VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

எபி பாடல்கள்
இதுவும் ஒரு சரக்குப் பாட்டுத்தான். தண்ணித் தொட்டித் தேடி வந்த கன்னுக்குட்டி பாடற முன்னமே இந்தப் பாட்டப் பாடிட்டாரு யேசுதாஸ்!
ஜானகிமா மாதிரி ஒரு ஒரு பாடகி இனி பிறந்து வரப் போறது இல்லை. குழந்தை மாதிரியே எவ்ளோ அழகா பாடிருக்காங்க, கேளுங்களேன்!!! மார்வலஸ்!!!!
அத்தியாயம் 8
“ஐயா!” என அழைத்தார் சுப்பு ரத்தினத்தின் பி.ஏ.
“சொல்லுயா”
“என்னதான் உங்க நண்பரோட மகனா இருந்தாலும், சக்தி தம்பிய ரொம்ப நம்பறீங்களோன்னு தோணுதுய்யா” எனத் தயங்கியபடிச் சொன்னார் பி.ஏ.
அவரிடம் தனது லாப்டாப்பை திருப்பிக் காட்டினார் சுப்பு ரத்தினம்.
“இவனோட இல்லீகல் ஆக்டிவிட்டிஸ் எல்லாத்தையும் அழிச்சு விட்டுரு சாம்! சிறு பொறி கூட யார் கண்ணுக்கும் படக் கூடாது! மினிஸ்டரோட அரசியல் வாழ்க்கையும், அவரோட மான மரியாதையும் இதுல அடங்கிருக்கு! அண்ட் ஓன் மோர் திங்! இங்க ரூமுக்குள்ள நடந்த விஷயம் ஏதும் உங்க வழியா வெளிய கசிஞ்சது!!!”
அன்றொரு நாள் ஐ.டி விங்கில் நடந்த சம்பாஷணைத் திரையில் ஓடியது.
“தன்னோட நிழலையே நம்பாதவன்தான் அரசியல்வாதி! திடீர்னு உங்க கூட இருக்கேன் மாமான்னு இவன் வந்து நின்னா, சந்தேகம் வரத்தானே செய்யும். ஒரு கண்ண அவன் மேல வச்சிட்டுத்தான் இருக்கேன். கட்சி அலவலகத்துல சக்தியோட நடமாட்டம், என் ரெண்டாவது பொண்ணோட பண்ணுற காதல் எல்லாமே எனக்குத் தெரியும்யா! போலிஸ் ஸ்டேஷன்ல விழுந்த அடி, அவன் தன்மானத்துக்கு விழுந்ததா நினைக்கறான்! நல்லதுதானே! வாழ்க்கைல ஏதோ ஒரு கட்டத்துல, விளையாட்டுத்தனத்த எல்லாம் விட்டுட்டு வீறு கொண்டு எழுந்து நின்னுத்தானே ஆகனும்! இப்ப நின்னிருக்கான்! அதை நமக்குச் சாதகமாப் பயன் படுத்திக்குவோம்! நல்ல பையன்! பாரம்பரியமானக் குடும்பம்! சொத்துபத்துக்குக் குறைவில்ல! கொஞ்சம் ஷேப் பண்ணா, சிறப்பான அரசியல்வாதியா வருவான்! இனி எனக்குன்னு அரசியல் வாரிசு யாரிருக்கா சொல்லு!” எனத் தொண்டையைச் செறுமியவர்,
“மருமகனாக்கி, எனக்குப் பிறகு வாரிசா கொண்டு வந்திருவோம்” என்றார்.
“நீங்க சொன்னா சரியாத்தான்யா இருக்கும்”
அந்த நேரம் அவரது பெர்சனல் போன் நம்பர் அடித்தது.
“ஐயா!”
“சொல்லு”
“மேடம்! மப்புல, பப்புல விழுந்து கிடக்கறாங்க! இன்னிக்கு ரொம்ப ஓவரா போய்டுச்சி! நான் தூக்கப் போனா, ரொம்ப கத்துறாங்க! அடிக்கறாங்க! வலுக்கட்டாயமா மத்தவங்களுக்கு சீனாகற மாதிரி எதையும் செய்ய வேணாம்னு வேற சொல்லிருக்கீங்க! இப்ப நான் என்ன செய்யட்டும்?” எனக் கேட்டான் சிவரஞ்சனிக்காக இவர் நியமித்திருந்த பாதுகாவலன்.
தலையைப் பிடித்துக் கொண்டார் சுப்பு ரத்தினம்.
“பப் மூடற வரைக்கும் வெய்ட் பண்ணு! ஆட்கள் வெளியானதும், அவ வாயைப் பொத்தித் தூக்கிப் பின்னாடி எக்ஸிட் வழியா கொண்டு வந்துடு காருக்கு! வீட்டுக்கு வந்ததும் ஒரு போன் பண்ணிடு எனக்கு” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
“தில்லை!!! நம்ப பொண்ணு என்னை எப்படி படுத்தி எடுக்கறா பாருடி! இதெல்லாம் பார்க்கக் கூடாதுன்னுதான் இவ்ளோ சீக்கிரம் என்னை விட்டுப் போயிட்டியா?” எனக் கலங்கியவரை அவரது பி.ஏதான் தேற்றினார்.
அந்த இருட்டானப் பப்பில், ஒதுக்குப் புறமான இடத்தில் கிடந்த சோபாவில் கவிழ்ந்து கிடந்தாள் சிவரஞ்சனி. கண்கள் மேலே சொருகி நிற்க உதடுகளோ,
“ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே” என முனகிக் கொண்டிருந்தன.
சிவரஞ்சனியின் அருகே வந்த ஒருவன், சரிந்து அவள் பக்கம் அமர்ந்தான். அவனும் போதையில்தான் இருந்தான். அவள் போட்டிருந்த ஷார்ட் டாப்ஸ் விலகி ஆலிலை வயிற்றை அவன் கண்களுக்குப் படம் போட்டுக் காட்டியது. கண்கள் இன்னும் சிவந்து போக, அவனது கை அவள் வயிற்றை வருடி, மெல்ல ஊர்ந்து மேலேறியது. தன்னைச் சுற்றி நடப்பது என்ன என்பது கூட அறியாமல், புரியாமல் ஜாய்ண்ட்(போதை மருந்து கலந்த சிகரேட்) அடித்தப் போதையில் இருந்தாள் பெண்.
எப்பொழுதும் அவளைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். ஆண், பெண்ணெனப் பேதமில்லை! எல்லாம் அவிழ்த்து விட்டக் கன்று குட்டிகள். இவனும் கூட அவளது நண்பர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன்தான். அவன் வந்ததையோ, அவள் பக்கம் அமர்ந்ததையோ பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை, ஓர் ஓரமாய் ஒதுங்கி அமர்ந்திருந்த அவளது பாதுகாவலன். அவனது கைகள் அத்து மீறுவதைப் பார்த்ததும்தான் அவசரமாக பாதுகாவலன் ஓடி வர, அதற்குள் இன்னொருத்தன் அவனது கை பிடித்து படக்கென மடக்கி ஒடித்திருந்தான்.
வலியில் அவன் கத்த வாயைத் திறக்க, பாதுகாவலன் கப்பென வாயைப் பொத்தி சத்தத்தை அடக்கி இருந்தான்.
“எவனோ ஒருத்தன் அட்வாண்டேஜ் எடுத்துக்கற வரைக்கும் என்னத்தடா புடுங்கிட்டு இருந்த?” எனச் சீறிய சக்தி அமரன் பளீரென பாதுகாவலனுக்கு ஓர் அறை விட்டிருந்தான்.
“அவங்க ப்ரேண்ட்தானேன்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன் சார்” என்றவனுக்குக் கன்னம் தீயாய் எரிந்தது.
“பேக் டோர் எக்ஸிட் எங்க?”
“வாங்க சார்! நான் காட்டுறேன்” என்றவன் வலியில் மயங்கி இருந்தவனைக் கீழே தள்ளி விட்டான்.
அதற்குள் சக்தி, சிவரஞ்சனியை அலேக்காகத் தூக்கி இருந்தான்.
“யாரும் பார்த்து போட்டோ ஏதும் எடுக்கறதுக்குள்ள, வெளியாகனும்! எங்கள மறச்சாப்பல வா” எனச் சொல்லி வேகமாய் பாதுகாவலன் காட்டியப் பாதை வழி நடந்தான் சக்தி அமரன்.
பேக் டோர் வழி வெளியேறி ஒரு சந்தில் வந்து நின்றார்கள் இருவரும்.
“என் கார பப் நுழைவாயில்ல விட்டுட்டு வந்திருக்கேன்! காருக்குள்ள சாரோட செகண்ட் டாட்டரும் இருப்பாங்க! வேகமா போய், கார இங்க கொண்டு வா” என ஆர்டர் போட்டான் சக்தி.
பாதுகாவலன் வேகமாய் ஓட, ரஞ்சனியை இறக்கி மெல்ல நிற்க வைத்தான் இவன். அவள் பின்னால் சரியப் பார்க்க, தன் மேல் சாய்த்துக் கொண்டான் சக்தி அமரன். அவள் என்னவோ முனக, காதை அவள் வாய்ப் பக்கம் கொண்டு போனான்.
“மிஸ்டர் எனெர்ஜி(சக்தி)”
“என்ன? தெளிஞ்சிருச்சா?” என நக்கலாகக் கேட்டான் இவன்.
இன்னும் அவனை ஒண்டிக் கொண்டவள்,
“நான் வேணாமா சக்தி உனக்கு? அந்தத் தேஞ்சுப் போன மஞ்சுத்தான் வேணுமா?” எனக் குளறலாகக் கேட்டாள்.
“அவள பத்தி பேசுன, முகரையைப் பேத்துடுவேன்!”
அவன் இரு பக்கமும் கைப் போட்டு கழுத்தோடுக் கட்டிக் கொண்டவள், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தள்ளாடினாள். அவள் விழுந்து விடாமல் இருக்க, ரஞ்சனியின் இடுப்பைப் பற்றிக் கொண்டான் இவன்.
“விழுந்து தொலைச்சிடாதே பிசாசே!”
அவனையே போதையாய் பார்த்தபடி இருந்தவள்,
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ சக்தி” என இளித்தபடி கேட்டாள்.
“ஓவர் மை டெட் பாடி!” எனச் சீறினான் இவன்.
“நல்லா பார்த்துப்பேன் எனெர்ஜி உன்னை! நானே சரக்க ஊத்தி கரேக்டான அளவுல சோடா சேர்த்து மிக்ஸ் பண்ணிக் குடுப்பேன்! ரெண்டு பேரும் பெட் ரூம்லயே சியர்ஸ்னு சொல்லி குடிச்சிக்கலாம்! குடிச்சிட்டு நல்லா கூத்தடிக்கலாம்! நம்ம லைப்ஃ எப்படி இருக்கும்னு சாம்பிள் ஒன்னு வேணும்னா காட்டவா?” எனக் திக்கிக் குளறிப் பேசியவள், சக்தி சுதாரிக்கும் முன் எம்பி அவன் உதட்டோடு தன் உதட்டைப் பொருத்தி இருந்தாள்.
எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக அப்படியே நின்றிருந்தான் சக்தி அமரன். சில நிமிடங்களில் விலகிப் புறங்கையால் வாயைத் துடைத்தவளைப் பார்த்து,
“உன் தங்கச்சிய லவ் பண்றவன மயக்கப் பார்க்கறியே, உனக்கு வெக்கமா இல்ல?” எனக் கேட்டான்.

எபி பாடல்கள்
இதுவும் ஒரு சரக்குப் பாட்டுத்தான். தண்ணித் தொட்டித் தேடி வந்த கன்னுக்குட்டி பாடற முன்னமே இந்தப் பாட்டப் பாடிட்டாரு யேசுதாஸ்!
ஜானகிமா மாதிரி ஒரு ஒரு பாடகி இனி பிறந்து வரப் போறது இல்லை. குழந்தை மாதிரியே எவ்ளோ அழகா பாடிருக்காங்க, கேளுங்களேன்!!! மார்வலஸ்!!!!
அத்தியாயம் 8
“ஐயா!” என அழைத்தார் சுப்பு ரத்தினத்தின் பி.ஏ.
“சொல்லுயா”
“என்னதான் உங்க நண்பரோட மகனா இருந்தாலும், சக்தி தம்பிய ரொம்ப நம்பறீங்களோன்னு தோணுதுய்யா” எனத் தயங்கியபடிச் சொன்னார் பி.ஏ.
அவரிடம் தனது லாப்டாப்பை திருப்பிக் காட்டினார் சுப்பு ரத்தினம்.
“இவனோட இல்லீகல் ஆக்டிவிட்டிஸ் எல்லாத்தையும் அழிச்சு விட்டுரு சாம்! சிறு பொறி கூட யார் கண்ணுக்கும் படக் கூடாது! மினிஸ்டரோட அரசியல் வாழ்க்கையும், அவரோட மான மரியாதையும் இதுல அடங்கிருக்கு! அண்ட் ஓன் மோர் திங்! இங்க ரூமுக்குள்ள நடந்த விஷயம் ஏதும் உங்க வழியா வெளிய கசிஞ்சது!!!”
அன்றொரு நாள் ஐ.டி விங்கில் நடந்த சம்பாஷணைத் திரையில் ஓடியது.
“தன்னோட நிழலையே நம்பாதவன்தான் அரசியல்வாதி! திடீர்னு உங்க கூட இருக்கேன் மாமான்னு இவன் வந்து நின்னா, சந்தேகம் வரத்தானே செய்யும். ஒரு கண்ண அவன் மேல வச்சிட்டுத்தான் இருக்கேன். கட்சி அலவலகத்துல சக்தியோட நடமாட்டம், என் ரெண்டாவது பொண்ணோட பண்ணுற காதல் எல்லாமே எனக்குத் தெரியும்யா! போலிஸ் ஸ்டேஷன்ல விழுந்த அடி, அவன் தன்மானத்துக்கு விழுந்ததா நினைக்கறான்! நல்லதுதானே! வாழ்க்கைல ஏதோ ஒரு கட்டத்துல, விளையாட்டுத்தனத்த எல்லாம் விட்டுட்டு வீறு கொண்டு எழுந்து நின்னுத்தானே ஆகனும்! இப்ப நின்னிருக்கான்! அதை நமக்குச் சாதகமாப் பயன் படுத்திக்குவோம்! நல்ல பையன்! பாரம்பரியமானக் குடும்பம்! சொத்துபத்துக்குக் குறைவில்ல! கொஞ்சம் ஷேப் பண்ணா, சிறப்பான அரசியல்வாதியா வருவான்! இனி எனக்குன்னு அரசியல் வாரிசு யாரிருக்கா சொல்லு!” எனத் தொண்டையைச் செறுமியவர்,
“மருமகனாக்கி, எனக்குப் பிறகு வாரிசா கொண்டு வந்திருவோம்” என்றார்.
“நீங்க சொன்னா சரியாத்தான்யா இருக்கும்”
அந்த நேரம் அவரது பெர்சனல் போன் நம்பர் அடித்தது.
“ஐயா!”
“சொல்லு”
“மேடம்! மப்புல, பப்புல விழுந்து கிடக்கறாங்க! இன்னிக்கு ரொம்ப ஓவரா போய்டுச்சி! நான் தூக்கப் போனா, ரொம்ப கத்துறாங்க! அடிக்கறாங்க! வலுக்கட்டாயமா மத்தவங்களுக்கு சீனாகற மாதிரி எதையும் செய்ய வேணாம்னு வேற சொல்லிருக்கீங்க! இப்ப நான் என்ன செய்யட்டும்?” எனக் கேட்டான் சிவரஞ்சனிக்காக இவர் நியமித்திருந்த பாதுகாவலன்.
தலையைப் பிடித்துக் கொண்டார் சுப்பு ரத்தினம்.
“பப் மூடற வரைக்கும் வெய்ட் பண்ணு! ஆட்கள் வெளியானதும், அவ வாயைப் பொத்தித் தூக்கிப் பின்னாடி எக்ஸிட் வழியா கொண்டு வந்துடு காருக்கு! வீட்டுக்கு வந்ததும் ஒரு போன் பண்ணிடு எனக்கு” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.
“தில்லை!!! நம்ப பொண்ணு என்னை எப்படி படுத்தி எடுக்கறா பாருடி! இதெல்லாம் பார்க்கக் கூடாதுன்னுதான் இவ்ளோ சீக்கிரம் என்னை விட்டுப் போயிட்டியா?” எனக் கலங்கியவரை அவரது பி.ஏதான் தேற்றினார்.
அந்த இருட்டானப் பப்பில், ஒதுக்குப் புறமான இடத்தில் கிடந்த சோபாவில் கவிழ்ந்து கிடந்தாள் சிவரஞ்சனி. கண்கள் மேலே சொருகி நிற்க உதடுகளோ,
“ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே” என முனகிக் கொண்டிருந்தன.
சிவரஞ்சனியின் அருகே வந்த ஒருவன், சரிந்து அவள் பக்கம் அமர்ந்தான். அவனும் போதையில்தான் இருந்தான். அவள் போட்டிருந்த ஷார்ட் டாப்ஸ் விலகி ஆலிலை வயிற்றை அவன் கண்களுக்குப் படம் போட்டுக் காட்டியது. கண்கள் இன்னும் சிவந்து போக, அவனது கை அவள் வயிற்றை வருடி, மெல்ல ஊர்ந்து மேலேறியது. தன்னைச் சுற்றி நடப்பது என்ன என்பது கூட அறியாமல், புரியாமல் ஜாய்ண்ட்(போதை மருந்து கலந்த சிகரேட்) அடித்தப் போதையில் இருந்தாள் பெண்.
எப்பொழுதும் அவளைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். ஆண், பெண்ணெனப் பேதமில்லை! எல்லாம் அவிழ்த்து விட்டக் கன்று குட்டிகள். இவனும் கூட அவளது நண்பர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன்தான். அவன் வந்ததையோ, அவள் பக்கம் அமர்ந்ததையோ பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை, ஓர் ஓரமாய் ஒதுங்கி அமர்ந்திருந்த அவளது பாதுகாவலன். அவனது கைகள் அத்து மீறுவதைப் பார்த்ததும்தான் அவசரமாக பாதுகாவலன் ஓடி வர, அதற்குள் இன்னொருத்தன் அவனது கை பிடித்து படக்கென மடக்கி ஒடித்திருந்தான்.
வலியில் அவன் கத்த வாயைத் திறக்க, பாதுகாவலன் கப்பென வாயைப் பொத்தி சத்தத்தை அடக்கி இருந்தான்.
“எவனோ ஒருத்தன் அட்வாண்டேஜ் எடுத்துக்கற வரைக்கும் என்னத்தடா புடுங்கிட்டு இருந்த?” எனச் சீறிய சக்தி அமரன் பளீரென பாதுகாவலனுக்கு ஓர் அறை விட்டிருந்தான்.
“அவங்க ப்ரேண்ட்தானேன்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன் சார்” என்றவனுக்குக் கன்னம் தீயாய் எரிந்தது.
“பேக் டோர் எக்ஸிட் எங்க?”
“வாங்க சார்! நான் காட்டுறேன்” என்றவன் வலியில் மயங்கி இருந்தவனைக் கீழே தள்ளி விட்டான்.
அதற்குள் சக்தி, சிவரஞ்சனியை அலேக்காகத் தூக்கி இருந்தான்.
“யாரும் பார்த்து போட்டோ ஏதும் எடுக்கறதுக்குள்ள, வெளியாகனும்! எங்கள மறச்சாப்பல வா” எனச் சொல்லி வேகமாய் பாதுகாவலன் காட்டியப் பாதை வழி நடந்தான் சக்தி அமரன்.
பேக் டோர் வழி வெளியேறி ஒரு சந்தில் வந்து நின்றார்கள் இருவரும்.
“என் கார பப் நுழைவாயில்ல விட்டுட்டு வந்திருக்கேன்! காருக்குள்ள சாரோட செகண்ட் டாட்டரும் இருப்பாங்க! வேகமா போய், கார இங்க கொண்டு வா” என ஆர்டர் போட்டான் சக்தி.
பாதுகாவலன் வேகமாய் ஓட, ரஞ்சனியை இறக்கி மெல்ல நிற்க வைத்தான் இவன். அவள் பின்னால் சரியப் பார்க்க, தன் மேல் சாய்த்துக் கொண்டான் சக்தி அமரன். அவள் என்னவோ முனக, காதை அவள் வாய்ப் பக்கம் கொண்டு போனான்.
“மிஸ்டர் எனெர்ஜி(சக்தி)”
“என்ன? தெளிஞ்சிருச்சா?” என நக்கலாகக் கேட்டான் இவன்.
இன்னும் அவனை ஒண்டிக் கொண்டவள்,
“நான் வேணாமா சக்தி உனக்கு? அந்தத் தேஞ்சுப் போன மஞ்சுத்தான் வேணுமா?” எனக் குளறலாகக் கேட்டாள்.
“அவள பத்தி பேசுன, முகரையைப் பேத்துடுவேன்!”
அவன் இரு பக்கமும் கைப் போட்டு கழுத்தோடுக் கட்டிக் கொண்டவள், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தள்ளாடினாள். அவள் விழுந்து விடாமல் இருக்க, ரஞ்சனியின் இடுப்பைப் பற்றிக் கொண்டான் இவன்.
“விழுந்து தொலைச்சிடாதே பிசாசே!”
அவனையே போதையாய் பார்த்தபடி இருந்தவள்,
“என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ சக்தி” என இளித்தபடி கேட்டாள்.
“ஓவர் மை டெட் பாடி!” எனச் சீறினான் இவன்.
“நல்லா பார்த்துப்பேன் எனெர்ஜி உன்னை! நானே சரக்க ஊத்தி கரேக்டான அளவுல சோடா சேர்த்து மிக்ஸ் பண்ணிக் குடுப்பேன்! ரெண்டு பேரும் பெட் ரூம்லயே சியர்ஸ்னு சொல்லி குடிச்சிக்கலாம்! குடிச்சிட்டு நல்லா கூத்தடிக்கலாம்! நம்ம லைப்ஃ எப்படி இருக்கும்னு சாம்பிள் ஒன்னு வேணும்னா காட்டவா?” எனக் திக்கிக் குளறிப் பேசியவள், சக்தி சுதாரிக்கும் முன் எம்பி அவன் உதட்டோடு தன் உதட்டைப் பொருத்தி இருந்தாள்.
எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக அப்படியே நின்றிருந்தான் சக்தி அமரன். சில நிமிடங்களில் விலகிப் புறங்கையால் வாயைத் துடைத்தவளைப் பார்த்து,
“உன் தங்கச்சிய லவ் பண்றவன மயக்கப் பார்க்கறியே, உனக்கு வெக்கமா இல்ல?” எனக் கேட்டான்.
Last edited: