக்தி! ரெண்டு நாள் நல்லா சுத்திருக்காங்க! நிறைய போட்டோஸ்லாம் எடுத்திருக்காங்க! நேத்து நைட், தம்பியோட போன்ல இருந்து சாருக்கு மேசேஜ் வந்திருக்கு! இவர் எடுத்துப் பார்த்தா, எங்கயோ ஒரு பாழடைஞ்ச பங்களால தம்பியைத் தலைக் கீழாத் தொங்க விட்டிருக்கற போட்டோ வந்திருக்கு! உடம்புல ஒட்டுத் துணி இல்ல! படத்துக்குக் கீழ அட்ரஸ் அனுப்பி, ‘வந்து அள்ளிட்டுப் போ’ன்னு மேசேஜ்! வெளிய விஷயம் கசியாம ஐயா சில நம்பிக்கையான ஆட்கள வச்சி இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டாரு! அந்த இடத்துல தம்பியோட போனோ, போட்டிருந்த சட்டையோ எதுவுமே இல்ல! அங்க வச்சி அடிச்சதுக்கான எந்தத் தடயமும் கூட இல்ல!”
“போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணீங்களா அங்கிள்?”
“ஐயா வேணான்னுட்டாரு!”
“ஏன் மாமா?” எனக் கோபமாகக் கேட்டான் சக்தி.
அவனை நிமிர்ந்து பார்த்தவர்,
“இந்த மாதிரி விஷயம்னு வெளிய கசிஞ்சா, என்னென்னவோ ஸ்பெகுலேட் பண்ணி வைரல் ஆக்கிடுவாங்க சக்தி! இத்தனை நாள் நான் கட்டிக் காப்பாத்திட்டு வந்த என்னோட அரசியல் இமேஜ் டெமேஜாகும்! அடுத்த வருஷம் தேர்தல் வேற வருது!” என்றார்.
“புள்ளைய விட, அரசியல் இமேஜ் முக்கியமாகிடுச்சா மாமா?” எனக் கொதித்தான் இவன்.
“இள ரத்தம், அதான் கொதிக்கற! பெத்தவன் எனக்குக் கோபம் இல்லையா சக்தி! செஞ்சவன வெட்டிப் பொலி போடனும்ங்கற அளவுக்குக் கொதிக்குது! ஆனா இது கோபத்தக் காட்டற நேரமில்ல! விவேகத்தக் காட்டற நேரம். ட்ரீப்புக்குப் போனவன், இன்னும் ட்ரீப்ல இருக்கறதாவே இருக்கட்டும்! வீட்டுல உள்ளவங்களுக்குக் கூட இப்போதைக்கு எதுவும் தெரிய வேணாம்! நானே வீட்டுக்குப் போனதும் சொல்லிக்கறேன்! உன்னை ஏன் அழைச்சிருக்கேன்னா, எனக்கு உன்னோட ஹெல்ப் தேவைப்படுது சக்தி”
“சொல்லுங்க மாமா! நான் என்ன செய்யனும்?”
“நம்ம ஐ.டி விங்ல வேலைப் பார்க்கறவங்க பெரிய கில்லிங்கன்னு சொன்னல்ல, அவனுங்கள வச்சி எதாச்சும் கண்டுப் புடிக்க முடியுதான்னு பாரு! தம்பி போனு சிக்னல் கடைசியா எங்கிருந்தது, இப்ப எங்கிருக்கு இப்படிலாம் எதாவது ட்ரேஸ் பண்ண முடியுதான்னு பாரு! அவன் கூட ட்ரிப்புக்கு போன ரெண்டு பயலுங்கள பிடிச்சு கொடாவுன்ல அடைக்கச் சொல்லிருக்கேன்! பிரிச்சு மேஞ்சும் கூட அவனுங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சாதிக்கறானுங்க!”
“அதெப்படி மாமா தெரியாம போகும்? விசாரிக்கற விதத்துல விசாரிச்சா, விஷயம் தானா வெளிய வரும்! நான் போய் அவனுங்கள பார்க்கறேன்!”
“சரிப்பா! நம்மால எதுவும் முடியலைனா, பிறகு ரகசியமா போலிஸ நாடலாம்! இவன காதும் காதும் வச்ச மாதிரி சிங்கப்பூருக்கு ட்ரீட்மெண்டுக்குக் கொண்டு போறதுக்கு ஏற்பாடு செய்ய சொல்லிருக்கேன்! பி.ஏ அதைப் பார்த்துப்பாரு! நீ கட்சி ஆபிச கொஞ்சம் கவனிச்சுக்கோ! கார்மேகம் லீவ்ல போய்ருக்கறதுதான் உனக்குத் தெரியுமே!”
“நான் பார்த்துக்கறேன் மாமா! நீங்க அமைச்சரா இல்லாம, சில நாளுக்காச்சும் இவனுக்கு அப்பாவா இங்கயே இருங்க!” என்றவன், திலகனை வருத்தத்துடன் பார்த்து விட்டுக் கட்சி ஆபிசுக்குக் கிளம்பினான்.
கட்சி கட்டிடத்தில் ஐ.டி விங்குக்காக ஓர் அறையை ஒதுக்கித் தந்திருந்தார் கார்மேகம். அதனுள்ளே சக்தி நுழைய,
“வாங்க பாஸ்!” என வரவேற்றனர் இவன் வேலைக்குச் சேர்த்திருந்த ஹேரி, சாம் எனும் இளைஞர்கள் இருவரும்.
அவர்களிடம் விஷயம் இதுவெனச் சொல்லாமல், போன் சிக்னல் மேட்டரை மட்டும் சொன்னான் சக்தி. அதோடு திலகனின் சோசியல் மீடியா அக்கவுண்ட்களை கொஞ்சம் நோண்டிப் பார்க்கச் சொன்னான். அவர்கள் இருவரும் வேலையில் இறங்க, மஞ்சரிக்கு மேசேஜ் ஒன்றைத் தட்டி விட்டான் இவன்.
“ஆல் ஓகே பேபி! அப்பா இஸ் ஃபைன்! அப்புறம் வீட்டுக்கு வந்திடுவாரு”
இவனது மேசேஜைப் பார்த்ததும் உடனே அழைத்து விட்டாள் மஞ்சரி.
Last edited: