எபி 7

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

surface-web-vs-deep-web-vs-dark-web.png

அத்தியாயம் 7

“தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை

மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் என்னும் தேன்”

சிவபுராணம் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருக்க, ஒப்பாரி சத்தம் அந்த வீட்டை நிறைத்து நின்றது. வெளியே கட்சிக்காரர்கள் அழுதபடி நின்றிருக்க, வீட்டின் முன் பக்க வரவேற்பறையில் இறுகிப் போய் அமர்ந்திருந்தார் சுப்பு ரத்தினம். அவரைச் சுற்றி மற்ற துறை அமைச்சர்கள் சிலரும் இருந்தார்கள்.

சக்தி அமரனும், சுப்பு ரத்தினத்துக்கு மிக நம்பிக்கையானச் சிலரும் அங்கிங்கு ஓடி நடக்க வேண்டியக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வீட்டின் உள் வரவேற்பறையில் திலகனின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே அமர்ந்து கதறி அழுதுக் கொண்டிருந்தார் ரங்க நாயகி. அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த மஞ்சரிக்கு அழுதழுது முகமெல்லாம் வீங்கிக் கிடந்தது.

பார்வை எங்கோ வெறித்தபடி இருக்க, கால் இரண்டையும் நெஞ்சருகே அணைத்துப் பிடித்தபடி முட்டியில் தலை வைத்து அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி. அவளுக்கும் கண்கள் கலங்கித்தான் இருந்தன.

ட்வீட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா, செய்தி சானல்கள், பத்திரிக்கை என எல்லா இடங்களிலும் திலகனின் இறப்புச் செய்தி வெளி வந்திருந்தது. நியூஸ் சானல்களில் ஃப்ளாஷ் நியூசாக அமைச்சர் சுப்பு ரத்தினத்தின் மகன் சாலை விபத்தில் மரணம் எனச் செய்தி போட்டு சுப்பு ரத்தினத்தின் அரசியல் வாழ்க்கையும் அலசினார்கள். தொண்டர்களோ ஊரெங்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் அடித்து ஒட்டித் தங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். சற்று முன்புதான் முதலமைச்சர் போன் செய்து சுப்பு ரத்தினத்திடம் தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.

மர்ம நபரோ/ நபர்களோ அடித்த அடியில் வெளிக் காயங்கள் மட்டுமல்லாது, உள் உறுப்புகளும் பலத்த சேதமடைத்திருந்தன திலகனுக்கு. சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு அவன் உடம்பில் வலு இல்லை என டாக்டர்கள் சொல்லி இருக்க, சுப்பு ரத்தினம் பிடிவாதமாக இருந்தார்.

“மாமா! இண்டெர்னல் ப்ளீடிங் வேற இருக்குன்னு டாக்டர் சொல்றாரு! இப்போ கட்டில விட்டு, லேசா நகர்த்தறதே தப்பா போயிடலாம்! இங்க இல்லாத ஃபெசிலிட்டியா? நாமத்தான் சிங்கப்பூர் போகனும்னு இல்ல! அங்க இருந்து ஸ்பெஷலிஸ்ட் டாக்டர வர வைக்க ஏற்பாடு பண்ணிட்டேன்! இன்னைக்கு நைட்குள்ள வந்திடுவாரு!” எனச் சுப்பு ரத்தினத்தைச் சமாதானப் படுத்துவதற்குள் படாதபாடு பட்டு விட்டான் சக்தி.

அன்றைய இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த சைனிஸ் டாக்டருமே, இனி நம் கையில் ஏதும் இல்லையெனக் கூறி விட்டார். விடிகாலையில், திலகனிடம் லேசாய் அசைவிருந்தது. அந்த நேரம் சுப்பு ரத்தினத்தோடு அங்குத்தான் இருந்தான் சக்தி. திலகன் லேசாய் கண் திறந்து பார்க்க,

“மாமா! திலகன் கண்ணைத் திறந்துட்டான்” என நாற்காலியில் சாய்ந்து கண் மூடி இருந்தவரை எழுப்பினான் சக்தி.

மகன் அருகே வேகமாய் ஓடினார் சுப்பு ரத்தினம்.

“அப்பா!” என லேசாய் உதடு அசைந்தது.

“என் ராசா! உனக்கு ஒன்னுமில்லைய்யா! பொழச்சுக்குவ! அப்பா எப்படியாவது உன்னைக் காப்பாத்திடுவேன்” எனக் கண்ணீருடன் அவன் முகம் வருடினார் இவர்.

அவன் பார்வை சுப்பு ரத்தினத்தையும், அவர் அருகில் நின்ற சக்தியையும் ஒரு முறை வலம் வந்தது. பின் மெல்ல கண்கள் மேலே சொருக ஆரம்பிக்க, அவசர அழைப்பு பட்டனைத் தட்டிய சக்தி,

“திலகன்! திலகன்! ஸ்டே வித் அஸ்” எனக் கத்தினான்.

“தம்பி! ராஜா! ஐய்யா!” எனக் கதறினார் சுப்பு ரத்தினம்.

இதயத் துடிப்பைக் காட்டும் மானிட்டர், பீம்,பீம் எனச் சத்தமிட்டது. மேலேயும் கீழேயும் ஏறி இறங்கிக் கொண்டிருந்த கோடு நேர்க்கோடாய் பயணம் செய்ய ஆரம்பித்தது. அந்த நேரம் சிங்கப்பூர் டாக்டர், உள்ளூர் டாக்டர் எல்லோரும் ஓடி வந்தார்கள். அவர்கள் ஏதேதோ முயற்சி செய்தும் திலகனின் உயிர் அவனது தந்தையின் கண் முன்னே உடலை விட்டுப் பிரிந்து போனது!

“திலகா” எனக் கத்திக் கதறினார் சுப்பு ரத்தினம்.

சக்திதான் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். அவன் கண்களிலும் கண்ணீர்!

அதன் பிறகு உடலை வீட்டுக்குக் கொண்டு வருவதில் இருந்து, மற்ற சாங்கியங்கள், சடங்குகள் என எல்லாவற்றுக்கும் பி.ஏவுடன் சேர்ந்து இவன்தான் ஏற்பாடு செய்தான்.

இறுதி காரியங்கள் செய்வதற்கான நேரமாக, சக்தி இவனது தகப்பனுக்கு சிக்னல் காட்டினான். அருள்மணி சுப்புவின் சில சொந்தங்களுடன் போய் அவரை அழைத்து வந்தார். ஐயர் சொல்லித் தந்ததை பொம்மை போல் அப்படியே திரும்பச் செய்தார் சுப்பு ரத்தினம்.

“கடைசிக் கடைசியா என் மகன பார்க்கக் கூட விடலையே நீங்க!” எனக் கணவரைப் பார்த்துக் கதறினார் ரங்க நாயகி.

அம்மாவை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் சிவமஞ்சரி. சாங்கியங்கள் எல்லாம் முடித்து, உடலைத் தூக்கினார்கள். ரங்க நாயகியும், மஞ்சரியும் கதறி அழுத அழுகை வந்திருந்தவர்களையும் அழ வைத்தது. ரஞ்சனி உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அவளால் அசையவும் முடியவில்லை. ஒரு மாதிரியான மயக்க நிலையில் இருந்தாள். எல்லோரும் திமுதிமுவென இவளை இடித்துக் கொண்டு வெளியே போக, உட்கார்ந்தவாக்கில் கீழே சரிந்திருந்தாள் ரஞ்சனி. சிலர் இவள் கையையும், காலையும் மிதித்தபடி போக, அந்தச் சுரணைக் கூட இல்லாமல் கருவறைக் குழந்தை போல சுருண்டுக் கிடந்தாள்.

எங்கிருந்தோ வந்த இரு கரங்கள் அவளை வாரி அள்ளிக் கொண்டன.

“தம்பி செத்தன்னைக்குக் கூட போதையாடி?” எனக் கடிந்து கொண்டவனின் கையில் அவளது கண்ணீர் துளிகள் தெறித்து விழுந்தன.

கீழே இருந்த கெஸ்ட் ரூமில் அவளைப் படுக்க வைத்த சக்தி அமரன், கூடவே வந்த வேலைக்காரியிடம்,

“உள்ளயே இருக்கட்டும்! வெளிய வராம பார்த்துக்கோங்க! வாசல்ல பத்திரிக்கைக்காரங்க, மீடியா எல்லாம் நிக்கறாங்க! அங்க வந்து நின்னு அமைச்சரோட மானத்த வாங்கிடப் போறா” எனச் சொல்லி விட்டுச் சென்றான்.

நாட்கள் விரைந்து ஓடி இருந்தன. திலகனுக்குக் கருமக்கிரியையும் செய்து முடித்திருந்தனர். காரியம் செய்த தினத்தன்று காலேஜ் போகும் ஏழை மாணவர்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள் கொடுக்க ட்ரஸ்ட் ஒன்று மகனின் பெயரில் ஆரம்பித்தார் சுப்பு ரத்தினம். அதை அமைச்சருக்கே சொல்லாமல், சோசியல் மீடியாவில் போட்டு அவருக்கு நல்ல பெயர் வரும்படி செய்திருந்தான் சக்தி அமரன்.

அவனைப் பார்க்க வேண்டுமெனச் சுப்பு ரத்தினம் வீட்டுக்கு அழைத்திருக்க, கட்சி ஆபிசில் இருந்து புறப்பட்டான் சக்தி அமரன். காரில் ஏறி அமர்ந்தவனுக்குத் திலகனின் விஷயத்தை அவரிடம் எப்படிச் சொல்வது என ஒரே சஞ்சலம். இத்தனை நாட்கள் துக்கத்தில் உழன்றுக் கொண்டிருந்தவர், ஓரளவு தேறி விட்டார் என்பதற்கு இந்த அழைப்பே சாட்சி எனப் புரிந்தது இவனுக்கு. அவனது இரு நண்பர்களையும் அடித்துப் பிழிந்து எடுத்தும் கூட ஒரு விஷயமும் வெளியாகி இருக்கவில்லை. ட்ரீப் முடிந்து அவர்களைப் பாண்டிச்சேரியிலே விட்டு விட்டு இவன் மட்டும் கிளம்பிப் போய் விட்டான் எனத்தான் சொன்னார்கள். அவர்கள் சொன்னதை இவனும் செக் செய்து பார்த்து விட்டான். பாண்டியில் அவர்கள் குடித்து விட்டுக் கவிழ்ந்து கிடந்த அறையில் இருந்துதான் சுப்பு ரத்தினத்தின் ஆட்கள் அவர்களைத் தூக்கி வந்திருந்தார்கள்.

‘திலகன் பண்ணிருக்கற காரியத்துக்கு, யாரன்னு சந்தேகப்பட!’ என எண்ணியவனுக்கு அன்று மானிட்டரில் பார்த்தக் காட்சிகள் மீண்டும் கண் முன்னே வந்து நின்றன.

“ங்கொக்கமக்கா! என்ன எழவுடா இது?”

“பாஸ்! உங்களுக்கு டார்க் வெப்னு(dark web) ஒன்னு இருக்கறது தெரியுமா?” எனக் கேட்டான் சாம்.

“கேள்விப்பட்டுருக்கேன்! அவ்ளவவா இண்ட்ரேஸ்ட் எடுத்துக்கல தெரிஞ்சுக்க”
 
“நாம நார்மலா யூஸ் பண்ணற வெப்சைட்ஸ், ஃபேஸ்புக், கூகுள், யூடியூப் எல்லாம் சர்ஃபேஸ் வெப்னு(surface web) சொல்வாங்க. அதே கொஞ்சம் கான்பிடென்ஷியலானா சைட்ஸ்லாம், அதாவது மெடிக்கல் ரெக்கார்ட், நெட்பேங்கிங், ரீசர்ச் பேப்பர்லாம் இருக்கறத டீப் வெப்னு(deep web) சொல்வாங்க. டார்க் வெப்ல, நீங்க யார்னே வெளி உலகத்துக்குக் காட்டிக்காம எல்லாமே செய்யலாம்! ஐ மீன் இல்லீகல் ஆக்டிவிட்டிஸ்! இந்த டார்க் வெப் அக்சஸ் பண்ணனும்னா எல்லாராலயும் முடியாது! அதுக்கான சில சாப்ஃட்வேர் இருக்கு! டார்க் வெப்லதான் ட்ரக் டீலிங், ஆயுதக் கடத்தல், தீவிரவாதத்துக்கு ஆள் தேடி கனெக்ட்ல இருக்கறது எல்லாம் நடக்கும். இதுலாம் எந்த நாட்டுல இருந்து நடக்குது, யார் செய்யறா எதுவும் கண்டுப்புடிக்கறது கஷ்டம்! சி.பி.ஐ போல க்ரைம் டிபார்ட்மெண்ட்ல உள்ளவங்களால கண்டுப்புடிக்க முடியும்! ஆனாலும் அவங்க போறதுக்குள்ள இவங்க வேற இடம் மாத்தி, வேற சைட்டும் மாத்திடுவாங்க!” என்றான் ஹாரி.

“அதெல்லாம் விடு! இதென்ன கன்றாவி?” என மானிட்டரைப் பார்த்துக் கேட்டான் சக்தி.

“இதுவா பாஸ்!! டார்க் வெப்ல இருக்கற போர்ன் சைட்! நீங்க நார்மலா பார்க்கிற பலானப் படம் இல்ல இது! அதுலலாம் வீடியோவ எடுத்து முடிச்சுப் போடுவானுங்க! இதுல எடுத்துட்டு இருக்கறப்பவே பார்க்கலாம்!”

“இதை ஏன்டா திறந்து காட்டற?” எனக் கேட்டான் சக்தி.

“அதுல இருக்கற ஆள பாருங்க பாஸ்” எனக் காட்டினான் சாம்.

“அடப்பாவி!!” என மிரண்டான் சக்தி அமரன்.

“நீங்க சோசியல் மீடியாவ நோண்டிப் பார்க்கச் சொன்னீங்க! அதுல அப்பழுக்கில்லாத ரொம்ப நல்லப் பையனாட்டாம் இருக்கு அவனோட ஆக்டிவிட்டிஸ் எல்லாமே! அதான் டார்க் வெப்ல சும்மா அவன் இமேஜ வச்சி சர்ச் குடுத்தேன்! இது வந்து நிக்கிது”

மூன்று பேருமே அந்த மானிட்டரை ஆராய்ச்சியாய் பார்த்தார்கள்.

ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த லைவ் வீடியோ அது. லைவ் நேரம் முடிந்திருக்க, நார்மல் வீடியோவாக ப்ளேயானது. அதில் பெண்ணொருத்தி போதை நிலையில் இருந்தாள். வயது பதினைந்தில் இருந்து பதினேழுக்குள்தான் இருக்கும். அவளோடு திலகனும் இருந்தான்.

“காய்ஸ்! இவ புத்தும் புது கைப்படாத ரோஜா! இன்னிக்கு இவளோட பாப் தி ச்சேரி(pop the cherry! கன்னிக் கழிப்பது) செரமனிய லைவ்வா பார்க்க போறீங்க! நான் இவள என்னெல்லாம் செய்யனும்னு நினைக்கறீங்களோ, அதெல்லாம் சொல்லுங்க! செஞ்சிடலாம்! அப்படி செய்யனும்னா, இந்த அக்கவுண்டுக்கு பிட்காய்ன் (ஒரு வகை கரண்சி) போட்டுட்டு உங்க விருப்பத்தக் கேளுங்க! உங்களோட ஆழ் மனசுல புதைஞ்சிருக்கற ஆசையெல்லாம் நான் நிறைவேத்தி வைக்கறேன்! இப்போ அவளோட மேலாடைய அவுக்கப் போறேன்! அதுக்கு என்ன விலைன்னு கீழ ஸ்க்ரீன்ல தெரியுது பாருங்க, அந்தக் காச போட்டு விடுங்க! அப்படி காசு போடாதவங்களோட அக்சஸ இன்னும் கொஞ்ச நேரத்துல எடுத்து விட்டுருவேன்” என்றபடியே ஆன்லைனில் காத்திருக்கும் வெறி நாய்களுக்குப் படையல் வைக்க ஆரம்பித்தான்.

“நிறுத்துடா ஹேரி! சீச்சீ! என்னடா இப்படி செய், அப்படி செய்னு காச அள்ளி விடறானுங்க! ஹியூமன்ஸாடா இவனுங்களாம்?”

சக்தி ஒன்றும் ஆபாசப் படங்களைப் பார்க்காதவன் அல்ல. நண்பர்களுடன் மலையாள பிட்டுப் படங்களைத் தியேட்டரிலேயே போய் பார்த்திருக்கிறான். வெள்ளைக்காரர்கள், கருப்பினத்தவர், ஜப்பானியர், கொரியாக்காரர்கள் என ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் என் இனமே எனும் எண்ணத்தில் அவர்களுடைய தயாரிப்பையும் பார்த்திருக்கிறான் இவன். கிளுகிளுப்பாகப் பார்ப்பதற்கும், மன வக்கிரத்துக்குத் தீனிப் போடுவதற்காகப் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா! அடி வயிற்றிலிருந்து புரட்டியது இவனுக்கு!

“இதையே பார்க்க முடியல உங்களால! இதுக்கும் மேல போய் ரேப் பண்ணி கொலைலாம் கூட பண்ணுவானுங்க பாஸ்! அதுக்கெல்லாம் ரேட் இன்னும் அதிகம்!” என்றான் சாம்.

“இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி மூஞ்சை வச்சிக்கிட்டு, புடுங்கி வேலைப் பார்த்திருக்கானே இவன்” எனச் சொன்ன சக்தி அமரன், சற்று நேரம் எதையும் பேசவில்லை.

பின் நிமிர்ந்து அமர்ந்தவன்,

“இவனோட இல்லீகல் ஆக்டிவிட்டிஸ் எல்லாத்தையும் அழிச்சு விட்டுரு சாம்! சிறு பொறி கூட யார் கண்ணுக்கும் படக் கூடாது! மினிஸ்டரோட அரசியல் வாழ்க்கையும், அவரோட மான மரியாதையும் இதுல அடங்கிருக்கு! அண்ட் ஓன் மோர் திங்! இங்க ரூமுக்குள்ள நடந்த விஷயம் ஏதும் உங்க வழியா வெளிய கசிஞ்சது!!!” எனச் சொல்லி ஓர் ஆழ்ந்த பார்வைப் பார்த்தான் இருவருரையும்.

சாமும் ஹாரியும் ஒற்றைக் கையைத் தூக்கி விட்டார்கள்.

“இப்பவே வாய்க்கு ஜிப் போட்டுட்டோம் பாஸ்!”

“குட்!”

சாமுடனும் ஹாரியுடனும் பேசியதை நினைத்தபடியே சுப்பு ரத்தினத்தின் வீடு வந்து சேர்ந்திருந்தான் சக்தி. வீட்டுக்கருகில் இருந்த கட்சிக்காரர்களைப் பார்க்கும் இடத்துக்கு வரச் சொல்லி இருந்தார் அவர். காரைப் பார்க் செய்தவன், அவ்விடம் நோக்கிப் போனான். ஆபிஸ் அறைக்குள் இருப்பதாக பி.ஏ சொல்ல, கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் சக்தி.

தலை முடி, மீசை, தாடி எல்லாம் மழிக்கப்பட்டு ஓய்ந்த தோற்றத்தில் இருந்தார் சுப்பு ரத்தினம்.

“உட்காரு சக்தி!”

“எப்படி மாமா இருக்கீங்க?” எனக் கனிவாய் கேட்டான் இவன்.

“இருக்கேன்! அதை விடு! உன் கிட்ட குடுத்த பொறுப்பு என்னானது?” எனக் கேட்டவரின் குரலில் அழுத்தம் இருந்தது.

“மாமா! உங்க மகனுக்கு நியாயம் வேணுமா? இல்ல அமைச்சர் பதவி வேணுமா?” எனக் கேட்டவனை ஆழ்ந்து பார்த்தார் சுப்பு ரத்தினம்.

திலகனின் இல்லீகல் வேலையைப் பற்றி மறைக்காமல் இவரிடம் சொல்லி விட்டான் சக்தி.

“திலகனா? என் மகனா? என்ன சக்தி சொல்ற?” என அதிர்ந்து விட்டார் இவர்.

எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதி காத்தான் இவன்.

“அவனுக்கென்ன சக்தி குறை! கேட்டப்பலாம் காசுக் குடுத்தேனே! வசதில எந்தக் குறையும் வைக்கலியே! பின்ன ஏன் இப்படி ஒரு வேலை?” எனக் கேட்டவரின் குரல் தவிப்பாய் வெளிப்பட்டது.

“அவனோட ப்ரெண்ட்ஸ்ங்களுக்குக் கூடத் தெரியல மாமா இவனோட இன்னொரு பக்கம்! காசுக்காக செஞ்சானோ, அதுல கிடைக்கற த்ரீலிங் உணர்வுக்காக செஞ்சானோ! அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்! என்னோட முயற்சியா இது எதுவும் வெளிய வர முடியாதபடி செஞ்சிட்டேன்! நீங்க போலிஸ்க்கு போனா, விஷயம் எங்கயாச்சும் கசிய வாய்ப்பிருக்கு! ஆனாலும், அமைச்சரான உங்க மகன் மேலயே கைய வச்சவங்கள சும்மா விடக் கூடாது மாமா! நான் ப்ரைவெட் டிடேக்டிவ் அரேஞ்ச் பண்ணிருக்கேன்! பார்ப்போம், அவங்களால யாரு பண்ணதுன்னு கண்டுப் புடிக்க முடியுதான்னு”

“சக்தி!”

“சொல்லுங்க மாமா!”

“நல்லவனோ, கெட்டவனோ! அவன் என் புள்ளைய்யா! என் இரத்தம். மாருலயும் தோளுலயும் தூக்கி வளத்துருக்கேன்! என் அரசியல் வாரிசா அவனத்தான் நினைச்சிருந்தேன்! இப்போ அவன் இல்ல! அப்பான்னு கூப்பிட்ட என் செல்வம், உயிரோட இல்ல! அவனோட அம்மா தினம் துடிக்கறாய்யா! கலங்கித் தவிக்கறா! என் குல வாரிச கொன்னவன் உசுரோட இருக்கக் கூடாதுய்யா! சாகனும்!”

“நான் பார்த்துக்கறேன் மாமா!” என்றவனின் குரலில் உறுதி இருந்தது.



(ஹாய் டியர்ஸ்! இந்தக் கதைல நானும் நிறைய கத்துக்கறேன்! அதனால எக்ஸைட்மெண்ட்ல சில சமயம் சின்னதா, சில சமயம் பெருசான்னு எபி வருது! பெரிய எபிய ஏத்துக்கற மாதிரி, சின்னதையும் பாசமா ஏத்துக்கனும்! இதென்ன கொஞ்சம் பெரிய டீசர்ன்னு என்னைக் கலாய்க்கக் கூடாது! அவ்வ்வ்! இன்னிக்கு சஸ்பென்ஸ் இல்லாம முடிச்சிருக்கேன்! எல்லோரும் எனக்கொரு ஓ போடுங்க பார்ப்போம்! இதோட அடுத்த எபில சந்திக்கலாம் டியர்ஸ்! லவ் யூ ஆல்!)

(உயிராவாயா???)
 
😍😍😍

என்ன திலகன் இவ்வளவு மோசமானவனா இருக்கான்... 😡😡. அப்ப அவன் சாவுக்கு சக்தி காரணம் இல்லையா? 🤔🤔 அப்ப நான் பண்ண கெஸ் எல்லாம் தப்பா கோப்பால்? ☹️☹️☹️
FB_IMG_1723012736093.jpg
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 7)


ஓ... போட்டுட்டோம். ஆனாலும் இந்த வேலையை செய்தவன் யாருன்னு தெரிஞ்சிக்க, எங்க மூளை பரபரன்னு வேலை செய்யுது. ஆனாலும், ஒண்ணும் கிழிக்க முடியாதுன்னு எங்களுக்கே தெரியுது. அந்த ரகசியம் தெரிஞ்சவங்க நீங்க ஒருத்தர் தான். ஸோ... உங்க கிட்டயே வந்திட்டோம். ஒரு அமைச்சர் மகனையே இப்படி பண்ணனும்ன்னா... அரசியல் காரணமா, இல்ல திலகனோட
இல்லீகல் தான் காரணமா...?
இதுல இந்த ரஞ்சனி வேற இருபத்து நாலு மணி நேரமும் போதையிலேயே இருக்கிறா.
இவ ஏதாவது இப்படி வில்லங்கத்த ஆர் வெ டி மாட்டியிருப்பாளோன்னு டவுட் வருது.


என்னாத்தை சொல்ல...? இந்த காலத்து புள்ளைங்களை வளர்க்கிறதே, கத்தி முனையில நடக்குற சாகஸமா இருக்கும் போல போங்க.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அருவருப்பா இருக்கு
மனுச ஜென்மங்கள்
மிருகமா மாறிட்டாங்க

என்ன எப்படி யாருனு
நினைச்சா எனக்கு
ரஞ்சனி மேல் தான் சந்தேகம்
வருது
 
வனிம்மா சின்னதோ பெரிசோ நீங்க எபி போடறதுதான் அதைய நாங்க வாசிச்சு கமண்ட்ஸ் பொட்டிய நிரப்பறது தான் முக்கியம். அதனால நோ வொரீஸ்‌. வனிம்மா அன்டு ரீடர்ஸ் மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇
.
அப்ப நம்மாளு 🙄 🙄 தின்ன பிரியாணி ரசமலாய் காரணம் இல்லையா? சேஏஏஏ... நம்மாளையே ராங்கா நெனைச்சிட்டோமே

பி.கு:
(திலகன் மாதிரி வக்கிரம் புடிச்சவனுங்களுக்கு கிடைச்ச தண்டனை கொஞ்சம் கம்மி தான் இன்னும் செஞ்சிருக்கனும்)
 
Enakku Ranjani mela thaan doubt.
Nisha madam , neenga rendu moonu update pottalum, suspense thaangama adutha ud thanga nu urimai por thoduppom.
 
Ranjani ippidi edavathu maati adha marakka thaan drugs use panralo
Maybe Ranjani and Sakhthi are a team to bring down Subbu's second family and takeover Subbu's position
 
சின்ன பையனை போய் கொன்னுட்டாங்கன்னு பரிதாபப் பட்டா எவ்வளவு கேவலமானவனா இருந்துருக்கான்.... 😡😡😡😡😡 சாக வேண்டியவன் தான் இவன்... 😈

சக்தி மாமனார்கிட்ட ரொம்ப நெருங்கிட்டான் போல.....
 
ஹாய் வனிம்மா 💕 💕 💕 💕 உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 💖 💖 💖 💖 💖
இதேபோல என்றென்றும் எங்களை மகிழ்விக்க சிறந்த தயாரிப்புகளை தரும் உங்களுக்கு என்ற சின்ன விஷ்🥰
 
Adapavi😲😡 இப்படிலாம் கூடவா இருக்கு😬😬😬 அடேய் உனக்கு என்ன குறை டா.. ச்சி.. சீ.. என்ன தான் இருந்தாலும் உன் புள்ளை தான்.. ஆன ஒரு உத்தம்ம புத்திரன் போய் இருந்தா நீ சொல்றது சரி அமைச்சரே... இப்படி பட்ட ஈனபிறவி க்கு அது பொருந்தாது... என்னடா சக்தி நீயும் கொன்னவன கொல்ல சப்போட் பன்ற... இப்படி ஒரு காரியம் பண்றவன் சாவுறானா அவனால பாதிக்கபட்டவன் தானா பண்ணி இருக்கணும்...🤷

இந்த ரஞ்சனிக்கு எதோ தெரியும் போல... அடுத்து அவளோ இல்ல மஞ்சு😲 இல்ல ரஞ்சனி தான் கொலை பண்ணி இருக்கணும🤷 கற்பனை குதிரை எங்க எங்கயோ போது 🧐
 
😍😍😍

என்ன திலகன் இவ்வளவு மோசமானவனா இருக்கான்... 😡😡. அப்ப அவன் சாவுக்கு சக்தி காரணம் இல்லையா? 🤔🤔 அப்ப நான் பண்ண கெஸ் எல்லாம் தப்பா கோப்பால்? ☹️☹️☹️
View attachment 646
ஆணைக்கும் அடி சறுக்கும் கோப்பால் அந்த வகையில் உங்களுகக்கே சறுக்கிடுத்து என்ன செய்ய
 
Back
Top