Narmadha Subramaniyam
Well-known member
வாசகத் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம் 
மன்னிக்கவும் அவசர வேலை காரணமாக இரண்டு நாள்களாக பதிவிட முடியவில்லை.
இன்று அதற்கும் சேர்த்து இரண்டு அத்தியாயமாகப் பதிவிடுகிறேன்.
தொடர்ந்து வாசித்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பேரன்புகளோடு நெஞ்சார்ந்த நன்றிகள்
🩷

அத்தியாயம் 5
ஆதினியின் தந்தையிடம் பேச வேண்டுமென முடிவு செய்த பிறகு தான், தனது குடும்பத்துடன் அவளின் குடும்பத்தை ஒப்பிட்டு பார்த்திருந்தான் அகிலன்.
ஆதினியின் குடும்பம் தற்போது இருப்பது சொந்த வீடு. இன்னொரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்களெனக் கேள்விபட்டிருந்தான். மதுரனும் ஆதினியும் நன்றாகவே சம்பாதிக்கின்றனர். ஆதினியின் தந்தையும் மகிழுந்து வாங்கி விற்கும் தொழிலைச் செய்வதாய் அறிந்திருந்தான். ஆக எவ்வகையில் பார்த்தாலும் அவர்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினர் என்று நன்றாய்ப் புரிந்தது அகிலனுக்கு.
அகிலனின் குடும்பத்தில் அவன் ஒருவனே சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். சிறு தொழில் செய்து கொண்டிருந்த அவனின் தந்தை உடல்நிலை காரணமாய் வேலையை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன.
அவனின் தங்கை மீனாள் ஆடை வடிவமைப்பாளர் படிப்புப் படித்து விட்டு ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மீனாளும் அகிலனும் இணைந்து அவர்களின் கனவான சொந்த இல்லத்தை வடிவமைத்துக் கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் மீனாளின் திருமணம் நிச்சயிக்கப்பட, அந்த வேலை அப்படியே நின்று விட்டது. மீனாளின் திருமணக் கடன்களை அடைத்து, தற்பொழுது தான் சிறுக சிறுக சேர்த்து அவ்வீட்டு வேலையை மீண்டுமாய்த் தொடங்கி இருக்கிறான் அகிலன். எவ்வகையில் பார்த்தாலும் அகிலனின் குடும்பம் ஆதினியின் குடும்பத்தை விடப் பொருளாதாரத்தில் குறைந்த குடும்பம். இதுவே பெரும் பயத்தை உருவாக்கியது அகிலனுக்கு.
"என் பொண்ணைத் திருமணம் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கு" என்று அவர் கேட்டு விட்டால் என்ன செய்வதென்ற பயம் வந்தது அவனுக்கு.
வீட்டு வேலையேனும் சற்று முடித்துவிட்டு இதைப் பற்றி ஆதினியின் தந்தையிடம் பேசலாமென எண்ணினான்.
இவ்வாறாய் இரு வாரங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு மாலைப் பொழுதில் வீட்டின் வரவேற்பறையில் மத்தியமாய் ஆதினியின் அன்னை, தந்தை மற்றும் மதுரன் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
"ஆதுமா எவ்வளவு நேரமாமா டீ போடுவ?" வரவேற்பறையிலிருந்து குரல் கொடுத்தான் மதுரன்.
"இதோ வந்துட்டேண்ணா" என்றவள் கையில் ஒரு பெரிய தட்டுடன் வந்து நின்றாள். நால்வருக்குமாய் இஞ்சி டீயும் பக்கோடாவும் தயார் செய்திருந்தவள், அவர்களுக்குப் பரிமாறிவிட்டு அவளும் உடன் அமர்ந்தாள்.
"சூப்பரா இருக்குமா டீயும் பக்கோடாவும்" ருசித்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஆதினியின் தந்தை.
"ஆது, மேரேஜ்க்கு உனக்கு எந்த மாதிரி பையன் பார்க்கனும்? உனக்கு மனசுல எதுவும் ஆசை கனவு இருக்கா?" மதுரன் கேட்டதும், திருதிருவென விழித்தாள் ஆதினி.
இருபத்தைந்து வயதான போதிலும் இவளுக்கென்று தனிப்பட்ட ஆசைகளென இதுவரை எதுவும் இருந்ததில்லை. அவளின் ஆசைகள் கனவுகள் அனைத்தும் அந்தக் குடும்பத்திலுள்ள நால்வரைச் சுற்றி மட்டுமே சுழன்றிருந்தன.
இதை மற்றைய மூவரும் அறிந்திருந்த போதும், ஏன் தனது அண்ணன் இவ்வாறு கேட்கிறானென எண்ணியே அவ்வாறு விழித்தாள் ஆதினி.
"ஏன் அண்ணா திடீர்னு இப்படி ஒரு கேள்வி? நான் ஏற்கனவே சொன்னது தான்! உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா அது போதும் எனக்கு" என்றவள்,
"ஆனா ஒரு ஆசை இருக்கு! எந்த மாதிரி வாழ்க்கை வாழனும்னு ஒரு ஆசை இருக்குண்ணா"
"நம்ம அப்பா அம்மா போல ஆதர்ச தம்பதிகளாய் வாழனும்! அப்பா அம்மாவை அன்பா பாசமா காதலா பார்த்துக்கிறது மாதிரி என்னையும் அன்பா காதலா பாதுக்காப்பாய் பார்த்துக்கனும்! அப்பா அம்மாவோட காதலான வாழ்வு போல நம்மளோட வாழ்வும் அமையனும். நீ உன் பொண்டாட்டி, நான் என் புருஷன்… அப்படியே நம்ம குழந்தைகள், அவங்களுக்குள்ள வர்ற பாசம்னு காலங்காலமா தொன்று தொட்டு தொடர்ந்து வரனும்" கண்களில் கனவுகள் மின்ன ஆசை ஆசையாய் ஆதினி கூறிக் கொண்டிருக்க, அவளின் தலையை ஆதூரமாய் வருடினான் மதுரன்.
அவளின் பேச்சைக் கேட்டு அவளின் தாய் மென்மையாய்ச் சிரித்திருக்க, வாய்விட்டுச் சிரித்த அவளின் தந்தை, "என் செல்லம் இவ்ளோ பேசுற அளவுக்கு வளர்ந்துட்டாளானு தோணுது" அவள் கன்னத்தைக் கிள்ளிச் செல்லம் கொஞ்சினார்.
அச்சமயம் அவ்வீட்டின் அழைப்பொலியின் ஓசைக் கேட்க, மதுரன் சென்று கதவைத் திறந்தான்.
"வாங்க அகிலன்" மதுரன் வாசலில் நின்றிருந்த அகிலனைப் பார்த்து மென்னகையுடன் உள்ளே அழைக்க, அனைவருக்கும் வணக்கம் கூறி வந்தமர்ந்தான் அகிலன்.
"நீங்க என்னை தேடி வீட்டிக்கு வந்ததா அப்பா சொன்னாங்க!" மதுரனிடம் அகிலன் கூற,
"ஆமா அகிலன்! ஒரு விஷயம் பேச வந்தேன்" என்ற மதுரன், "ஆதுமா அகிலனுக்கு டீ போட்டு எடுத்துட்டு வா" எனக் கூறி அவளை அனுப்பி விட்டு, அகிலனிடம் பக்கோடாவைக் கொடுத்து, "ஆது செஞ்ச பக்கோடா. நல்லா இருக்கும். சாப்பிட்டுப் பாருங்க" எனக் கொடுத்தான்.
ஆதினி கைப்பக்குவம் அறிந்து கொள்ளவே ஆசையாய் எடுத்து உண்டவன், 'வாவ் செம்ம டேஸ்ட்டா தான் சமைக்கிறா! ஹப்பாடா தப்பிச்சோம்! சாப்பாட்டுக்குப் பிரச்சனை இருக்காது' மனத்திற்குள்ளாக எண்ணிக் கொண்டான் அகிலன்.
"நம்ம அப்பார்ட்மெண்ட்ல நாளைக்கு ஒரு இன்ட்ரொடக்ஷன் ஃபங்ஷன் வைக்கலாம்னு ப்ளான். எல்லா வீட்டுக்காரங்கக் கிட்டயும் நாளைக்குப் ஃபங்ஷன்ல கலந்துக்கச் சொல்லி இன்வைட் செஞ்சாச்சு. நம்ம இரண்டு பேரும் தான் ஹோஸ்ட் பண்றோம் ஓகேவா" என்று மதுரன் கேட்கவும்,
"ஓ சூப்பர் செஞ்சிடலாம்" ஆர்வமாய்ப் பதிலுரைத்தான் அகிலன்.
ஆதினி தேநீர்க் கோப்பையினை அகிலனிடம் கொடுக்க, பெண் பார்க்கும் நேரம் அவள் தன் கையில் தரும் தேநீர்க் கோப்பையாய் அவனின் மனம் அதைப் பாவிக்க, லேசான வெட்கத்துடன் கூடிய புன்சிரிப்புடன் அவளிடம் இருந்து வாங்கியவன் ரசித்து ருசித்துக் குடித்தான்.
அகிலனின் முகப் பாவனையில் கண்டு கொண்ட மதுரன், "அகிலன், நம்ம ஆதினிக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டோம்! உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல பையன் யாராவது இருந்தா சொல்லுங்களேன்" வேண்டுமென்றே கேட்டான்.
மதுரனின் இவ்வார்த்தையில், அருந்திய தேநீர் புரைக்கேற இருமினான் அகிலன்.
'அய்யோ நம்ம வீடு கட்டுறதுக்குள்ளே இந்தப் பொண்ணுக்கு கல்யாணமே செஞ்சி வச்சிடுவாங்க போலயே' அகிலனின் மைண்ட் வாய்ஸில் கதறிக் கொண்டிருக்க,
"என்ன அகிலன் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்க?" அவனை வம்பிழுக்கவென்றே மீண்டுமாய் கேட்டான் மதுரன்.
"அப்பா அவசரமா வரச் சொன்னாங்க! நான் அப்புறமா வந்து பேசுறேன்" எனக் கூறி அனைவரிடமும் விடைப்பெற்று சென்று விட்டான் அகிலன்.
இவர்கள் இருவரின் பேச்சிலும் பார்வையிலும் பாவனையிலும் ஆதினியின் தாய்க்கு அகிலனின் மனம் நன்றாய் புரிந்து போனது.
ஆதினிக்கு ஐம்பது சதவீதம் இப்படி இருக்குமோவென்ற சந்தேகம் வந்திருந்தது. ஆயினும் வீட்டினர் யாரிடமும் அதைப் பற்றி அவள் கேட்கவில்லை. அதைப் பெரிதாய் அவள் கண்டு கொள்ளவுமில்லை. ஆனால் மறுநாள் அவளுக்கு அதை நூறு சதவீதம் உண்மையென ஊர்ஜிதம் செய்தான் அகிலன்.
அன்றைய இரவு அகிலனுக்கு மனத்தின் குழப்பத்தினால் உறங்கா இரவானது.
படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவன், 'ஆதினிக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களே! அவளை வேறொருத்தர் பொண்டாட்டியா பார்க்க முடியுமா என்னால' நினைக்கும் போதே நெஞ்சு பாரமானது போல் உணர்ந்தவன், சட்டென எழுந்து அமர்ந்து விட்டான்.
'ம்ப்ச், இருபத்தேழு வயசுக்கு மேல இந்தக் காதல் வரலைனு யாரு அழுதா? இப்ப இது ஒன் சைட் லவ் ஆச்சுனா லவ் ஃபெய்லியர்னால எப்படியும் ஒன் இயர்க்கு மேரேஜ் பத்தியே மனசு யோசிக்காதே! இவளை மறந்துட்டு வாழ முடியும் தான்! ஆனா அதுக்கு நாள் ஆகுமே! மனசு வலிச்சுப் பைத்தியமா கொஞ்ச நாள் சுத்த வைக்குமே! இதெல்லாம் தாண்டி வரனுமே' மனம் வலிக்க வலிக்கத் தான் இத்தனையும் யோசித்துக் கொண்டிருந்தான் அகிலன்.
என்ன தான் நாம் ஆசைப்பட்டாலும், ஆசைப்பட்டது கிடைக்காமல் போகும் பட்சத்தில் தனது வாழ்வின் நிலை என்னவாகுமென்ற வருங்காலத்திற்கான சிந்தனையும் திட்டமிடலும் தான், வாழ்வில் எத்தகைய தோல்வியைச் சந்தித்த பின்னும், பெரும் ஏமாற்றத்தை சந்தித்த பின்னும், வாழ்வில் தொடர்ந்து பயணிக்கப் பேருதவியாய் இருக்கும்.
'ஏன் அகி நெகடிவ்வாவே யோசிக்கிற' அவனின் மூளை இடித்துரைக்க,
'ஆமா ஏன் முயற்சியே செய்யாம நெகடிவ்வா யோசிச்சிட்டு இருக்கோம்! கொஞ்சம் ப்ரிபேர் பண்ணிட்டு போய் அவங்க அப்பாகிட்ட முதல்ல பேசுவோம். என்ன தான் நடக்குதுனு பார்த்துடலாம்' மனத்திற்குள் எண்ணிக் கொண்டு தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.
மறுநாள் பரபரப்பாய் விடிந்தது அந்தக் காலை. அக்குடியிருப்பு வளாகத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தமையால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர் தன்னார்வ இளையோர்கள்.
மன்னிக்கவும் அவசர வேலை காரணமாக இரண்டு நாள்களாக பதிவிட முடியவில்லை.
இன்று அதற்கும் சேர்த்து இரண்டு அத்தியாயமாகப் பதிவிடுகிறேன்.
தொடர்ந்து வாசித்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பேரன்புகளோடு நெஞ்சார்ந்த நன்றிகள்

அத்தியாயம் 5
ஆதினியின் தந்தையிடம் பேச வேண்டுமென முடிவு செய்த பிறகு தான், தனது குடும்பத்துடன் அவளின் குடும்பத்தை ஒப்பிட்டு பார்த்திருந்தான் அகிலன்.
ஆதினியின் குடும்பம் தற்போது இருப்பது சொந்த வீடு. இன்னொரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்களெனக் கேள்விபட்டிருந்தான். மதுரனும் ஆதினியும் நன்றாகவே சம்பாதிக்கின்றனர். ஆதினியின் தந்தையும் மகிழுந்து வாங்கி விற்கும் தொழிலைச் செய்வதாய் அறிந்திருந்தான். ஆக எவ்வகையில் பார்த்தாலும் அவர்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினர் என்று நன்றாய்ப் புரிந்தது அகிலனுக்கு.
அகிலனின் குடும்பத்தில் அவன் ஒருவனே சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். சிறு தொழில் செய்து கொண்டிருந்த அவனின் தந்தை உடல்நிலை காரணமாய் வேலையை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன.
அவனின் தங்கை மீனாள் ஆடை வடிவமைப்பாளர் படிப்புப் படித்து விட்டு ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். மீனாளும் அகிலனும் இணைந்து அவர்களின் கனவான சொந்த இல்லத்தை வடிவமைத்துக் கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் மீனாளின் திருமணம் நிச்சயிக்கப்பட, அந்த வேலை அப்படியே நின்று விட்டது. மீனாளின் திருமணக் கடன்களை அடைத்து, தற்பொழுது தான் சிறுக சிறுக சேர்த்து அவ்வீட்டு வேலையை மீண்டுமாய்த் தொடங்கி இருக்கிறான் அகிலன். எவ்வகையில் பார்த்தாலும் அகிலனின் குடும்பம் ஆதினியின் குடும்பத்தை விடப் பொருளாதாரத்தில் குறைந்த குடும்பம். இதுவே பெரும் பயத்தை உருவாக்கியது அகிலனுக்கு.
"என் பொண்ணைத் திருமணம் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கு" என்று அவர் கேட்டு விட்டால் என்ன செய்வதென்ற பயம் வந்தது அவனுக்கு.
வீட்டு வேலையேனும் சற்று முடித்துவிட்டு இதைப் பற்றி ஆதினியின் தந்தையிடம் பேசலாமென எண்ணினான்.
இவ்வாறாய் இரு வாரங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு மாலைப் பொழுதில் வீட்டின் வரவேற்பறையில் மத்தியமாய் ஆதினியின் அன்னை, தந்தை மற்றும் மதுரன் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
"ஆதுமா எவ்வளவு நேரமாமா டீ போடுவ?" வரவேற்பறையிலிருந்து குரல் கொடுத்தான் மதுரன்.
"இதோ வந்துட்டேண்ணா" என்றவள் கையில் ஒரு பெரிய தட்டுடன் வந்து நின்றாள். நால்வருக்குமாய் இஞ்சி டீயும் பக்கோடாவும் தயார் செய்திருந்தவள், அவர்களுக்குப் பரிமாறிவிட்டு அவளும் உடன் அமர்ந்தாள்.
"சூப்பரா இருக்குமா டீயும் பக்கோடாவும்" ருசித்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஆதினியின் தந்தை.
"ஆது, மேரேஜ்க்கு உனக்கு எந்த மாதிரி பையன் பார்க்கனும்? உனக்கு மனசுல எதுவும் ஆசை கனவு இருக்கா?" மதுரன் கேட்டதும், திருதிருவென விழித்தாள் ஆதினி.
இருபத்தைந்து வயதான போதிலும் இவளுக்கென்று தனிப்பட்ட ஆசைகளென இதுவரை எதுவும் இருந்ததில்லை. அவளின் ஆசைகள் கனவுகள் அனைத்தும் அந்தக் குடும்பத்திலுள்ள நால்வரைச் சுற்றி மட்டுமே சுழன்றிருந்தன.
இதை மற்றைய மூவரும் அறிந்திருந்த போதும், ஏன் தனது அண்ணன் இவ்வாறு கேட்கிறானென எண்ணியே அவ்வாறு விழித்தாள் ஆதினி.
"ஏன் அண்ணா திடீர்னு இப்படி ஒரு கேள்வி? நான் ஏற்கனவே சொன்னது தான்! உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா அது போதும் எனக்கு" என்றவள்,
"ஆனா ஒரு ஆசை இருக்கு! எந்த மாதிரி வாழ்க்கை வாழனும்னு ஒரு ஆசை இருக்குண்ணா"
"நம்ம அப்பா அம்மா போல ஆதர்ச தம்பதிகளாய் வாழனும்! அப்பா அம்மாவை அன்பா பாசமா காதலா பார்த்துக்கிறது மாதிரி என்னையும் அன்பா காதலா பாதுக்காப்பாய் பார்த்துக்கனும்! அப்பா அம்மாவோட காதலான வாழ்வு போல நம்மளோட வாழ்வும் அமையனும். நீ உன் பொண்டாட்டி, நான் என் புருஷன்… அப்படியே நம்ம குழந்தைகள், அவங்களுக்குள்ள வர்ற பாசம்னு காலங்காலமா தொன்று தொட்டு தொடர்ந்து வரனும்" கண்களில் கனவுகள் மின்ன ஆசை ஆசையாய் ஆதினி கூறிக் கொண்டிருக்க, அவளின் தலையை ஆதூரமாய் வருடினான் மதுரன்.
அவளின் பேச்சைக் கேட்டு அவளின் தாய் மென்மையாய்ச் சிரித்திருக்க, வாய்விட்டுச் சிரித்த அவளின் தந்தை, "என் செல்லம் இவ்ளோ பேசுற அளவுக்கு வளர்ந்துட்டாளானு தோணுது" அவள் கன்னத்தைக் கிள்ளிச் செல்லம் கொஞ்சினார்.
அச்சமயம் அவ்வீட்டின் அழைப்பொலியின் ஓசைக் கேட்க, மதுரன் சென்று கதவைத் திறந்தான்.
"வாங்க அகிலன்" மதுரன் வாசலில் நின்றிருந்த அகிலனைப் பார்த்து மென்னகையுடன் உள்ளே அழைக்க, அனைவருக்கும் வணக்கம் கூறி வந்தமர்ந்தான் அகிலன்.
"நீங்க என்னை தேடி வீட்டிக்கு வந்ததா அப்பா சொன்னாங்க!" மதுரனிடம் அகிலன் கூற,
"ஆமா அகிலன்! ஒரு விஷயம் பேச வந்தேன்" என்ற மதுரன், "ஆதுமா அகிலனுக்கு டீ போட்டு எடுத்துட்டு வா" எனக் கூறி அவளை அனுப்பி விட்டு, அகிலனிடம் பக்கோடாவைக் கொடுத்து, "ஆது செஞ்ச பக்கோடா. நல்லா இருக்கும். சாப்பிட்டுப் பாருங்க" எனக் கொடுத்தான்.
ஆதினி கைப்பக்குவம் அறிந்து கொள்ளவே ஆசையாய் எடுத்து உண்டவன், 'வாவ் செம்ம டேஸ்ட்டா தான் சமைக்கிறா! ஹப்பாடா தப்பிச்சோம்! சாப்பாட்டுக்குப் பிரச்சனை இருக்காது' மனத்திற்குள்ளாக எண்ணிக் கொண்டான் அகிலன்.
"நம்ம அப்பார்ட்மெண்ட்ல நாளைக்கு ஒரு இன்ட்ரொடக்ஷன் ஃபங்ஷன் வைக்கலாம்னு ப்ளான். எல்லா வீட்டுக்காரங்கக் கிட்டயும் நாளைக்குப் ஃபங்ஷன்ல கலந்துக்கச் சொல்லி இன்வைட் செஞ்சாச்சு. நம்ம இரண்டு பேரும் தான் ஹோஸ்ட் பண்றோம் ஓகேவா" என்று மதுரன் கேட்கவும்,
"ஓ சூப்பர் செஞ்சிடலாம்" ஆர்வமாய்ப் பதிலுரைத்தான் அகிலன்.
ஆதினி தேநீர்க் கோப்பையினை அகிலனிடம் கொடுக்க, பெண் பார்க்கும் நேரம் அவள் தன் கையில் தரும் தேநீர்க் கோப்பையாய் அவனின் மனம் அதைப் பாவிக்க, லேசான வெட்கத்துடன் கூடிய புன்சிரிப்புடன் அவளிடம் இருந்து வாங்கியவன் ரசித்து ருசித்துக் குடித்தான்.
அகிலனின் முகப் பாவனையில் கண்டு கொண்ட மதுரன், "அகிலன், நம்ம ஆதினிக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டோம்! உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல பையன் யாராவது இருந்தா சொல்லுங்களேன்" வேண்டுமென்றே கேட்டான்.
மதுரனின் இவ்வார்த்தையில், அருந்திய தேநீர் புரைக்கேற இருமினான் அகிலன்.
'அய்யோ நம்ம வீடு கட்டுறதுக்குள்ளே இந்தப் பொண்ணுக்கு கல்யாணமே செஞ்சி வச்சிடுவாங்க போலயே' அகிலனின் மைண்ட் வாய்ஸில் கதறிக் கொண்டிருக்க,
"என்ன அகிலன் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்க?" அவனை வம்பிழுக்கவென்றே மீண்டுமாய் கேட்டான் மதுரன்.
"அப்பா அவசரமா வரச் சொன்னாங்க! நான் அப்புறமா வந்து பேசுறேன்" எனக் கூறி அனைவரிடமும் விடைப்பெற்று சென்று விட்டான் அகிலன்.
இவர்கள் இருவரின் பேச்சிலும் பார்வையிலும் பாவனையிலும் ஆதினியின் தாய்க்கு அகிலனின் மனம் நன்றாய் புரிந்து போனது.
ஆதினிக்கு ஐம்பது சதவீதம் இப்படி இருக்குமோவென்ற சந்தேகம் வந்திருந்தது. ஆயினும் வீட்டினர் யாரிடமும் அதைப் பற்றி அவள் கேட்கவில்லை. அதைப் பெரிதாய் அவள் கண்டு கொள்ளவுமில்லை. ஆனால் மறுநாள் அவளுக்கு அதை நூறு சதவீதம் உண்மையென ஊர்ஜிதம் செய்தான் அகிலன்.
அன்றைய இரவு அகிலனுக்கு மனத்தின் குழப்பத்தினால் உறங்கா இரவானது.
படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவன், 'ஆதினிக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களே! அவளை வேறொருத்தர் பொண்டாட்டியா பார்க்க முடியுமா என்னால' நினைக்கும் போதே நெஞ்சு பாரமானது போல் உணர்ந்தவன், சட்டென எழுந்து அமர்ந்து விட்டான்.
'ம்ப்ச், இருபத்தேழு வயசுக்கு மேல இந்தக் காதல் வரலைனு யாரு அழுதா? இப்ப இது ஒன் சைட் லவ் ஆச்சுனா லவ் ஃபெய்லியர்னால எப்படியும் ஒன் இயர்க்கு மேரேஜ் பத்தியே மனசு யோசிக்காதே! இவளை மறந்துட்டு வாழ முடியும் தான்! ஆனா அதுக்கு நாள் ஆகுமே! மனசு வலிச்சுப் பைத்தியமா கொஞ்ச நாள் சுத்த வைக்குமே! இதெல்லாம் தாண்டி வரனுமே' மனம் வலிக்க வலிக்கத் தான் இத்தனையும் யோசித்துக் கொண்டிருந்தான் அகிலன்.
என்ன தான் நாம் ஆசைப்பட்டாலும், ஆசைப்பட்டது கிடைக்காமல் போகும் பட்சத்தில் தனது வாழ்வின் நிலை என்னவாகுமென்ற வருங்காலத்திற்கான சிந்தனையும் திட்டமிடலும் தான், வாழ்வில் எத்தகைய தோல்வியைச் சந்தித்த பின்னும், பெரும் ஏமாற்றத்தை சந்தித்த பின்னும், வாழ்வில் தொடர்ந்து பயணிக்கப் பேருதவியாய் இருக்கும்.
'ஏன் அகி நெகடிவ்வாவே யோசிக்கிற' அவனின் மூளை இடித்துரைக்க,
'ஆமா ஏன் முயற்சியே செய்யாம நெகடிவ்வா யோசிச்சிட்டு இருக்கோம்! கொஞ்சம் ப்ரிபேர் பண்ணிட்டு போய் அவங்க அப்பாகிட்ட முதல்ல பேசுவோம். என்ன தான் நடக்குதுனு பார்த்துடலாம்' மனத்திற்குள் எண்ணிக் கொண்டு தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.
மறுநாள் பரபரப்பாய் விடிந்தது அந்தக் காலை. அக்குடியிருப்பு வளாகத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தமையால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர் தன்னார்வ இளையோர்கள்.